முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடு கொண்டு வர அரசு முறை பணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மு.க.ஸ்டாலின் இன்று புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.



