Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
’’நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்..!’’ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி; ஜூன் 30 கடைசி நாள் - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்’’நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்..!’’ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி; ஜூன் 30 கடைசி நாள்

    ’’நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்..!’’ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி; ஜூன் 30 கடைசி நாள்

    அனைவருக்கும் இ-சேவை மையம் என்ற திட்டத்தின் கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் இசேவை மையம் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதற்கு ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆபரேட்டர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி என்று மொத்தம் 156 வகையான அரசு சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த இ-சேவை மூலம் விண்ணப்பித்து பெற முடியும். இந்த இ-சேவை மையங்களை முன்பு, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனமே நடத்தி வந்தது. இப்போது, 12-ம் வகுப்பு முத்தவர்களும் சுயதொழில் அடிப்படையில் நடத்த அனுமதிக்கபடுகிறது. இதற்கான அறிவிப்பை தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அறித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் ஆளுமை, ’’அனைவருக்கும் இ-சேவை’’ மையம் திட்டத்தின்கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://tnega.tn.gov.in/ என்ற இணையத்தை பார்க்கவும். விண்ணப்பங்களை 01.06.2023 முதல் 30.06.2023 வரை பதிவு செய்யலாம். கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3000 நகர்புறங்களுக்கு ரூ.6000 செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    “அனைவருக்கும் இ-சேவை” திட்டம்:

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் ஒரு இ-சேவை மையத்தை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். தமிழகத்தின் தொலைதூர எல்லைகளுக்கும் இ-சேவைகளை எடுத்துச் செல்வதன் மூலம் மாநிலம் முழுவதும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் மைய நோக்கமாகும்.

    அதே நேரத்தில் குடிமக்களுக்கு இது ஒரு சாத்தியமான தொழில்முனைவு வாய்ப்பாக அமைகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ -சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள்(PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர்(VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.

    இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (tnesevai.tn.gov.in/) இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்க “அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில்” பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பித்திருந்த தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    மின் ஆளுமை முகமை:

    1.தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இணைய சேவைக்களை இ-சேவை வலைத்தளம் வாயிலாக வழங்கும்.

    2.இ-சேவை அமைக்க அங்கீகரிக்கப்பட்ட ஆபரேட்டர்/விண்ணப்பதாரர்களுக்கு பயனர் ஐடி/கடவுச்சொல் வழங்கப்படும். இதில் பயோமெட்ரிக் இயக்கப்பட்டிருப்பதனால் ஒரு ஆப்ரேட்டர் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளை பயன்படுத்த முடியாது.

    3.ஆபரேட்டர் ஒவ்வொரு முறை வலைத்தளத்தில் உள்நுழையும் போதும் இரண்டு-படி அங்கீகார செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.

    4.தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இ-சேவை வலைத்தளத்தில் கூடுதலாக சேவைகளை தேவைப்படும்போது சேர்க்கலாம்.

    5.பொதுமக்களுக்கு முறையான சேவைகளை உறுதி செய்வதற்காக மையத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் எந்த ஒரு மையத்தையும் ஆய்வு செய்ய .தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அதிகாரிகள் முழு உரிமையுடையவர்கள்.

    6.மேலும் ஏதேனும் குற்றச்சாட்டுகள்/தவறான நடத்தை/ஐடிகளின் தவறான பயன்பாடு போன்றவை நிரூபிக்கப்பட்டால்,தமிழ்நாடு மின் ஆளுமை முகமை-ல் ஐடிகள் ரத்து செய்யப்படும், எதிர்காலத்தில் அதே ஆபரேட்டர்க்கு புதிய ஐடிகள் வழங்கப்படாது.

    7.தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆனது சரியான நேரத்தில் ஆபரேட்டர்களுக்கு தேவையான பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யும்.

    ஆபரேட்டர்கள் :

    1.ஆபரேட்டர்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் ப்ரீபெய்ட் இ-வாலட் மாதிரி(Prepaid ewallet model), ஆதார் பயோமெட்ரிக் உள்நுழைவு, போன்ற வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    2.ஆபரேட்டர்கள் இசேவை மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர், பயோமெட்ரிக் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்.

    3.ஆபரேட்டர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் நல்ல அறிவும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

    4.ஆபரேட்டர்கள் மைய வளாகத்தை நல்ல சூழல் மற்றும் வசதிகளுடன் பொதுமக்களுக்கு சேவைகளை எளிதாக அணுகும் வகையில் பராமரிக்க வேண்டும். காத்திருப்பு இடம், குடிநீர் மற்றும் இதர அடிப்படைத் தேவைகள் இருக்க வேண்டும். மைய கட்டிடம் அல்லது அறையானது CSC மற்றும் அதன் பயனர்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

    5.தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பரிந்துரைத்தபடி வழங்கப்படும், சேவைகள் தொடர்பாக, ஆபரேட்டர்கள் இ-சேவை மையத்தின் பெயர் பலகை மற்றும் சேவைகளை காட்சி பலகை மையத்தில் பொருத்தவேண்டும்.

    6.தமிழ்நாடு மின் ஆளுமை முகமை -ல் தெரிவிக்கப்படும் பெயர் பலகை/ காட்சி பலகை போன்றவற்றுக்கு அனுமதிக்கப்பட்ட விவரக்குறிப்புகள் தவிர வேறு எந்த காட்சி பலகை/லோகோக்கள் அனுமதிக்கப்படாது.

    7.ஆபரேட்டர்கள் பொது மக்களுக்கு அனைத்து சேவைக் கட்டணங்களையும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முக்கியமாகக் காண்பிக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமான சேவைக் கட்டணங்களை வசூலிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    8.ஆப்ரேட்டர்கள் குறைந்தபட்சம் 2 Mbps அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்ய வேண்டும். இதனால் குடிமக்கள் சேவைகளை தடையின்றி பெற முடியும். ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், இணைப்பு மையங்களில் இருக்க வேண்டும்.

    9.மையத்தின் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டு, மையத்தின் முன் காட்சிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒரு நாளில் வேலை நேரம் குறைந்தபட்சம் 8 மணிநேரமாக இருக்க வேண்டும்.

    10.பயனர் ஐடியைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகள்/மாற்றங்களுக்கும் ஆபரேட்டர்கள் மட்டுமே பொறுப்பு.

    11.ஆபரேட்டர்கள் குறிப்பிட்டுள்ளபடி சேவைக் கட்டணங்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

    12.ஆய்வின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அல்லது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை க்கு ஏதேனும் குற்றச்சாட்டுகள் / புகார்கள் வந்தால், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை-ல் இ-சேவை ஐடிகளைத் ரத்து செய்யப்படும் மற்றும் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    13.தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஏற்கனவே உள்ள சேவைகளில் கூடுதல் சேவைகள் சேர்க்கப்படும்போது, தேவைப்பட்டால் கூடுதல் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் / ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    விண்னபிக்க https://tnega.tn.gov.in/ என்ற பக்கத்தில் E-SEVAI FOR ALL என்ற பகுதியில் FOR APPLY என்ற இடத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். முதலில் செல்போன் எண்ணை உள்ளீடு செய்தால் அந்த எண்ணுக்கு ஓடிபி வரும். அதை மீண்டும் உள்ளீடு செய்து இ சேவை மையத்துக்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
    உதவிக்கு: 8925297888, 8925407888, 8925137888, 8925327888

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments