spot_img
More
    முகப்புசெய்திகள்"சீமான் நன்றி சொன்ன அந்த இருவர்..!"

    “சீமான் நன்றி சொன்ன அந்த இருவர்..!”

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் கணக்கு  மே 31- ம் தேதி முடக்கப்பட்டது. அது, சமூக வலைதளங்களில் பரபரப்பு ஆனது.  இந்நிலையில், டுவிட்டரில் சீமான் ஜூன் 1 -ம் தேதி புதுக்கணக்கை தொடங்கினார். அவரை பலர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில இரண்டு பதிவுகளை போட்டுள்ளார்.

    அதன் விபரம் வருமாறு:

    “கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!

    மறுத்துப் பேசுவதற்கு மறு கருத்தில்லாதவர்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் எதேச்சதிகாரக் கொடுமை கண்டு பொறுக்க வியலா கோபம் தெறிக்கும் பொங்கி எழுந்த எழுத்தைக் கொண்டு விற்போர் புரியும் தமிழ்ச் சொற்கோ கவிப்பேரரசிற்கு அன்பு நிறைந்த நன்றி!

    இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

    சீமான் டுவிட்டர் புதுக்கணக்கை பலர் பின் தொடர்ந்தாலும் டுவிட்டர் உரிமையாளர் எலான் மாஸ்கை மட்டுமே சீமான் பின் தொடர்கிறார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments