spot_img
More
    முகப்புசெய்திகள்’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு

    ’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் நீக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தினை மறுமலர்ச்சி தி.மு.கழகம் 20.06.2023 முதல் 20.07.2023 வரை நடத்துகிறது.

    மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை:

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

    தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம்.

    உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி வருவதும், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்த்த ஜி.யு.போப்பை விமர்சனம் செய்வதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாடிக்கை.

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், 45 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய பெருமைக்குரியவர் ஆர்.என்.ரவி அவர்கள். ஆளுநரை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே அவசர அவசரமாக ஒப்புதல் அளித்தார்.

    இப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டி புதைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகின்றார். தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஒன்றிய அரசின் ஏஜெண்ட் போல அவர் நடந்து கொள்வதும், தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மைக்கு எதிரானது ஆகும்.

    கடந்த 14.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் நீக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தினை மறுமலர்ச்சி தி.மு.கழகம் 20.06.2023 முதல் 20.07.2023 வரை நடத்திட உள்ளது.

    நம் வலிமையை நாட்டுக்கு உணர்த்தவும், வெகுஜன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள் கையெழுத்து இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
    கழக மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட அமைப்புகளும் ஆர்வமுடன் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    வருகின்ற 20.06.2023 அன்று தென்செனையில் மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்தினை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.

    கழகத் தோழர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கழக கொடியுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஊடகங்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக பங்கேற்பது அவசியமானது ஆகும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments