தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக எஸ்.புகழேந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில், எஸ்.புகழேந்தி தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக 04.07.2023 பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன். குமார், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், வாரிய உறுப்பினர்கள் வெ. கலைநேசன், இரா. முருகானந்தம், தகி. இராமசாமி,
தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரிய செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய செயலாளர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

