Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
“பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க 5 நாள் கெடு..!” மல்யுத்த வீரர்கள் நாள் குறித்தனர் - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்"பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க 5 நாள் கெடு..!" மல்யுத்த வீரர்கள் நாள் குறித்தனர்

    “பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க 5 நாள் கெடு..!” மல்யுத்த வீரர்கள் நாள் குறித்தனர்

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய பகுதியையும் அப்புறப்படுத்தினர்.

    மேலும், மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் இன்று அறிவித்தனர்.

    இதற்காக டெல்லியில் இருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய பதக்கங்களுடன் உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் பதக்கங்களை கங்கை நதியில் வீச இருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தினார். மேலும், வீரர், வீராங்கனைகளின் பதக்கங்களை அவர் தன்னோடு எடுத்து சென்றார்.

    இதனை தொடந்து பதக்கங்களை கங்கையில் வீசும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளை, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

    மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    RELATED ARTICLES

    1 கருத்து

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments