”அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவேண்டிய ஆளுநர் தன்னிச் சையாக நடப்பதை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்று திரளவேண்டும். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுவர் என்பது உறுதி” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை:
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என்.ரவிஒன்றிய டில்லி அரசால் நிய மிக்கப்பட்டவர்அவர் பதவியேற்ற நாள்முதல் இன்றுவரை அரசமைப்புச் சட்டப்படி தாம் ஏற்ற பதவிப் பிரமாணத்திற்கு எதிராகவும் ஓர் ஆர்.எஸ்.எஸ். சனாதனியாகவும் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி நடத்தி வருவதோடு, தமிழ்நாடு அரசின் எதிர்க்கட்சித் தலைவராகவே தம்மை பாவித்து, முற்றிலும் விரும்பத்தகாத வகையில், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போட்டி அரசு ஒன்றினை தனது ராஜ்பவன் நடவடிக்கைகள்மூலம் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி வருகிறார்
ஏற்கெனவே கடந்த ஆண்டு (2022) ஏப்ரலில் பேரறிவாளன் வழக்கில் இவரது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பகிரங்கமாகவே தனது கண் டனத்தைத் தெரிவித்து, கருத்துரையைப் பதிவு செய்தது – தீர்ப்பின்மூலம்.
‘‘மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்; தனித்த கண்ணோட் டத்துடன் செயல்பட முடியாது” எனத் தெளி வாகக் குறிப்பிட்டது.
அதற்குப் பிறகு ‘‘ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் ஓர் அங்கம் என்பதை அரசமைப்புச் சட்டம் 163(1) கூறு தெளிவுபடுத்து கிறது; அதன்படிதான் அவர்கள் கடமையாற்ற முடியும்” என்றும் மேலும் சில வழக்குகளில் அண்மையில் இவ்வாறான பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளன!
ஆனால், இங்குள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதோடு, ஆளுநர் மாளிகையை சனாதன சத்சங்க பிரச்சார அலுவலகம்போல ஆக்கியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு விரோதமான கருத்துகளை – சட்டம் ஒழுங்குப் பிரச்சினையானாலும், சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை மணம்பற்றியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் போன்று வெளிநடப்புச் செய்து அப்பதவியின் மாண்பையே சீர்குலைத்தார்.
நேற்று (5.6.2023) ஒரு செய்தி – ராஜ் பவனிலிருந்து வந்துள்ளது5 லட்சம்-பாராட்டு சான்றிதழ் – ‘‘சமூக சேவ கர்களுக்கான கவர்னர் விருது” – விண்ணப்பிக்க ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள்.தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளை தக்கவர்களை அடையாளம் கண்டு கொடுத்து வருகிறது – பல ஆண்டுகளாக.அதற்குப் ‘போட்டி’யாகவோ அல்லது தனக்குத் தனி விளம்பரம் தேடவோ இப்படி ஒரு முயற்சியா? நாட்டில் நடப்பது கவர்னர் ஆட்சியா? புரியவில்லை
அரசமைப்புச் சட்டப்படி,தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்துதானே இவருடைய ஊதியம் – மற்றச் செலவுகள் வழங்கப்படுகின்றனநிறுவனங்களுக்கு ரூ.3 லட்சமும், தனி நபர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்குவாராம் – அறிவிப்பு நேற்று வந்துள்ளதுதமிழ்நாடு அரசுக்கு எதிராக இப்படி ஒரு ‘‘போட்டி அரசு” நடத்துகிறார்!
அரசின் கொள்கை முடிவுகளுக்கு (Policy Decisions) எதிராக பகிரங்கமாகப் பேசி, சர்ச்சை களை வளர்த்து வருவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுகிறார்சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதக்களை – சட்ட வரைவுகளை – மாதக் கணக்கில் நிலுவையில் போட்டு வைத்து அரசுடன் ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை நடத்துகிறார்
தமிழ்நாட்டை தொழில்மயமாக்கி, இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பெருக்கி, தமிழ் நாட்டை வளப்படுத்த வளர்ச்சியடையச் செய்ய வெளிநாட்டு முதலீட்டார்களைச் சந்தித்து அழைக்க முதலமைச்சர் தனது குழுவின ருடன் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று முதலீடுகளைப் பெற்றுவந்துள்ள நிலையில், அதனைக் கொச்சைப்படுத்துவதுபோல, அதற்கு எதிராக 4.6.2023உதகமண்டலத்தில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை அழைத்துப் பேசியபோது சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில்,‘‘வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்” என்று நையாண்டி செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? சம்பந்தா சம்பந்தமில்லாதது இது.
வன்மையான கண்டனத்திற்குரிய ஆளுநரின் இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத பேச்சுக்கும், செயலுக்கும் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுவர் என்பது உறுதி இதுபற்றி தமிழ்நாட்டு அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த பதில் நடவடிக் கையை விரைவில் அறிவிப்பது காலத்தின் கட்டாயமாகும்

