இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மல்யுத்த வீரர்கள் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திய புகைப்படங்கள் நாட்டையே உலுக்கின.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தின் அங்கமாக தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தார்கள்.
இந்நிலையில், 1983-ல் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் கூட்டறிக்கை:
“நமது மல்யுத்த சாம்பியன்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து கவலையும், வேதனையும் அடைந்துள்ளோம். மேலும், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவது குறித்து அவர்கள் சிந்தித்து வருவதும் எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது.

