சுதந்திர தினத்தன்று வீட்டில் தேசிய கொடி ஏற்றவும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
” மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அனைவரும் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ஆகஸ்ட் – 15 சுதந்திர தினத்தன்று வீட்டில் தேசிய கொடி ஏற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சி மூலம் சுதந்திர தினத்திற்கு முன்பு ‘என் தாய் என் தேசம்’ என்ற பெயரில் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் மிகப்பெரிய பிரசாரம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் அவர்களின் நினைவாக லட்சக்கணக்கான கிராம ஊராட்சிகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார் .
மேலும் அமுத கலச யாத்திரை நடத்தப்பட்டு 7 ஆயிரத்து 500 கலசங்களில் மண் மற்றும் மரக்கன்றுகள் சேகரிக்கப்பட்டு போர் நினைவு சின்னம் அருகே அமுததோட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
– கோ. தீபா புவனேஸ்வரி

