spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்புகுடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.7500 ஊக்கத்தொகை அமைச்சர் உதயநிதி வழங்கினார்

    குடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.7500 ஊக்கத்தொகை அமைச்சர் உதயநிதி வழங்கினார்

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் திறன் இடைவெளியைக் குறைப்பதும், ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை கட்டணமில்லாமல் வழங்குவதும் இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

    UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு

    இந்நிலையில் 2023-24க்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலை தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,500 வீதம், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.

    கல்வி ஊக்கத்தொகை

    இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் 12.06.2023 அன்று வெளியான நிலையில் அதில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, இதுவரை 435 மாணவர்களுக்கு தலா ரூ.25000 வீதம் ரூ.1,08,75,000 (ரூபாய் ஒரு கோடியே எட்டு லட்சத்து எழுபத்தையாயிரம்) முதன்மைத் தேர்வுக்கு தயாராவதற்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையானது, மாணவர்களை தேர்வுக்குத் தயாராகும் செலவீனங்களிலிருந்து விடுவித்து, தேர்வின் அடுத்தடுத்த நிலைகளை வெற்றிகொள்ள ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாததிற்கு ரூ.7500

    கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி போட்டித்தேர்வு பிரிவால் நடத்தப்பட்ட ஒன்றிய அரசின் முதல்நிலை தேர்வுக்கான உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு (UPSC Prelims Scholarship Exam) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 52,225 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 32,638 மாணவர்கள் ஊக்கத்தொகைக்கான தேர்வை எழுதினர். அத்தேர்வில் தேர்வான 1000 மாணவர்களுக்கு இனி வரும் 10 மாததிற்கு ரூ.7500 வீதம் என ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.

    1000 மாணவர்

    இதன் தொடர்ச்சியாக, UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது கடந்த 10.09.2023 அன்று அரசு தேர்வுகள் இயக்ககம், நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகள் 27.09.2023 அன்று வெளியான நிலையில், 7.10.2023 முதல் 10.10.2023 வரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று (14.10.2023), சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

    அமைச்சர் உதயநிதி

    குடிமைப் பணிகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களை செலவுகளின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் இத்திட்டமானது சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வருவதால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவுக்கு தலைமை வகித்து, மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொதைக்கான வரைவோலையினை வழங்கினார்.

    குறிப்பு: தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்வது, ஊக்கத்தொகை பெறுவது, பாடம் படிப்பது தொடர்பாக https://www.civilservicecoaching.com/ என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments