ஊரில் திருவிழாவோ இல்லையென்றால் குடும்பத்து நிகழ்ச்சியோ திரைகட்டி படம் போடுவார்கள். நாங்களும் முன்னமே சென்று காத்திருந்து இடம் பிடித்து படம் பார்ப்போம். இப்படித்தான் “திரை”உலகு எனக்கு அறிமுகம்.
அப்படியில்லையென்றால் எப்போதாவது தென்மலை பாலமுருகன் திரையரங்கம் ஒன்று முன்பு இருந்தது. அங்கு எங்கள் தந்தையுடன் குடுபத்தோடு சென்று பார்த்திருக்கிறேன்.
அப்படி முதன் முதலாக சைக்கிள் இருந்த காலத்தில் “நடராசா” வண்டியில் சென்று பார்க்க புறப்பட்டு போய்ப்பார்த்தோம். ஒரே மண்தரைதான் அதில் குவித்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்ததாக ஞாபகம். அந்தப்படம் முடிந்தது வீட்டிற்கும் வந்து விட்டோம். இதோ அப்படி அந்தப்படம் பார்த்து முப்பது வருடங்களை கடந்து விட்டது. ஆனால் அழியாமல் அந்தப்படம் இன்னும் ஞாபகமாய்.
காலத்தை காவியமாய் தன் முகச்சுருக்கங்கள் வழி ஒவியமாய் பல குடும்பங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் அந்தப்படம். பாகப்பிரிவினை!!!
நம் வாழ்வை நம் கிராமத்தை நம் ஒவ்வொரு நாளின் அழகியலையும் வாழ்வு தந்த பாடத்தையும் அற்புதமாக பதிவு செய்திருப்பார்கள்.
“தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா….”
என்ற பாடல் வரியும்
ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் எப்படி அமைய வேண்டும் ஒரு மண வாழ்வு என்பதை அற்புதமாக பதிவு செய்திருப்பார்கள்.
“தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்….”
என்ற பாடல் வரிகளில் விவசாயிகள் பற்றி அவ்வளவு அற்புதமாக எழுதப்பட்ட பாடல்….விவசாய பூமியை எழுத்து வரிகளால் உழவு செய்திருப்பார்கள்.
“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ”
என்ற வரிகளில் இன்றும் நம் மனதை பறி கொடுத்து விடலாம். அப்பபடித்தான் நம் வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது.
“நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே”
இந்தப்படல் மட்டும் நம்மை தட்டியெழுப்பிக்கொண்டேயிருக்கும். நாம் சோர்ந்த போகின்ற நேரமெல்லாம் சுடராய் நம்மை வெளிச்சம் பாய்ச்சுகிறது நம்மின் முகவரிகளை.
“அவன்தான் மனிதன்” எனும் திரைப்படம் ஒரு வாழ்க்கை காவியம் என்றே சொல்லலாம். படத்தின் ஒவ்வொரு பிரேமும் வாழ்வியலின் நிஜ மனிதர்களை கண்ணாடி போட்டு காண்பிக்கும். அதில் அற்புதமான வள்ளல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படத்தில் வரும் காலத்தையும் பேசும் காலத்திற்கும் பேசும். அதில் அந்த பாடல் வரியில் முகபாவனைகளில் என்ன என்னமோ செய்திருப்பார்.
//பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்..
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்?
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்..
நன்மை செய்து துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்..!//
“பாசமலரில்” வரும் அண்ணனாகட்டும், “திருமால் பெருமை”யில் வரும் சுந்தரராகட்டும், ராஜபார்ட் ரங்கதுரையாகட்டும், என ஒவ்வொன்றிலும் வாழ்ந்திருப்பார்.
திருவியைாடல் படத்தில் கொஞ்சும் தமிழாக ஆட்சி செய்திருப்பார். நேரடியாக நடப்பது போன்றும அந்த அமைச்சரவையும் மன்னர் அவையும் தருமியும் சிவனும் பேசுகின்ற பேசுசும் எத்தனையோ காலங்களை கடந்தும் எத்தனையோ படங்களை கடந்தும் இன்றும் காலத்தில் வாழ்கிறது இப்படம்.
ரஜினியின் ‘படிக்காதவன்’ படத்தில் கோர்ட் சீனில் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்.
அதிலும் நீதிபதியாக வரும் இடத்தில்.
ரஜினி குற்றவாளிக் கூண்டிற்குள் இருப்பார். செந்தாமரை வழக்கை விளக்கும்போது இவர் பெயர் மற்றும் அவரின் முகவரியை சொல்ல சொல்ல நீதிபதியாக அமர்ந்திருக்கும் சிவாஜி கண்கள் கலங்கி இதயம் நொறுங்கையில் கண்ணாடியில் வைக்கப்பட்டிருக்கும் நீரோடு கை பட்டு விழ, தி கோர்ட் அட்ஜர்ன்டு என சொல்லும்போது யாருக்குத்தான் கண்ணீர் சிந்தாது.
பின்னர் சிறைக்கொட்டத்தில் வந்து சொல்லுவார் அண்ணன் நீதிபதி, தம்பி குற்றவாளி, இன்னொரு தம்பி சாட்சி, காலம் எப்படி வந்து விட்டது பார்த்தாயா? என்பார்.
கண்ணீர் துடைத்து விட்டு சொல்வார்.
உங்க அண்ணன் இனிமேல் எழுதப்போறதுதான் உண்மையான பரீட்சை என்பார்.
“ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்புக்குயிலாக பாடு” எனும் பாடல் வரிகள் பின்புலமாய் ஒலிக்கும்.
எத்தனை அண்ணன் தம்பிகள் கண்ணீர் சிந்திப்பார்கள்…!
நம்மை உலுக்கிய படம் பாசத்தால் அன்பால் அண்ணன் ஒருவன் தன் தம்பிகளை தேடும் அற்புதமான படம்..!
அவரின் எந்தப் படங்களை விடுவது பேசுவது. எல்லாமும் எல்லாமுமாக நிற்கிறார்…!
பராசக்தியில் கலைஞர் வசனத்தை உச்சரித்து திரை உலகை மின்னச் செய்த நட்சத்திரம்.
துருவ நட்சத்திரம் சிவாஜி கணேசன்!
இப்படி நம் வாழ்வின்;
அண்ணனாக
தம்பியாக
தந்தையாக
மாமாவாக
சித்தப்பாவாக
வழக்கறிஞராக
காவல்துறை அதிகாரியாக
டாக்டராக
மருத்துவராக
ஆசிரியராக
பூசாரியாக
பாஸ்டராக
இதையெல்லாம் தாண்டி;
சுதந்திரபோராட்ட தியாகியாக தனது நடிப்பால் அவர்களை நம் கண் முன் கொண்டுவந்து வாழ்ந்த காவியத்தலைவன்.
“சிவாஜி கணேசன்” நினைவுதினம் இன்று!!
– வீரசோழன் க.சோ.திருமாவளவன் – முகநூல் பதிவு

