மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக பிரவீன் சூட் மே 25- ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
1986-ம் ஆண்டு கர்நாடகா பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், மைசூர், பெங்களூரு நகரங்களில் காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் 37 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக பொறுப்பேற்பதற்கு முன்பு கர்நாடக மாநில காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) அவர் பொறுப்பு வகித்து வந்தார்.

