பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற திட்டம் 18 பிப்ரவரி 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இயற்கைப் பேரிடர், பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பயிர்கள் நஷ்டமடைந்தால் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம்:
தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

பணி -நோக்கங்கள் :
”இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றினால் பயிர்கள் விளையாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவும் இத்திட்டம் வந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவாசயத்தை தொடர்ந்து செய்துவருவதற்கு உதவும். விவசாயிகள் புதுமையான நவீன வேளாண் நடைமுறைகளை கையாளுவதை ஊக்குவித்தல் இத்திட்டத்தில் உதவியாளர்கள் பணியாகும்” ஆகும்

ஃபசல் பீமா உதவியாளர்கள் (Fasal Bima Assistant):
இத்திதிட்டத்தின் கீழ் 940 உதவியாளர், மாவட்டம் வாரியாக தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். கூடுதல் கல்வி தகுதி ஏற்றுக் கொள்ளப்படும். தேர்வு கிடையாது. ரூ.250 விண்ணப்பக் கட்டணம். 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயதில் தளர்வு உண்டு. ஜூலை 1-ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். www.bharatinsurance.org என்ற இணையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .

