spot_img
More
    முகப்புஅதிகம் வாசிக்கப்பட்டவை"முத்தமிழ்த்தேர்" - அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..?

    “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..?

    “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி, கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது இந்த முத்தமிழ்த்தேர். இறுதியாக சென்னை வந்தடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முத்தமிழ்த்தேர் எப்போது வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து அறிவித்தார்.

    அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.

    கன்னியாகுமரி முக்கோணப் பூங்கா

    அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர்  புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முத்தமிழறிஞர் கலைஞர் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் 04.11.2023 அன்று முக்கோணப்பூங்கா, பழத்தோட்டம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிலும், 05:11.2023 அன்று முதல்  05:12.2023 வரை கீழ்கண்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களிலும் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    மாவட்டம் வாரியாக முத்தமிழ்த்தேர் வருகை

    04.11.2023 -கன்னியாகுமரி
    05:11.2023 – திருநெல்வேலி
    06.11.2023 -தூத்துக்குடி
    07.112023 – விருதுநகர்
    08.11.2023 – தேனி
    09.11.2023 – மதுரை
    10.11.2023 – மதுரை
    11.11.2023 – இராமநாதபுரம்
    12.11.2023 – தீபாவளி விடுமுறை
    13.11.2023- புதுக்கோட்டை
    14.11.2023- சிவகங்கை
    15.11.2023 – நாகப்பட்டினம்
    16.11.2023 – மயிலாடுதுறை
    17.11.2023 – திருவாரூர்
    18.11.2023 – தஞ்சாவூர்
    19.11.2023 – திருச்சிராப்பள்ளி
    20.11.2023 – திண்டுக்கல்
    21.11.2023 – கோயம்புத்தூர்
    22.11.2023 – திருப்பூர்
    23.11.2023 – ஈரோடு
    24.11.2023 – கரூர்
    25.11.2023 – நாமக்கல்
    26.11.2023 – சேலம்
    27.11.2023 – தருமபுரி
    28.11.2023 – கிருஷ்ணகிரி
    29.11.2023 – திருப்பத்தூர்
    30.11.2023 – திருவண்ணாமலை
    01.12.2023 – விழுப்புரம்
    02.12.2023 – செங்கல்பட்டு
    03.12.2023 – காஞ்சிபுரம்
    04.12.2023 – சென்னை

    எனவே, தங்கள் மாவட்டங்களில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகையின் போது பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளம் தலைமுறையினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments