spot_img
More
    முகப்புசெய்திகள்"தமிழ்நாட்டில் 246 உரிமையியல் நீதிபதிகள் ஆள் சேர்ப்பு..!" ஜூன் 30 கடைசி தேதி

    “தமிழ்நாட்டில் 246 உரிமையியல் நீதிபதிகள் ஆள் சேர்ப்பு..!” ஜூன் 30 கடைசி தேதி

    சிவில் நீதிபதிகள் நியமனத்தில் 246 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ம் தேதி கடைசி நாள்.

    இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி 1.6.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு:

    தமிழ்நாடு நீதித்துறை பணியின்கீழ் வரும் சிவில் நீதிபதி (உரிமையியல் நீதிபதிகள்) பதவியில் 246 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கான முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளிலும் நடைபெறும். இத் தேர்வுக்கு புதிதாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சட்ட பட்டதாரிகளுக்கு வயது வரம்பு 22 முதல் 29 வரை. வழக்குரைஞர்களுக்கு 25 முதல் 37 வரை (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments