spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா''பேசத் தொடங்கியதற்கே இத்தனை கூப்பாடா..?'' தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்

    ”பேசத் தொடங்கியதற்கே இத்தனை கூப்பாடா..?” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைத் திரித்து அவர் மீது அவதூறு பரப்புவோருக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:

    உதயநிதி ஸ்டாலின் ஆற் றிய உரை உள்ளிட்டு மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் காணொலியாக சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கிறது. அவற்றை காணும் எவரொருவரும் இந்த மாநாட்டின் எந்தவொரு நிகழ்வும், யாருடைய உரையும் குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ எதிராக அல்லாமல், பிறப்பின் அடிப்படையில் மக்க ளைப் பாகுபடுத்தி ஒடுக்கி வரும் சனாதனக் கருத்தியலை ஒழிக்க வேண்டும் என்றே அமைந்திருக்கிறது என்பதை உணரமுடியும். மாநாட்டில், ஆன்மீகப்பற்று டைய அய்யா சத்தியவேல் முருகனார், இறை நம்பிக்கைக்கும் சனாதனத்துக்கும் எந்த தொடர்பு மில்லை என்று பேசியதுடன் சனா தனம் இழைத்த அநீதிகளை எடுத்து ரைத்தார். கர்நாடகத்தில் இயங்கி வரும் தேவதாசி ஒழிப்புச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாலம்மா, சிறுமிகள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டு பாலியல் சுரண் டலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவதற்கு அடிப்படையாக உள்ள சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கள அனுபவத்திலிருந்து ஆவேசமாக எடுத்துரைத் தார்.

    இவர்கள் பேசியதற்கெல்லாம் பதில் சொல்ல இயலாத பாஜக வினர், சனாதனக் கருத்தியலை ஒழிக்கவேண்டும் என்று உதயநிதி பேசியதை, ‘‘சனாதனத்தைப் பின் பற்றும் மக்களை ஒழிக்க வேண்டும்’’ என்று அவர் பேசிய தாக திரித்து அரசியல் ஆதாயத் திற்காக மோசடிப்பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த மோசடியையே ஆதார மாக வைத்துக்கொண்டு தில்லியிலும் பீகாரிலும் அவர் மீது புகா ரளித்துள்ளனர். அவர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கொக்கரிக்கின்றனர். இதற்கெல்லாம் பயந்து சனாதன ஒழிப்புப் பற்றி தான் தெரிவித்த கருத்தினை திரும்பப்பெறப் போவதில்லை என்று உறுதிபட அறிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமுஎகச பாராட்டு தல்களை தெரிவித்துக் கொள்கிறது.

    அலைபேசி மூலமாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் தனக்கு வரும் மிரட்டல்களைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று சனாதன ஒழிப்பில் தனக்குள்ள உறு திப்பாட்டை வெளிப்படுத்திவரும் தமுஎகச மாநிலத் துணைத்தலை வரும் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான திரைக்கலைஞர் ரோஹிணி அவர்களுக்கும் பாராட்டுகள். சனாதன ஒழிப்பு என்று பேசத் தொடங்கியதற்கே சனாதனவாதிகளின் மனம் புண்பட்டுவிட்டது என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு, சனாதனத்தினால் தலை முறை தலைமுறையாக அநீதிக்காளாகியிருக்கும் கோடானுகோடி மக்களின் குமுறலில் இருந்தே ‘சனாதனம் ஒழிக’ என்கிற முழக்கம் உயிர்த்தெழுந்துள்ளது என்கிற உண்மையை உணர்த்தும் பணியை தமுஎகச தொடர்ந்து மேற்கொள்ளும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments