Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
தனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு! - Madras Murasu
spot_img
More
    முகப்புUncategorizedதனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு!

    தனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு!

    தனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட விதையால்தான் – இன்று நாம் கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம் என்று குடியரசுத் தலைவர் பங்கேற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

    சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில், 6.8.2023 இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர் திரௌ­பதி முர்மு முதன்மை விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 165-வது பட்­ட­ம­ளிப்பு விழா­வில், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கௌரவ விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு ஆற்­றிய உரை வரு­மாறு:

    “பட்­டங்­கள் ஆள்­வ­தும் சட்­டங்­கள் செய்­வ­தும் பாரி­னில் பெண்­கள் நடத்த வந்­தோம் எட்டு மறி­வி­னில் ஆணுக்­கிங்கே பெண் இளைப்­பில்லை காணென்று கும்­மி­யடி” என்று பாடி­னார் மகா­கவி பார­தி­யார்.

    அதற்கு எடுத்­துக்­காக இந்­திய நாட்­டின் குடி­ய­ர­சுத் தலை­வர் நாற்­கா­லி­யில் அமர்ந்து கோலோச்சி வரும் குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்மு அவர்­க­ளுக்கு எனது வணக்­கங்­க­ளை­யும் வாழ்த்­து­க­ளை­யும் நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

    பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு­வா­னது (UGC) “சிறந்து விளங்­கும் திறன்­கொண்ட பல்­க­லைக்­க­ழ­கம் என்ற சிறப்பு அடை­ மொ­ழி­யினை சென்­னைப் பல்­க­லைக் க­ழ­கத்­துக்­குத் தந்­துள்­ளது.

    குடி­ய­ர­சுத் தலை­வர் பங்­கேற்­றது முக்­கிய நாளாக அமைந்­துள்­ளது!

    அத்­த­கைய சிறந்து விளங்­கும் திறன் கொண்ட பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பட்­ட­ம­ளிப்பு விழா­வுக்கு குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்மு அவர்­கள் வருகை தந்­தது – இந்­தப் பல்­க­லைக்­க­ழக வர­லாற்­றில் முக்­கி­ய­மான நாளாக இதனை மாற்றி அமைத்­துள்­ளது.

    இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர்­க­ளாக இருந்த சர்­வ­பள்ளி ராதா­கி­ருஷ்­ணன் அவர்­கள் -வி.வி.கிரி அவர்­கள் -நீலம் சஞ்­சீவி ரெட்டி அவர்­கள் – ஆர்.வெங்­கட்­ரா­மன் அவர்­கள் – ஏ.பி.ஜே.அப்­துல் கலாம் அவர்­கள் – என ஏரா­ள­மான குடி­ய­ர­சுத் தலை­வர்­கள் படித்த பல்­க­லைக் கழ­கம் சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கம்.

    தலை சிறந்த ஆளு­மை­களை வழங்­கிய சென்னை பல்­க­லைக் கழ­கம்!

    நீதி­ப­தி­கள், அர­சி­யல் தலை­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள், ஆராய்ச்­சி­யா­ளர்­கள், முதல் பெண் மருத்­து­வர் டாக்­டர் முத்­து­லெட்­சுமி ரெட்டி அவர்­கள் உட்­பட பல தலை­சி­றந்த பெண் ஆளு­மை­களை வழங்­கிய பெருமை இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உண்டு. தமிழ்­நாட்­டின் தலை­ம­கன் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் இந்த பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தான் படித்­தார். இன்று முத­ல­மைச்­ச­ராக உங்­கள் முன் உரை­யாற்­றும் நானும் இதே பல்­க­லைக்­க­ழ­கத்தை சார்ந்­த­வன் தான். அந்த வகை­யில் உங்­கள் சீனி­ய­ரா­க­வும் நான் இந்த நிகழ்ச்­சி­யிலே கலந்து கொண்­டுள்­ளேன்.

    கடந்த 165 ஆண்­டு­க­ளா­கத் தென்­னிந்­தி­யா­வில் மட்­டு­மில்­லா­மல், நவீன இந்­தி­யா­வின் வளர்ச்­சிக்கு நிலை­யான பங்­க­ளிப்­பைச் சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கம் வழங்கி வரு­கி­றது. அந்­தக் காலத்­தில் இருந்­தது சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கம் மட்­டும்­தான்.

    நீதிக்­கட்சி ஆட்­சிக் காலத்­தில்­தான் சென்­னைக்கு வெளியே சிதம்­ப­ரத்­தில் அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழ­கம் உரு­வாக்­கப்­பட்­டது. இன்­றைய தினம் தமிழ்­நாட்­டில் மாநில அர­சின் சார்­பில் மொத்­தம் 22 பல்­க­லைக்­க­ழ­கங்­கள் உள்­ளன.

    தமிழ்­நாட்­டில் தலை­சி­றந்து விளங்­கும் உயர்­கல்வி நிறு­வ­னங்­கள்!

    தமிழ்­நாடு என்­பது இந்­தி­யா­வி­லேயே உயர்­கல்­வி­யில் சிறந்து விளங்­கும் மாநி­ல­மாக இருக்­கி­றது என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் அறி­வீர்­கள்.

    இந்­தி­யா­வில் தலை­சி­றந்த 100 கல்வி நிறு­வ­னங்­க­ளில் தமிழ்­நாட்­டில் மட்­டுமே 18 நிறு­வ­னங்­கள் உள்­ளன.

    தலை­சி­றந்த 100 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் 21 தமிழ்­நாட்­டில்­தான் உள்­ளன- தலை­சி­றந்த 100 கல்­லூ­ரி­க­ளில் 32 கல்­லூ­ரி­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளன- தலை­சி­றந்த 100 ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளில் 10 தமிழ்­நாட்­டில் உள்­ளன- தலை­சி­றந்த 200 பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் 35 கல்­லூ­ரி­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளன- தலை­சி­றந்த மேலாண்­மைக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 11 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 100 மருத்­து­வக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 8 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 40 பல்­ம­ருத்­து­வக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 9 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 30 சட்­டக் கல்­லூ­ரி­க­ளில் 2 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 30 கட்­ட­டக் கலைக் கல்­லூ­ரி­க­ளில் 6 தமிழ்­நாட்­டில் உள்­ளன.

    தமிழ்­நாட்­டி­லுள்ள கல்­லூரி மற்­றும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் பயி­லும் மாண­வர்­கள்­க­ளைப் படிப்­பில் மட்­டு­மல்­லாது, வாழ்க்­கை­யி­லும் வெற்­றி­யா­ள­ராக்­கும் வகை­யில் எனது கனவு திட்­ட­மான “நான் முதல்­வன்” திட்­டம் சிறந்து விளங்கி வரு­கி­றது. ஆண்­டுக்­குப் பத்து லட்­சம் இளை­ஞர்­க­ளைப் படிப்­பில், அறி­வில், சிந்­த­னை­யில், ஆற்­ற­லில், திற­னில் மேம்­ப­டுத்­து­வ­து­தான் இந்­தத் திட்­டத்­தின் இலக்கு.

    மாண­வர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் அவர்­க­ளது துறை­சார்ந்த மேம்­ப­டுத்­தப்­பட்ட பயிற்­சி­கள் இந்­தத் திட்­டத்­தின்­கீழ் திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­யாக வழங்­கப்­ப­டு­கி­றது.

    உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் பணி­யாற்­றும் பேரா­சி­ரி­யர்­கள் மற்­றும் பயி­லும் மாண­வர்­க­ளின் புதிய ஆராய்ச்­சிச் சிந்­த­னை­க­ளுக்­குப் புத்­து­யிர் வழங்­கும் வித­மாக “முத­ல­மைச்­ச­ரின் ஆராய்ச்­சித் திட்­டம்’ அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திட்­டத்­திற்­கென தமிழ்­நாடு அர­சால் ஆண்­டுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

    முத­ல­மைச்­ச­ரின் புத்­தாய்­வுத் திட்­டம்!

    “தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் புத்­தாய்­வுத் திட்­டம்”­ என்ற புதிய சீர்­மிகு திட்­டத்­தை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இளை­ஞர்­க­ளுக்கு தொழில்­முறை மற்­றும் கல்வி அடிப்­ப­டை­யில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதி­யத்­து­டன் பயிற்சி வழங்க தமிழ்­நாடு அரசு முடி­வெ­டுத்­துள்­ளது.

    அர­சுப் பள்­ளி­க­ளில் படித்து கல்­லூ­ரிக்­குள் நுழை­யும் மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் வித­மாக “மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார் உயர்­கல்வி உறு­தித் திட்­டம்” எனும் புது­மைப்­பெண் திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நடத்தி பெண்­கல்­வியை ஊக்­கு­வித்து வரு­கி­றோம்.

    தமிழ்­நாட்­டின் தென் மாவட்­டங்­க­ளைச் சார்ந்த மாண­வர்­கள் போட்­டித் தேர்­வு­கள், ஆட்­சிப் பணித் தேர்­வு­கள், திறன்­சார்ந்த தேர்­வு­க­ளுக்­குத் தங்­க­ளைத் தயார் செய்­யும் பொருட்டு மது­ரை­யில் “கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம்” பிரம்­மாண்­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே சென்­னை­யில் அண்ணா நூற்­றாண்டு நூல­கம் கழக அரசு ஆட்­சிக்கு வந்­தது முதல் புதுப்­பொ­லி­வு­டன் செயல்­பட்டு வரு­கி­றது.

    சென்னை பல்­க­லைக் கழ­கத்­திற்கு சிறப்­புத் திட்­டம் அறி­விப்பு!

    சென்னை வந்­த­போது அமெ­ரிக்க வெளி­யு­ற­வுத்­துறை செய­லா­ள­ராக இருந்த திரு­மதி ஹிலாரி கிளிண்­டன் அவர்­கள் பார்த்து பாராட்­டிய நூல­கம் அது. இவை அனைத்­தும் தமிழ்­நாட்­டின் மாணவ சக்­தியை அடுத்த கட்­டத்­துக்கு வளர்த்­தெ­டுக்­கும் முயற்­சி­கள்! குறிப்­பா­கச் சென்­னைப் பல்­க­லைக் கழ­கத்­துக்கு சிறப்­புத் திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்டு அவை செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

    * சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மெரினா வளா­கத்­தில் நவீன வச­தி­க­ளு­டன் ரூபாய் 30 கோடி மதிப்­பீட்­டில் புதிய விடு­தி­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

    * 3000 பேர் அம­ரும் வகை­யி­லுள்ள சென்­னைப் பல்­க­லைக்­க­ழக நூற்­றாண்டு விழாக் கட்­ட­ட­மும் புதிய பொலி­வு­டன் சீர­மைக்­கப்­பட உள்­ளது.

    * சேப்­பாக்க வளா­கத்­தில் மாண­வி­யர்­க­ளுக்­கான புதிய விடு­தி­யும் கட்­டப்­ப­ட­வுள்­ளது.

    * சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள தொழில் முனை­வோர் மற்­றும் தொழில் வழி­காட்டு மையத்­துக்கு ஒன்­றிய அர­சும் தமிழ்­நாடு அர­சும் இணைந்து 50 கோடி ரூபாய் வழங்கி உள்­ளது.

    * பயி­லும்­போதே பணி என்ற திட்­டம் அம­லில் உள்­ளது.

    * “திருக்­கு­றள் காட்­டும் தொழில்­நெறி” மற்­றும் “சமூ­க­நீதி” ஆகிய புதிய பாடத்­திட்­டங்­கள் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளன. – இது போன்ற சிறப்­பான முன்­னெ­டுப்­பு­க­ளைத் தொடர்ந்து எடுத்து தன்னை புதுப்­பித்­துக் கொள்­ளும் நிறு­வ­ன­மாக சென்­னைப் பல்­க­லைக் கழ­கம் செயல்­பட்டு வரு­கி­றது.

    * இன்று பட்­டம் பெறு­கின்ற மாண­வச் செல்­வங்­க­ளா­கிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய நெஞ்­சம் நிறைந்த வாழ்த்­து­களை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

    “தொட்­ட­னைத் தூறும் மணற்­கேணி மாந்­தர்க்­குக் கற்­ற­னைத் தூறும் அறிவு”

    உங்­க­ளின் அறிவு, தோண்­டத் தோண்ட ஊற்­று­நீர் கிடைப்­பது போல தொடர்ந்து பெரு­கிக்­கொண்டே இருக்­க­வேண்­டும். பட்­டம் வாங்­கு­வ­தோடு உங்­க­ளது படிப்பு முடிந்து விடு­வது இல்லை. ஒரே பட்­டத்­து­டன் நிறுத்­தி­வி­டா­தீர்­கள். தொடர்ந்து படி­யுங்­கள். தகு­தி­யான வேலை கிடைத்த பிற­கும் படிப்­பதை நிறுத்­தி­வி­டா­தீர்­கள். யாரா­லும் பறிக்க முடி­யாத சொத்து என்­பது கல்­வி­ய­றிவு தான். அது அறி­வி­யல் வழிப்­பட்­ட­தாக, பகுத்­த­றி­வாக எதை­யும் கேள்வி கேட்டு ஆரா­யும் அறி­வாக இருக்­கு­மா­னால் உங்­களை யாரா­லும் வெல்ல முடி­யாது. நீங்­கள் இன்று பட்­டம் பெறு­வதை பார்த்து உங்­கள் பெற்­றோர்­கள் எத்­த­கைய மகிழ்ச்­சி­யை­யும், பூரிப்­பை­யும் அடை­கி­றார்­களோ, அதே அளவு மகிழ்ச்­சியை நானும் அடை­கி­றேன். முத­ல­மைச்­ச­ராக மட்­டு­மல்ல, உங்­கள் குடும்­பத்­தைச் சார்ந்த ஒரு­வ­னாக உங்­க­ளைப் பார்த்து பெரு­மைப்­ப­டு­கி­றேன்.

    இன்று உங்­கள் குடும்­பத்­திற்­கும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கும் பெருமை சேர்த்­துள்ள நீங்­கள், எதிர்­கா­லத்­தில் நமது தமிழ்­நாட்­டிற்­கும் இந்­தி­யா­விற்­கும் இதே­போல பெரு­மைத்­தே­டித் தர வேண்­டும், அது­தான் நான் உங்­க­ளுக்கு வைக்­கக்­கூ­டிய வேண்­டு­கோள்.

    தமிழ்­நாடு அரசு சென்னை பல்­க­லைக் கழ­கத்­தின் மேம்­பாட்­டிற்கு என்­றும் துணை நிற்­கும்!

    சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வளர்ச்­சிக்­கும் மேம்­பாட்­டிற்­கும் நிதி ஆதா­ரப் பெருக்­கத்­திற்­கும் தமிழ்­நாடு அர­சும் உயர்­கல்­வித் துறை­யும் என்­றென்­றும் துணை நிற்­கும்.

    சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உல­க­ளா­விய நிலை­யில் உயர்­நி­லைத் தகு­தி­யில் இடம்­பெ­றச்­செய்ய இடை­ய­றாது பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கும் சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர், பேரா­சி­ரி­யர்­கள், மாண­வர்­கள் உள்­ளிட்ட அனை­ வ­ருக்­கும் என்­னு­டைய நன்­றியை தெரி­வித்து, என்­னு­டைய உரையை நிறைவு செய்­கி­றேன்.

    இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments