“ஒற்றை ஆளாய் நின்று வெற்றி கண்ட தலைவன்..!” ராகுல்காந்திக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்

"வஞ்சகம், வன்முறை, துவேஷம், பொய் அனைத்தையும் ஒற்றை ஆளாய் களத்தில் நின்று வெற்றி கண்ட தலைவருக்கு பாராட்டு" என்று ராகுல் காந்தியை பாராட்டி ட்விட் செய்துள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

0
65

காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ‘ட்வீட்’ வருமாறு:

“வெறுப்பு அரசியலை வெட்டி வீழ்த்தி, வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் முன்னிறுத்தும் சமூக நல்லிணக்க அரசியலை ஆரத்தழுவி அணைத்துக்கொண்ட கர்நாடக வாக்காளர்களுக்கு 140 கோடி இந்தியர்களின் நெஞ்சார்ந்த நன்றி.

வஞ்சகம், வன்முறை, துவேஷம், பொய் அனைத்தையும் ஒற்றை ஆளாய் களத்தில் நின்று வெற்றி கண்ட தலைவருக்கு பாராட்டு” என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்