ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர்.
ஹாலிவுட்டின் திரைமொழியை தனது அழகினால், உலகின் மூலைமுடுக்கில் உள்ள திரையரங்குகளுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமையை உடையவர்.
தனது சின்னஞ்சிறு வயதில வறுமையின் கொடூரத்தை விரட்ட நிர்வாணப்படங்களுக்கு போஸ் கொடுத்து விரட்டியவர்.
அனாதை இல்லமே கதி என்றவருக்கு உலக மக்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தது மிகப்பெரிய அதிசயம்.
தனது வேல் விழியால் பல இளம் நெஞ்சங்களின் இதயத்துள் நுழைந்து வீழ்த்தியவர்.
“பீப்பிள்” பத்திரிக்கை இவரை கொண்டாடி தீர்த்தது. அதன்படி, “20-ஆம் நூற்றாண்டின் மிகவும் கவர்ச்சியான பெண் அறிவிக்கப்பட்டவர்.
அதிகமான விளம்பரங்களால் விளம்பரப்படுத்தப்பட்டவர் எனும் பெருமைக்குரியவர்.
திருமணவாழ்வு நல்லபடியாக அமைந்தும் மணமுறிவால் பறிபோனவர்.
காற்றில் தனது ஆடை பறக்காமல் இவர் பிடித்துக்கொள்ளும் காட்சி மிகப் பிரபலமானது. பல்லாயிரம் லட்சக்கணக்கான இதயங்களை நொறுங்கச்செய்த படம். ‘தி செவன் இயர் இட்ச்’ படத்தில் எடுக்கப்பட்டது. இளைஞர்களின் இதயத்தை அந்தப்படத்தால் நசுக்கியவர்.
இவர் மரணம் கொடூரமானது. இன்று வரை கண்டறியப்படவில்லை. தனது படுக்கையறையில் மர்ரமமாக கொலை செய்யப்பட்டுக்கிடந்தார் என வரலாறு பதிவு செய்திருக்கிறது….!
இப்படி அவர் மறைந்தாலும் இன்னும் ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர்
“மர்லின் மன்றோ”!
அவரின் நினைவு தினம் இன்று!

