ரிசர்வ் வங்கியின் டாலர்-ரூபாய் பரிமாற்ற வசதி, இந்தியாவிற்குள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அந்நியச் செலாவணி வரவிற்கு வித்திட்டுள்ளது
2026 ஜூன் 8 அன்று தொடங்கப்பட்ட எஃப்சிஎன்ஆர் (பி) (வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அந்நியச் செலாவணி வங்கிக் கணக்குகள்) வைப்புகள், வெளிநாட்டு நாணயக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு வணிகக் கடன்கள் ஆகியவற்றிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு டாலர்-ரூபாய் அந்நியச் செலாவணிப் பரிமாற்ற வசதி, ஆகஸ்ட் 21, 2026 நிலவரப்படி மொத்தம் 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நியச் செலாவணியை ஈர்த்துள்ளது. இதன் மூலம், நாட்டிற்குள் அந்நியச் செலாவணி வரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான உயர்வு பதிவாகியுள்ளது. இதில் எஃப்சிஎன்ஆர் (பி) வைப்புகள் மட்டுமே 65.40 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பை வழங்கியிருப்பது, இத்திட்டத்திற்கு வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பை உறுதிப்படுத்துகிறது.
பதினொரு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் 73 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்டியுள்ள இந்த நடவடிக்கை, அந்நியச் செலாவணியைத் திரட்டுவதில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக விரைவான முயற்சியாகத் திகழ்கிறது. சுமார் மூன்று மாதங்களில் 26 பில்லியன் அமெரிக்க டாலர் வரை திரட்டிய ரிசர்வ் வங்கியின் 2013-ம் ஆண்டின் திட்ட அளவையும் வேகத்தையும் இது வெகுவாக விஞ்சியுள்ளது.
