தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘’2023 ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வீரர் மகேந்திர சிங் தோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடினர்.
குறிப்பாக நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6-ரன்கள் மற்றும் 4-ரன்கள் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்களுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

