கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து செல்லும் மகாராஜாவுக்கு கனிமொழி எம்.பி., வாழ்த்து தெரிவித்தார்.
துத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 2-ம் ட்தேதி இன்று எத்திலப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ‘மக்கள் களம்’ நிகழ்ச்சியின் போது, பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள திரு.மகாராஜா அவர்களைச் சந்தித்தேன்.


தூத்துக்குடி – கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த மகாராஜா அவர்கள், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் IBSA உலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் சாதிக்கத் துடிக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள்!

