spot_img
More
    முகப்புஆசிரியரின் தேர்வு''இப்போதுதான் புரிகிறதா..?'' வெளுத்து வாங்கிய ’முரசொலி’

    ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’

    ’’இப்போதுதான் புரிகிறதா..?” என்ற தலைப்பில் இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. 

    இந்­தி­யா­வின் முதல் தலைமை அமைச்­சர் ஜவ­ஹர்­லால் நேரு­வைப் பற்றி இன்­றைய தலைமை அமைச்­சர் மோடி அவர்­க­ளுக்கு இப்­போ­து­தான் புரி­கி­றது. பத்­தாண்டு காலம் நேரு எதிர்ப்பு பிரச்­சா­ரத்­தைச் செய்து வந்த மோடி அவர்­கள், புதிய நாடா­ளு­மன்­றத்­துக்­குப் புறப்­ப­டு­ வ­தற்கு முன்­னால் ஆற்­றிய உரை­யில் நேரு­வைப் புகழ்ந்­து­விட்­டார். அதற்­கா­கவே அவரை பாராட்­டத்­தான் வேண்­டும்.

    ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள அமைப்பு இந்­திய வர­லாற்று ஆராய்ச்­சிக் கவுன்­சில். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்த அமைப்பு வெளி­யிட்ட பதா­கை­யில் ஜவ­ஹர்­லால் நேரு­வின் பட­மும் இல்லை, மெள­லானா அபுல் கலாம் ஆசாத் பட­மும் இல்லை. சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் பங்­கெ­டுத்து 9 ஆண்­டு­கள் சிறை­யில் இருந்த நேரு­வின் படமே மறைக்­கப்­பட்­டது. நேரு­வின் பெயரை 2022ஆம் ஆண்டு சுதந்­திர தின உரை­யில் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி குறிப்­பி­ட­வில்லை.

    டெல்­லி­யில் நேரு நினைவு அருங்­காட்­சி­ய­கம் மற்­றும் நூல­கம் இருக்­கி­றது. இதன் பெய­ரையே பிர­த­மர் அருங்­காட்­சி­ய­கம் மற்­றும் நூல­கச் சங்­கம் என்று மாற்றி விட்­டார்­கள். முன்­னாள் பிர­த­மர் லால் பக­தூர் சாஸ்­திரி அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டது இது. இதனை முன்­னாள் துணை குடி­ய­ர­சுத் தலை­வர் ராதா­கி­ருஷ்­ணன் திறந்து வைத்­தார். அத்­த­கைய புக­ழுக்­கு­ரி­யது இது. இதன் பெய­ராக இருந்த நேரு பெயரை கடந்த ஆகஸ்ட் 14 அன்­று­தான் தூக்­கி­னார்­கள்.

    கோவா பிரச்­சி­னை­யில் பிர­த­மர் நேரு சரி­யாக நடந்து கொள்­ள­வில்லை, தனது உல­க­ளா­விய இமேஜை காப்­பாற்­றிக் கொள்­வ­தில்­தான் அக்­கறை செலுத்­தி­னார் என்று நாடா­ளு­மன்­றத்­தில் 2022 பிப்­ரவரி மாதம் பேசி­னார் பிர­த­மர் மோடி.

    “காந்தி, நேரு என குடும்­பப் பெயர்­க­ளில் 600 திட்­டங்­கள் இருந்­த­தா­கச் செய்தி படித்­தேன். அவர்­க­ளு­டைய தலை­மு­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் ஏன் நேரு­வின் பெயரை குடும்­பப் பெய­ராக வைப்­பது இல்லை? நேரு­வின் பெயரை எங்­கா­வது நாங்­கள் குறிப்­பிட மறந்­து­விட்­டால் காங்­கி­ர­சார் அப்­செட் ஆகி­றார்­கள். நேரு மிகப்­பெ­ரிய

    மனி­தர். பிறகு ஏன் அவ­ரது பெயரை யாரும் குடும்­பப் பெய­ரா­கப் பயன்­படுத்­து­வது இல்லை? நேரு பெயரை பயன்­ப­டுத்­து­வ­தில் உங்­களுக்கு என்ன அவ­மா­னம்? பயம்?” என்று கடந்த பிப்­ர­வரி மாதம் மாநி­லங்­கள­வை­யில் பேசி­னார் பிர­த­மர் மோடி.

    பெரோஸ் காந்தி –- என்ற பெயரை வைத்தே இந்­திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி எனச் சொல்­லப்­பட்­டது. இதனை தான் ‘நேரு’ என்று ஏன் வைக்­க­வில்லை என்று நாடா­ளு­மன்­றத்­தில் கேட்­டார் பிரத­மர்.

    காஷ்­மீர் விவ­கா­ரத்­தில் நேரு சரி­யாக நடந்து கொள்­ள­வில்லை என்று விமர்­சித்­தார் ( 2022 அக்­டோ­பர்) பிர­த­மர் நேரு­வுக்­கும் இந்­திய ஜன­நா­ய­கத்­துக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை என்று (2018 பிப்­ர­வரி) நாடா­ளு­மன்­றத்­தி­லேயே குற்­றம் சாட்­டி­னார் பிர­த­மர் மோடி. இப்­படி எல்­லாம் தொடர்ந்து நேருவை அவ­மா­னப்­ப­டுத்தி வந்­த­வர் தான் பிர­த­மர் மோடி. ஆனால் இப்­போது நாக்கை அப்­ப­டியே திருப்­பிப் போட்­டு­விட்­டார்.” ‘உல­கம் உறங்­கிக் கொண்­டி­ருக்­கும் போது இந்­தி­யாவே விழித்­துக் கொண்­டி­ருக்­கி­றது’ என்ற பிர­த­மர் நேரு­வின் பேச்சு தான் உல­க­மெங்­கும் பெரும் பாராட்­டைப் பெற்­றது. அந்­தப் பேச்சு தற்­போது நமக்கு உற்­சா­கத்தை அளிக்­கி­றது” என்று சொல்லி இருக்­கிறார் பிர­த­மர் மோடி. நேரு,சாஸ்­திரி, இந்­திரா, நர­சிம்­ம­ராவ், வாஜ்­பாய் என்று பல்­வேறு பிர­த­மர்­கள் தங்­கள் சிறப்­பான தலை­மையை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள் என்­றும் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

    இந்­திரா காந்தி காலத்­தில் வங்க தேசம் உரு­வா­ன­தை­யும் நினை­வூட்டி இருக்­கி­றார் பிர­த­மர். இரா­ஜேந்­திர பிர­சாத், அண்­ணல் அம்­பேத்­கர், மாவீ­ரன் பகத்­சிங் ஆகி­யோ­ரை­யும் நினைவு கூர்ந்­துள்­ளார் பிர­த­மர்.

    இந்­திய நாடா­ளு­மன்ற ஜன­நா­யக வர­லாற்றை இப்­போ­து­தான் அவர் படிக்க ஆரம்­பித்து பேசு­கி­றார் என்­பதை இதன் மூல­மாக உணர முடி­கி­றது. இதற்கே ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டது!

    ஒன்­பது ஆண்­டு­கள் -– ஒன்­பது முறை –- ஒன்­பது சிறை­க­ளில் இந்­தி­யா­வின் விடு­த­லைக்­காக அடைக்­கப்­பட்டு இருந்­த­வர் நேரு. ‘என்­னு­டைய அர­சி­யல் வாரிசு நேரு­தான்’ என்று காந்தி சொன்­னார். ‘விடு­தலை பெற்ற இந்­தி­யா­வின் தலைமை மகு­டம் நேரு­வுக்­குத்­தான் போக­வேண்­டும், ஏனென்­றால் அவர்­தான் முழு­மை­யான இந்­தி­யர்’ என்­றும் காந்தி சொன்­னார். அத்­த­கைய ஆட்­சியை தான் நேரு­வும் வழங்­கி­னார்.
    பல்­வேறு மொழி பேசும் மக்­கள் ஒற்­று­மை­யாக வாழ மொழி வாரி மாகா­ணங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார். இந்தி பேசாத மக்­கள் விரும்­பும் வரை இந்தி அவர்­கள் மீது திணிக்­கப்­பட மாட்­டாது என்று உறுதி அளித்­தார். ஐந்­தாண்­டுத் திட்­டங்­க­ளைக் கொண்­டு­வந்து -– அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் பல்­வேறு திட்­டங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார். வறுமை ஒழிப்­புத் திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­னார். அனைத்து மாநி­லங்­க­ளி­லும் பொதுத்­துறை நிறு­வ­னங்­களை உரு­வாக்­கித் தந்­தார். மதச்­சார்­பற்ற மனி­த­ராக அவர் இருந்­தார். சகோ­த­ரத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­னார். நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தார். அனைத்து தரப்­பும் விவா­தம் செய்­யும் கள­மாக நாடா­ளு­மன்­றத்தை நடத்­திக் காட்­டி­னார். மதச்­சார்­பின்­மை­யின் இலக்­க­ண­மா­கத் திகழ்ந்­தார். கூட்­டாட்சி நெறி­மு­றை­களை அவர் அடிக்­கடி பேசி­னார். அணி­சே­ராக் கொள்­கையை கடைப்­பி­டித்­தார். அத­னால் உல­கத் தலை­வர்­கள் அனை­வ­ரும் அவரை வணங்­கி­னார்­கள்.

    இத்­த­கைய நேரு­வின் பெரு­மையை மறைக்­கப் பார்த்­தார்­கள். முடி­ய­வில்லை. பாராட்­டத் தொடங்­கி­விட்­டார்­கள். நல்ல மாற்­றம் தான்!

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments