தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்து நாளை காலை வீடு திரும்புவர் என தகவல் வெளியாகியுள்ளது.
உடல் சோர்வு மற்றும் வழக்கமான பரிசோதனை முதல் அமைச்சருக்கு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் அமைச்சர் அப்பல்லோ மருத்துவமனை வந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

