Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
”எங்களோடு இருந்தால்தான் அவர்களுக்கு பலம்…!” முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்''எங்களோடு இருந்தால்தான் அவர்களுக்கு பலம்...!'' முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

    ”எங்களோடு இருந்தால்தான் அவர்களுக்கு பலம்…!” முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

    சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    மறைந்த தலைவர், இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடிக்கு மேற்பட்ட தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கின்ற எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்கள்,அம்மா என்று சொல்லும்போது எல்லா சாலைகளும் போயஸ்கார்டன் என்ற வகையிலே இதயதெய்வம் அம்மா அவர்களை முன்னாள் பிரதமர்கள் ,இந்நாள் பிரதமர்கள்,மூத்த பாஜக தலைவர்கள்,தங்களுடைய இல்லத்திலே சந்தித்து வந்துள்ளார்.உலக தலைவர் என்று இன்றைக்கும் அவரின் புகழ் மலை இருந்துகொண்டுள்ளது. ஆனால் இந்த மூன்று வருடம் கத்துக்குட்டியாக இருக்கின்ற அண்ணாமலைக்கு ஒரு வரலாறும் தெரியாது.அதேபோல ஒரு பராம்பரியமும் தெரியாது. தன்னை முன்னிலைப்படுத்திகொள்ளவேண்டும், என்ற ஒரே நோக்கத்தோடு கழகத்தின் மீது, அவ்வப்போது சேற்றை வாரி இறைக்கின்ற செயல் என்பது மிக வன்மையாக கண்டிக்கதக்கது.

    அதுவும் மறைந்த தலைவர் குறித்து ஒரு தனியார் நாழிதழுக்கு அம்மா குறித்து விமர்ச்சனம் செய்வது என்பது மிகவும் வன்மையாக கண்டிக்ககூடிய விஷயமாகும். கழகத்தின் ஒவ்வொரு தொண்டனும் இன்றைக்கு கொதித்துபோய் இருக்கின்ற நிலையை அண்ணாமலை இன்றைக்கு உருவாக்கியுள்ளார். பொதுவாக இதற்கு முன்பாக இருந்த தலைவர்கள் குறிப்பாக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தற்போது ஆளுநராக உள்ள தமிழிசை போன்றவர்கள், முருகன் போன்றவர்கள் அவர்களின் காலகட்டத்தில் எல்லாம் ஒரு தோழமை உணர்வோடு கூட்டணி தர்மத்தை கடைபிடித்து கூட்டணி கட்சியில் இருந்துகொண்டு விமர்சனம் செய்யாமல், கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலே ஒரு ஒற்றுமையாக இருந்த நிலைமை இருந்தது.

    ஆனால், அண்ணாமலையை பொறுத்தவரையில் பொறுப்பேற்ற நாளிலிருந்து தன்னை முன்னிலைப்படுத்திகொண்டு, பிரதானமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு இன்றைக்கு கூட்டணி தர்மத்தை மீறும் செயலாகதான் நிச்சயமாக இதனை நாம் பார்க்க முடியும். பொதுவாகவே இப்படிப்பட்ட விமர்ச்சனங்கள், தொண்டர்கள் மனம் பாதிக்கின்ற வகையில், மறைந்த தலைவர் இதயதெய்வம் அம்மாவை விமர்ச்சனம் செய்வது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். வன்மையாக கண்டிக்கதக்க விஷயமாகதான் ஒவ்வொரு தொண்டனும் கருதுகின்றான். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷா, பாஜக தலைவர் நட்டாவும் உரிய வகையிலே அண்ணாமலையை கண்டிக்கவேண்டும்.

    கூட்டணி தர்மத்தை நாங்கள் கடைபிடித்து வருகின்ற நிலையிலே, அந்த கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறும்போத, அப்போது கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்ற கேள்வி நிச்சயமாக வரும். எனவே இதற்கு பதில் சொல்லக்கூடியவர்கள் உள்துறை அமைச்சர் அமிர்ஷாவும், பாஜக தலைவர் நட்டாவும்தான். கடந்த மூன்று ஆண்டுகளாக அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது கூட்டணி தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைதான் அண்ணாமலையின் செயல் உள்ளது. பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகன், தமிழிசை போன்றோர் தலைவர் என்ற தகுதிக்கு உரியவர்களாக இருந்தார்கள். ஆனால் கிஞ்சித்தும்கூட ஒரு மாநில தலைவருக்கு தகுதி இல்லாதவர்தான் அண்ணாமலை. வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

    நம்முடைய பிரதான எதிரி திமுக. அவர்களை விமர்ச்சனம் செய்வதை விட்டுவிட்டு ஒரு தோழமையை விமர்சசனம் செய்வது என்பது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகதான் இருக்கும் என்று நாங்கள் நிச்சயமாக கருகின்றோம். அண்ணாமலை பேச்சை கழகத்தின் சார்பில் மீண்டும் வன்மையாக கண்டிக்கின்றோம். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. இந்த நிலையில் இவருடைய (அண்ணாலையின் ) செயல்பாட்டை நாம் பார்க்கும்போது பாஜக, கழகம் தொடரக்கூடாது, அதே நேரத்தில் பிரதமராக மோடி வரக்கூடாது என்ற ஒரு நிலையில்தான் இவர் செல்கிறாரா என்றுதான் இவரின் செயல்பாடு தெரிகிறது. அந்த நிலையில்தான் அண்ணாமலையின் பயணம் இன்றைக்கு இருந்துகொண்டுள்ளது.

    தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி இருக்ககூடாது. மோடி பிரதமராக வரக்கூடாது என்பதுதான் அவரின் எண்ணம். அப்படிதானே இவரின் செயல்பாடு உள்ளது. கூட்டணியில் இருந்துகொண்டு விமர்ச்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர் கர்நாடக சென்றார். அங்கு வெற்றி பெற்றதா, இவர் பேகின்ற ராசி அம்போ என்று ஆகிவிட்டது. 40 சதவீத கமிஷன். இதுவரை எந்த அரசும் இதுபோல வாங்கியது கிடையாது. அந்த சங்கமே தெரிவித்தது. ஏன் இது குறித்து அண்ணாலை பேசவேண்டியதுதானே. ஊழல் குறித்து பேசுகின்றார் அல்லவா. கர்நாடக மாநிலத்தில் கமிஷன் தொடர்பாக ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொள்ள சென்றுவிட்டாரே. அந்த அரசு குறித்து பேசுங்கள். 40 சதவீத ஊழல் குறித்து பேசுங்கள்.

    20 வருடம் கழித்து சட்டமன்றத்தில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் உள்ளார்கள் என்றால் அதற்கு யார் காரணம். கழகம்தான் காரணம். இதனை அண்ணாமலை மறுப்பாரா?. தமிழகத்தில் எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான் பாஜகாவுக்கு ஒரு அடையாளம் இருக்கும். அந்த வகையில் ஒரு அடிப்படையான விஷயத்தைக்கூட மறந்து கூட்டணியை முறிக்கின்ற செயலாக அண்ணாமலை ஈடுப்படுகிறார். இதனை அமிர்ஷாவும், நட்டாவும் கண்டிக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய முழுமையான எதிர்பார்ப்பு. இல்லை என்றால் கூட்டணி குறித்து நான் சொல்ல தேவையில்லை. உரிய நேரத்தில் எங்கள் கட்சி முடிவு செய்யும்.

    அண்ணாலையின் பேச்சு எங்கள் கட்சியை விமர்ச்சனம் செய்கின்ற வகையில் தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறு பரீசீலனை செய்யவேண்டிய சூழ்நிலைக்கு எங்களை அகில இந்திய தலைவர்கள் தள்ள மாட்டார்கள். அவர்கள் எங்களுடன் நன்றாக உள்ளார்கள். அகில இந்திய அளவில் அமிர்ஷாவும், நட்டாவும், பிரதமர் மோடியும் எங்கள் கட்சியுடன் நன்றாக உள்ளார்கள். ஆனால் அண்ணாமலை முதிர்ச்சி இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்த கருத்துக்கள் வரும்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது டில்லியில் உள்ள பாஜக தலைவர்கள் கடமை.
    இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

    கேள்வி : நீங்கள் அனைவரும் சமீபத்தில் டெல்லி சென்றீர்கள். அங்கு சமரசம் ஏற்பட்டிருக்கும் என்ற நிலையில் தற்போது இதுபோன்ற நிலை வந்துள்ளதே?

    பதில் : நாங்கள் அங்கு சமரசம் எதுவும் செய்யவில்லை.பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றார். அந்த நேரத்தில் அவரும் இருந்தார். பிரச்சனையை யார் உருவாக்குகிறார்கள் என்பதுதான் முக்கியம். எங்கள் தரப்பிலிருந்து பாஜகாவை விமர்ச்சனம் செய்வது கிடையாது. எங்கள் கட்சியை சீண்டும்போது நாங்கள் அதற்கு பதில் அளிக்கிறோம். எதற்கும் ஒரு எல்லை உள்ளது. இதற்கு மேல் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. வாயை அடக்கிகொண்டு கூட்டணி தர்மத்தை கடைபிடித்தால் நல்லது. இல்லை என்றால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இதனை டில்லியும் உணர்ந்துள்ளது. அண்ணாமலை பேச்சின் மீது அமிர்ஷாவும், நட்டாவும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
    இவர் இப்படி பேசுவது தொடர்பாக அவர்கள் மேலிடத்திற்கு நாங்கள் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.

    அவர் பேசியது வெளிப்படையாக தெரிகிறது இல்லையா. வெளிப்படையாக அம்மா குறித்து விமர்ச்சனம் செய்யும்போது எந்த கழக தொண்டன் தாங்கிக்கொள்ள முடியும். அதன் வெளிப்பாடாக 2 கோடி தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். அவர் ( அண்ணாமலை) அம்மாவை பற்றி விமர்ச்சனம் செய்வார். அவர்களின் கூட்டணி தேவையா என்று தொண்டர்கள் கேள்வி கேட்கின்றார்கள். இந்த குரல் கண்டிப்பாக டெல்லிக்கு கேட்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும். முதல் நடவடிக்கையாக அம்மா குறித்து பேசியதற்கு நாங்கள் கண்டித்துள்ளோம். இதுபோன்ற பேச்சு தொடர்ந்தால் கூட்டணி இருக்கா, இல்லையா என்று முடிவு செய்யவேண்டியது யார். அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

    நட்பு ரீதியாக யாரையும் நாங்கள் இழக்க தயாராக இல்லை. அதற்காக எங்களை விமர்ச்சனம் செய்யும்போது கூட வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு ஒரு எல்லை உண்டு.அந்த எல்லை வரை பார்ப்போம். கூட்டணி குறித்து இறுதி செய்யவேண்டியது தேசிய ஜனநாயக கூட்டணிதான். டெல்லி தலைவர்கள்தான். அண்ணாமலை கிடையாது. டெல்லியில் உள்ளவர்கள் கூட்டணி வேண்டும் என்று நினைக்கிறார்கள். அண்ணாலை கூட்டணி வேண்டாம் என்று நினைக்கிறார். எங்களுடன் இருந்தால்தானே 40 தொகுதி வெற்றிபெற முடியும். கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவேண்டும். மிசா கொடுமையை காங்கிரஸ் கட்சி செய்தது என்று திமுக சொல்லிவருகிறது. ஆனால் அந்த கட்சியோடு கூட்டணியில் உள்ளது.

    ஏதாவது அவர்களுக்குள் விமர்ச்சனம் வருகிறதா, ஆனால் அண்ணாமலை கட்டுசோற்றில் இருக்கின்ற பெருச்சாளி போல நடந்துகொள்கிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே பல விஷயங்களில் அவருக்கு வாய் நீளம். நாக்கு நீளம். வாய் சவடால். நாவடக்கம் கிடையாது. இனி மேல் ஏதாவது பேசினால் கண்டிப்பாக வாங்கி கட்டிக்கொள்வார். இதோடு பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்காகதான் இந்த பேட்டி அளிக்கின்றேன். இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்ககூடாது. இப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு களத்தில் எப்படி வேலை செய்ய முடியும்.

    இவரை பொறுத்தவரையில் எங்களுடன் கூட்டணி வேண்டாம் என்கிறார். மோடி வரக்கூடாது என்கிறார். அவர் வராமல் இருப்பதற்கு என்ன என்ன செய்யவேண்டுமே அத்தனையும் செய்துவருகிறார். உண்மையில் கட்சி வெற்றிபெறவேண்டும் என்றால் எங்களுடன் இணக்கமாக இருக்கவேண்டும்.நாங்கள் செல்வாக்கு பெற்ற மிகப்பெரிய இயக்கம். மரம் எங்கே.செடி எங்கே. அதிமுக ஆலமரம்.பாஜக செடி. கூட்டணியில் இருந்துகொண்டு அம்மாவை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மற்ற கட்சிக்கு சூடு, சொரணை இல்லாமல் இருக்கலாம்.

    நாங்கள் அப்படி கிடையாது. எங்கள் காலை மிதித்தால் மிதிப்போம். கூட்டணியை பொறுத்தவரையில் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. அப்படி என்றால் மாநில தலைவர் கட்டுபடவேண்டும் அல்லவா. தேசிய அளவில் உறுதி செய்யப்பட்டதை நீங்கள் வில்லங்கம் செய்தால் எப்படி?. யாருக்கு துரோகம் செய்கிறீர்கள். மோடிக்குதான் துரோகம் செய்கிறீர்கள். தேசிய தலைமைக்கு எதிராக நடந்தால் தேசிய தலைமைதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர் தனிக்காட்டு ராஜா போல நடந்துகொண்டால் இதனை தேசிய தலைமை கட்டுப்படுத்தவேண்டும் என்று சொல்கிறோம். எங்களோடு இருந்தால்தான் அவர்களுக்கு பலம்.

    இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments