இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது முகாநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை மாவட்டத்தில் மத்திய பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டப்பணிகளை தொடங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். முதற்கட்டமாக கூவம்-அடையாறு இடையேயான 2.9 கி.மீ தூரத்துக்கு மறுசீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி நிதித்துறை, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர்கள், வீட்டுவசதி & நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர், சென்னை பெருநகர ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் & அலுவலர்களுடன் ஆலோசித்தோம்” என்று கூறியுள்ளார்
”பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணி” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!
சென்னை மாவட்டத்தில் மத்திய பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
RELATED ARTICLES

