acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’சேலம் மாநகராட்சியில் அதிரடி கவுன்சிலர்..!’’ உடனுக்குடன் சரி செய்ய புது டெக்னிக் first appeared on Madras Murasu.
]]>ஈசன் இளங்கோ, ( 34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்) வாட்ஸ் அப் தகவல்கள் அப்படியே..!
வணக்கம் ,
நம்முடைய 34-கோட்டத்தில், மாநகராட்சி பணிகள் குறித்த சேவைகள் விரைவில் நடக்க அதற்கு உடனடி தீர்வு காண… உங்களுக்கு உதவிட கீழ்கண்ட தகவல்களை அனுப்பி உள்ளேன். நன்றி!
சாக்கடை அடைப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் குப்பைகள் குறித்த சேவை, மற்றும் தீர்வுகளுக்கு தொடர்பு எண்..
97892 47285
திரு.அ.வெங்கடேசன். அவர்கள்
34-வது கோட்ட துப்புரவு மேற்பார்வையாளர்.
குடிநீர் குழாய் அடைப்பு மற்றும் உடைப்பு மற்றும் குடி நீர் விநியோகம் குறித்த சேவை, மற்றும் தீர்வுகளுக்கு தொடர்பு எண்.
+91 93612 23441
திரு.குமார் அவர்கள்
குடிநீர் குழாய் பொருத்துனர்.
34- வது கோட்டம்
ஆழ்துளை குழாய் மற்றும் சிண்டெக்ஸ் டேங்க் மின் மோட்டார் குறித்த சேவை, மற்றும் தீர்வுகளுக்கு தொடர்பு எண்..
99429 23257
திரு.பழனிவேல். அவர்கள்
எலக்ட்ரீசியன்,
அம்மாப்பேட்டை மண்டலம்.
தெரு விளக்குகள் எரியாமைக்கு அந்த மின்விளக்கு கம்ப எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உடணடி தீர்வு காண.. ; ஆகாஷ் நிறுவன பொறுப்பாளர்கள் எண்கள்:
1). 99940 50107
திரு.பெருமாள் அவர்கள்
2).88071 67031
திரு.ஆறுமுகம் அவர்கள்
3). 98941 57626
திரு.கோபிநாத் அவர்கள்
சொத்து வரி, குடி நீர் கட்டணம் இதர மாநகராட்சி வரிகளை செலுத்த
+91 97901 86822
திரு.முகமது யாசின் அவர்கள்
34- வது கோட்ட வரி வசூலிப்பாளர்
பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் அதை சார்ந்த சேவைகளுக்கு..
+91 95008 83217
திரு.பிரகாஷ் . அவர்கள்
உதவி பொறியாளர்.
அம்மாப்பேட்டை மண்டலம்.
தெருவிளக்கு , பாதாள சாக்கடை, குடிநீர் வினியோகம், உள்ளிட்ட 34- வது கோட்ட மாநகராட்சி சம்மந்தப்பட்ட தீர்வுகளுக்கு 24X7 அம்மாப்பேட்டை மண்டல கட்டுப்பாட்டு அறை புகார் அளிக்கும் எண்கள்,
0427-2267444
0427-2263161
ஈசன் இளங்கோ.
34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
சேலம் மாநகராட்சி.
9442310008
The post ’’சேலம் மாநகராட்சியில் அதிரடி கவுன்சிலர்..!’’ உடனுக்குடன் சரி செய்ய புது டெக்னிக் first appeared on Madras Murasu.
]]>The post ’’அரசியல் உள்நோக்கமுடன் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதா..?’’ திமுக கவுன்சிலர் ஈசன் இளங்கோ கண்டனம் first appeared on Madras Murasu.
]]>“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” என்ற மாபெரும் சிறப்பு திட்டம் தந்த நம் ஒப்பற்ற தலைவர் “திராவிட மாடல் நாயகர்” முதலமைச்சர் தளபதியார்-க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே முன்மொழிகிறேன். இதை என் வாழ்வில் கிடைத்த மாபெரும் பாக்கியம் என்பதை மகிழ்வுடன் இந்த மாமன்றத்தில் பதிவு செய்கிறேன்.
அண்ணன் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ..!
மரம் செழிக்க வேரின் விழுதுகள் ஈரமாக இருக்க வேண்டும் என்பதற்கேற்ப கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, முதல்வர் எண்ணதிற்கு வலுசேர்க்கும் விதமாக, மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பிரிவு பணியாளர்கள் செவிலியர்கள் உதவியாளர்கள் ஆகிய உள்ளிட்ட அனைவருக்கும் சுமார் 213 பேரையும் ஊக்கப்படுத்தும் விதமாக நமது சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ மூலம் பாராட்டி பரிசு வழங்கிய அண்ணன் நம் சேலம் மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர் ஆ.இராமச்சந்திரன்-க்கு நன்றி.

திடக்கழிவு மேலான்மை குறித்து பெரிய அளவில் அனைத்து மண்டல பகுதிகளிலும் பிரமாண்ட விழிப்புணர்வு பேரனிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குப்பைகளை அதிக அளவில் தேவையற்று உருவாக்கி பொறுப்பற்ற முறையில் பொது இடங்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அவர்களின் இந்த தவறான செயல்பாட்டை மாற்றும் முயற்சியாக அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு குறியீடு செய்து சுகாதார பிரிவிற்கு உத்தரவிட வேண்டும்.
பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..!
தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னிட்டு, அம்மாப்பேட்டை மண்டலத்தில் அண்ணா மருத்துவமனை வளாகத்திலும், அனைத்து மண்டலங்களிலும் தமிழ்நாடு அரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சேலம் மாநகராட்சி இணைந்து நடத்தும் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை நடத்த ஆவண செய்ய வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெரு விளக்கு கம்பங்களில் உள்ள பழைய ஒளி மங்கி ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளில் அதிக ஒளி பிரகாசமாக ஒளிரும் வகையில் அதில் உள்ள ஃபோகஸ் டியூனபிள் லென்ஸ்களை அவ்விளக்கில் மாற்றி அல்லது சுத்தப்படுத்திட, அதை இயக்கி பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும்.

பொறுப்புள்ள எதிர்கட்சி..!
அரசியல் உள் நோக்கங்களுக்காக ஏதோ ஒன்றை பேசுவதும் அதற்கு உரிய பதிலை கேட்க கூட முடியாமல் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள அதிமுகவினர் பொறுப்புள்ள எதிர்கட்சியினராக மக்கள் பிரதிநிதிகளாக இனியாவது நடந்து கொள்ள வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம் முன் எடுக்கும் அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளளையும் முடிவுகளையும் மக்களிடம் எடுத்து சென்று அதன் நல்ல நோக்கங்களை புரிய வைத்து அதற்கு அவர்களின் பேராதரவை பெறுவோம்.
இவ்வாறு 34-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ பேசினார்
The post ’’அரசியல் உள்நோக்கமுடன் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதா..?’’ திமுக கவுன்சிலர் ஈசன் இளங்கோ கண்டனம் first appeared on Madras Murasu.
]]>The post ”அசத்தலான ஆடி விற்பனையில் அழகு மிளிரும் திரைச்சீலைகள்..!” சேலத்தின் பிரமாண்டம் ஈசன் இளங்கோ first appeared on Madras Murasu.
]]>காற்றையும் வெளிச்சத்தையும் கொண்டு வரும் தூதுவனாகவும், ஜன்னல்களுக்கும் கதவுகளுக்குமான அழகிய ஆடையாகவும், வீட்டினுள் தூசிகள் சிறு பூச்சிகள் வராதுவாறு தடுக்கக்கூடிய பாதுகாவலனாகவும் ஈசன்இளங்கோ நிறுவனத்தின் திரைச்சீலைகள் (Curtains) இருக்கின்றது.

இதுகுறித்து, பெங்களூருவை சேர்ந்த லெட்சுமி, ‘’ எங்கள் ஊரில் இருப்பதை விட சேலத்தில் பல வண்ணங்களில் இந்த கடையில் திரைச்சீலைகள், ஜன்னல் சீலைகள் கிடைக்கிறது. விலையும் குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் தரமும் நன்றாக இருக்கிறது. வெரைட்டி அதிகம் இருக்கிறது. எனவே, கலர் கலராக பார்த்து பார்த்து எடுக்க முடிகிறது. என் மகனுக்கும் மகளுக்கும் பிடித்த திரைச்சீலைகள் இங்கு கிடைத்ததில் மகிழ்ச்சி’’ என்று சொன்னார்.
இக்கடையின் உரிமையாளர் ’ஈசன் இளங்கோ’ கூறுகையில், ‘’வாடிக்கையாளர்களின் மனம் விரும்பும் தனித்துவ தயாரிப்புகள் எங்களுடையது. ‘ஈசன் இளங்கோ நிறுவனத்தின்’ திரைச்சீலைகள் நேர்த்தியான வடிவமைப்பில் உயர்ந்த தரத்தில் இருக்கும். சரியான விலையில் பொருட்களைத் தருகிறோம். இல்லத்தின் தனித்துவ அழகை மேலும் மேன்மைப்படுத்திட ஈசன் திரைச்சீலைகள் பெஸ்ட் மேட்ச் ஆக இருக்கும். ஒரு முறை எங்கள் கடைக்கு வந்தவர்கள் திரும்பவும் வருவார்கள். இந்த கடையைப் பற்றி நண்பர்களிடம் சொல்வார்கள். அதுவே எங்கள் தரத்திற்கு சான்று’’ என்று தெரிவித்தார்.

ஈரோடு மாநகரை சேர்ந்த எஸ்.அன்பழகன், ‘’ராசிக்கு ஏற்ப எனக்கு பிடிச்ச கலர் திரைச்சீலைகள் இங்கு கிடைச்சது சார். இந்த திரைச்சீலைகள், நன்மை தரும் நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்க்குள் கொண்டு வரும் என்பது என் எதிர்பார்ப்பு. இயற்கையின் வண்ணங்களில் வண்ண உளவியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது போன்று ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் அழகாய் இருக்கிறது. எங்குமே கிடைக்காத கலர் எனக்கு இங்கு கிடைத்தது. மகிழ்ச்சியாக எடுத்தேன்’’ என்றார்.
’’ஈர்ப்பு தன்மை மிளிர்ந்திடும் அழகுடன், உங்கள் வீட்டு வரவேற்பு அறை மற்றும் விருந்தினர் அறைக்கு மிகவும் ஏற்ற பேரழகுடன், எளிமையான வெளிப்பாடோடு பார்ப்போரை அசத்தும் கொள்ளை அழகு என, உங்கள் வீட்டின் அனைத்து அறைகளின் அழகையும் அதிர்ஷ்டத்தையும் உறுதி செய்யும் ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் நிறுவனத்தில், இப்போது நடைபெறும் ஆடி மாத சிறப்பு விற்பனையில் பயனடைய உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்’’ என்று அந்நிறுவனத்தின் விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
The post ”அசத்தலான ஆடி விற்பனையில் அழகு மிளிரும் திரைச்சீலைகள்..!” சேலத்தின் பிரமாண்டம் ஈசன் இளங்கோ first appeared on Madras Murasu.
]]>The post ’’மக்களுக்கு 15 மாதத்தில் செய்தது என்ன..!’’ சேலத்தை கலக்கும் அதிரடி கவுன்சிலர் first appeared on Madras Murasu.
]]>’’அய்யா வணக்கம், நான் உங்களால் மாமன்ற உறுப்பினர் ஆன பின்பு இந்த 15- மாத காலத்தில் நமது கார்பெட் தெருவில் சிதிலமடைந்து இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதார வளாகங்கள் தனித்தனியே புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதியதாக ஆண்கள் சுகாதார வளாகம் கட்ட ரூபாய் 34- லட்சம் மதிப்பீட்டில் கட்டட திட்ட மதிப்பீடு தயார் செய்து அதை கட்ட மாநகராட்சி பொது நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சரியான ஒப்பந்ததாரர் மூலம் விரைவில் இப்பணி துவக்கப்படும்.
புத்துமாரியம்மன் கோயில் குடிநீர் மேல் நிலைநீர்தேக்க தொட்டியில் இருந்து கார்பெட் தெரு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் வரக்கூடிய தண்ணீர் மிகப் பழைய பகிர்மான குழாய் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் தண்டவாளம் அடியில் அதிக ரயில்கள் செல்லும் அதிர்வினால் சேதமடைந்து இருந்ததை கண்டுபிடித்து 15-நாட்கள் இரவு பகலாக மாநகராட்சி பொறியியல் பிரிவினர் மிகவும் சிரமப்பட்டு புதியதாக மாற்றி சாக்கடை நீர் கலப்பதை நிரந்தரமாக தவிர்த்தும் தண்ணீர் வீணாகாமல் கூடுதல் விசையுடன் வீடுகளுக்கு வரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கார்பெட் தெரு மயானத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் உயர்திரு. இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ. அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போர்வெல் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு சிண்டெக்ஸ் தொட்டி வைத்து அங்கு வருவோருக்கு தண்ணீர் வசதியும், உட்கார்ந்து சடங்குகள் செய்யக்கூடிய கூடமும் அமைக்கப்பட உள்ளது..
கார்பெட் தெரு 1,2,தெருக்களில், புதிய சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது, விரைவில் சரியான முறையில் அத்திட்டம் நிறைவேற்றப்படும். நான்கு முறை மருத்துவ முகாம்கள் நடத்தியும், கொசு மருந்துகளை அடிக்கடி அடுத்தும் வருகின்றோம்.
நமது பகுதி மக்கள் கட்டணமின்றி மருத்துவம் பார்க்க ஜோதி டாக்கீஸ் சாலையில், காலை 8-00 முதல் 12-00 மணி வரையிலும் மாலை 4.00 முதல் 8-00 மணி வரையிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோருடன் செயல்படும் ஒரு நகர்புற நலவாழ்வு மையம் ஒன்று நமது மக்களின் நலனுக்காக துவங்கப்பட்டுள்ளது.

எலிகளின் மண் பறிப்பு தொல்லை மற்றும் ஆக்கிரமிப்பு அடைப்புகளால் ஏற்படும் சாக்கடை அடைப்புகளை எடுத்து சுகாதார பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அழைக்கும் போது முடிந்தவரை நான் நேரில் வந்து அதை தீர்க முயன்று இருக்கின்றேன்.
இது போல் என்னால் இயன்ற அளவு என் பொறுப்பை நான் சரியாக செய்து வருகின்றேன். என்னுடைய பொறுப்பு காலத்திற்குள் உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சியம் 100% சதவீதம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவு அனைத்து பணிகளையும் செய்ய வைக்க முடியும் என நான் நம்புகின்றேன்.
நன்றி !!’’
– ஈசன் இளங்கோ
09-07-2023
The post ’’மக்களுக்கு 15 மாதத்தில் செய்தது என்ன..!’’ சேலத்தை கலக்கும் அதிரடி கவுன்சிலர் first appeared on Madras Murasu.
]]>The post “முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு மஞ்சள் பை..!” சேலம் ஈசன் இளங்கோ கொடுக்கிறார் first appeared on Madras Murasu.
]]>தமிழகத்தில் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை போற்றும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டமான “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகளை, முதல்வர் அறிவித்த நாளில் இருந்து இடைவிடாமல் சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் செய்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாகவும் இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வாகவும் , புதிய ஆக்கப்பூர்வ முயற்சியாகவும் 34-வது கோட்டத்தில் 10-06-2023 சனிக்கிழமை காலை 7-30 மணிக்கு எண்-2 புதுத்தெரு புதிய சாலையில் இருந்து, அக்கோட்ட மாமன்ற உறுப்பினரான நான் , சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாக சென்று, முதல் கட்டமாக 500- வீடுகளுக்கு தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சள் பை திட்டப்படி, எப்போதும் கையில் எடுத்து செல்லும் வகையில் வீட்டிற்கு ஒரு புதிய மஞ்சள் பை வழங்குகிறோம்.

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தர அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வீட்டிற்கு ஒரு ஒரு ஆவின் பால் பாக்கெட்டும் வழங்கி திடக்கழிவு மேலான்மை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்க்கொள்ள உள்ளோம்.
இந்த பிரச்சார நிகழ்வில் கொக்கலிக்கட்டை நாட்டுப்புறகலைஞர்கள் மூலம் 8-அடி உயர பிரமாண்ட மஞ்சள் பைகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம்.
சுற்றுச்சுழலை காக்க, திடக்கழிவு மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தி, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் கொடுத்து தெருவில் உள்ள அனைத்து வீட்டினரையும் “எனது குப்பை எனது பொறுப்பு” நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் இனணந்து செயல் பட வைக்கும் ஒரு அருமையான சுகாதாரமிகு தூய்மையான சூழலை எங்கள் கோட்டத்தில் ஏற்படுத்தும் முயற்சியில் எங்களுக்கு உதவிடும் வகையில், தாங்களும் நாளை காலை 7-30 மணி முதல் நடக்க உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் வேண்டுகின்றேன்.
இவ்வாறு 34-வது கோட்டம், மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ கூறியுள்ளார்
The post “முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு மஞ்சள் பை..!” சேலம் ஈசன் இளங்கோ கொடுக்கிறார் first appeared on Madras Murasu.
]]>The post ’’சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் first appeared on Madras Murasu.
]]>தமிழக சட்டசபையில் 2022 -ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி, தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 189 என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, மக்கள் பயன்பாட்டுக்காக ஜூன் 6 ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் இன்று மாலையில் நேரடியாகத் திறந்து வைக்கிறார். மற்ற 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்க உள்ளார்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி, 34- கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் ஜோதி டாக்கீஸ் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை இன்று 06-06-2023 மாலை 05 மணிக்கு நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தனது திருக்கரங்களால் காணொலி காட்சி நிகழ்வு மூலம் துவக்க உள்ளார்கள்.
காலை, மாலை நேரங்களில் நமது 34- வது கோட்ட மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வசதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், தாய்- சேய் நல சேவைகளான கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள், தாய் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகள், சிறுகுறு நோய்களுக்கான சிகிச்சைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளும் வழங்கப்படவுள்ளது.

இந்த மையத்தில் ஒரு மருத்துவர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். நம் கோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக இந்த மக்கள் நலவாழ்வு மையம், காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையம் செயல்படும்.
இதனால், நம்கோட்டத்தில் வசிக்கும் மக்கள், இந்த மையத்துக்கு மாலை நேரங்களிலும்சென்று மருத்துவம் பார்த்து கொள்ளலாம். இத்தகைய சிறப்புமிகு நகர்புற நலவாழ்வு மையத்தை 34- கோட்டத்தில் துவங்க உத்தரவிட்ட நமது ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களுக்கும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ அவர்களுக்கும், வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் அண்ணன் ஆ.இராமச்சந்திரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்’’ என்று கூறியுள்ளார்.
The post ’’சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் first appeared on Madras Murasu.
]]>