spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி

    ’’அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது..!’’ கே.எஸ்.அழகிரி

    ’’நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை. சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது’’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­:

    தமி­ழக பா.ஜ.க. தலை­வர் அண்­ணா­மலை கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பல கட்­டங்­க­ளாக விட்­டு­விட்டு பாத யாத்­திரை மேற்­கொண்டு வரு­கி­றார். பெரும் பணத்தை செலவு செய்து கட்­சி­யி­னரை திரட்டி, குறிப்­பிட்ட நகர வீதி­க­ளில் அந்­தப் பாத யாத்­திரை நடை­பெற்று வரு­கி­றது. இதில் உரை­யாற்­று­கிற அண்­ணா­மலை, ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­கிற மம­தை­யில் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு சர்ச்­சைக்­கு­ரிய விஷ­மத்­த­ன­மான கருத்­து­களை கூறி வரு­கி­றார். தமி­ழ­கத்­தின் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­பட்ட தந்தை பெரி­யார், காம­ரா­ஜர், கலை­ஞர் ஆகி­யோர் குறித்து மிக மிக இழி­வான ஆட்­சே­ப­னைக்­கு­ரிய கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­கி­றார்.

    இவ­ரைப் போல இழி­வாக கருத்­துக் கூறி­ய­வர்­கள் கடந்த காலங்­க­ளில் வர­லாற்­றி­லி­ருந்து துடைத்­தெ­றி­ய ப்­பட்­டது திடீர் அர­சி­யல்­வா­தி­யான அண்­ணா­மலை அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அண்­ணா­ம­லையை பொறுத்­த­வரை ஆட்­டைக்­க­டித்து, மாட்டை கடித்து தற்­போது மனி­தனை கடிக்க வந்­தி­ருக்­கி­றார்.

    தமி­ழ­கத்­தில் ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளாக ஊறிப் போன சமூக அடக்­கு­மு­றை­களை, அநீ­தி­களை, சாதிய ஏற்­றத் தாழ்­வு­களை, தீண்­டாமை கொடு­மை­களை துடைத்­தெ­றி­வ­தற்­காக தமது வாழ்­நாள் முழு­வ­தை­யும் அர்ப்­ப­ணித்­துக் கொண்டு தமிழ்ச் சமு­தா­யத்­தின் முன்­னேற்­றத்­திற்­காக பாடு­பட்ட அற்­பு­த­மான தலை­வர் தந்தை பெரி­யார். கட­வுள் மறுப்பு கொள்­கையை பகுத்­த­றி­வின் அடிப்­ப­டை­யில் மூட­நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ராக தந்தை பெரி­யார் பரப்­புரை மேற்­கொண்டு வந்­தார். இதில் மாற்­றுக்­க­ருத்து கூறு­வ­தற்கு அனை­வ­ருக்­கும் உரிமை உண்டு.

    ஆனால், அண்­ணா­ம­லை­யைப் போல நாக­ரீ­க­மற்ற முறை­யில் பெரி­யாரை விமர்­ச­னம் செய்­தது கிடை­யாது. ரங்­கம் கோயி­லுக்கு முன்­புள்ள பெரி­யார் சிலையை அகற்­று­வது தான் நோக்­கம் என்று கூறு­கி­றார். நாடா­ளு­மன்ற மைய மண்­ட­பத்­தில் மகாத்மா காந்தி படு­கொ­லை­யில் குற்­ற­வா­ளி­யான சாவர்க்­கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்­த­தற்கு கடு­மை­யான விமர்­ச­னம் எழுந்­தது. ஆனால், அந்­தப் படத்தை அகற்ற வேண்­டு­மென்று கோரி எவ­ரும் போராட்­டம் நடத்த முன்­வ­ர­வில்லை.

    காந்­தி­ய­டி­களை கொன்ற கோட்­சேவை தியாகி என்று பிரக்­யா­சிங் தாகூர் கூறி­ய­தற்­காக பா.ஜ. அவர் மீது நட­வ­டிக்கை எடுத்­ததா? இந்­திய விடு­த­லை­யைப் பெற்­றுத் தந்த மகாத்மா காந்­தியை இழி­வு­ப­டுத்­து­கிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்­டனை கொடுப்­பது ? இதற்­கெல்­லாம் அண்­ணா­மலை விளக்­கம் கூறு­வாரா? சமூ­க­நீ­தியை பாது­காத்த பெரியாரையும், காம­ரா­ஜ­ரை­யும் இழி­வு­ப­டுத்­து­கிற அண்­ணா­ம­லையை தமிழ்ச் சமு­தா­யம் என்­றைக்­கும் மன்­னிக்­காது.

    இத்­த­கைய அரு­வெ­றுக்­கத்­தக்க அநா­க­ரீக பேச்­சு­க­ளி­னால் பா.ஜ. குழி­தோண்டி புதைக்­கப்­ப­டு­வது உறுதி. தமி­ழக அர­சி­யல் வர­லாற்­றில் இவர்­க­ளது பங்­க­ளிப்பை வரலாற்று நூல்­கள் மூலம் அறிந்து கொண்டு பேசு­வது நல்­லது.

    இத்­த­கைய பேச்­சு­க­ளி­னால் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டப்­போ­வது அண்­ணா­மலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில்39 தொகு­தி­க­ளி­லும் டெபா­சிட் இழக்­கவே அண்­ணா­ம­லை­யின் பேச்­சு­கள் உத­வப் போகி­றது. எனவே, தமி­ழக மக்­க­ளின் கோபத்­திற்­கும், வெறுப்­புக்­கும் அண்­ணா­மலை ஆளா­வதை எவ­ரா­லும் தடுக்க முடி­யாது.

    இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments