acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’மதுரை எம்ய்ஸ் கேள்வி-க்கு மத்திய அமைச்சரிடம் பதில் இல்லை..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை:
நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8, 2023 அன்று அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்ற அடிப்படையில் விதி எண் 377 வது பிரிவின் கீழ் மதுரை எய்ம்ஸ் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரத் பிரவீன் குமார் (DO No. H 11016/04/2023/PMSSY – III/ 23.09.2023) பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதிலில்லை என்பதுதான் சோகம். மாறாக திரைக்கலைஞர்கள் கவுண்டமணி- செந்தில் நகைச்சுவையைப் போல “ அதே வாழைப்பழந்தான் இது” என்பது போல பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரிவு 377 ன் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் அளவற்ற தாமதம் இருப்பது பற்றி கேள்வி எழுப்பினேன். 2015 – 16 இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டம் 2018 டிசம்பரில் ஐந்தாம் கட்ட எய்ம்ஸ் உருவாக்கமாக 6 புதிய எய்ம்ஸ்களில் ஒன்றாக ஓப்புதலை பெற்றது. 2019 இல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணி துவங்கப்படவே இல்லை. 6, 7, 8 வது கட்டங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்டங்கள் கூட குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளன. ஆனால், மதுரை எய்ம்ஸ் இன்னும் காகித அளவிலேயே உள்ளன. செப்டம்பர் 2022 இல் முடிந்திருக்க வேண்டிய கட்டுமானப் பணி தற்போது அக்டோபர் 2026 வரை ஆகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பவும் என்ன முன்னேற்றம் என தெரியவில்லை. உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது? கால வரையறை வரைபடத்தை (Bar Chart) தர இயலுமா? என்பதே பிரிவு 377 இன் கீழ் நான் எழுப்பிய கேள்விகள்.
*பதிலே இல்லாமல் ஒரு பதில்*
அமைச்சர் அளித்துள்ள பதில் நான் கேட்ட எந்த விவரத்தையும் தரவில்லை. மாறாக ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சொல்கிற கதையையே வரி மாறாமல் ஒப்பித்துள்ளார். புதிய மதுரை எய்ம்ஸ் திட்டம் ரூ 1264 கோடி மதிப்பீட்டில் டிசம்பர் 2018 இல் ஒப்புதலை பெற்றது. ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேசன் ஏஜென்சி (ஜிகா) கடன் வாயிலாக எய்ம்ஸ் திட்டம் நிறைவேறும் என முடிவு செய்யப்பட்டது. ஜிகா துவக்க நிலை ஆய்வையும் நடத்தி முடித்தது. இதற்கிடையில் 150 படுக்கை கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றை கூடுதலாக திட்டத்தில் இணைத்து மதிப்பீடு 1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. 1627.70 கோடி ஜிகா கடனும், மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படுமென்றும் முடிவு செய்யப்பட்டது. ஜிகா கடன் ஒப்பந்தம் 26.03.2021 அன்று இறுதி செய்யப்பட்டது. நிர்வாக மற்றும் செலவின ஒப்புதல்களும் பெறப்பட்டன. இப்படியாக 92 சதவீத முன் முதலீடு வேலைகள் முடிந்துள்ளன. எல்லைச் சுவரும் எழுப்பப்பட்டுள்ளது. திட்ட செல் ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குநர், நிர்வாக இணை இயக்குனர், கண்காணிப்பு பொறியாளர், மின் பொறியாளர், கட்டிட பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டு திட்டத்திற்கான பெரு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் அமைச்சர் கூறியுள்ளார்.
இது மீண்டும் மீண்டும் கேட்டு புளித்துப் போன கதை. வார்ப்புரு (Template) போல எப்போது கேட்டாலும் 2016 லிருந்து இதே கதையை ஆரம்பித்து விடுகிறார்கள். கடைசியில் சுற்றுச் சுவரை கடக்கவே இல்லை என்பதே கசப்பான உண்மை. உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது? கால வரையறை வரைபடத்தை (Bar Chart) தர இயலுமா? என்ற என் கேள்விகளுக்கு எங்காவது பதில் உள்ளதா?
தமிழ்நாட்டிற்கு நீங்கள் இழைக்கும் வஞ்சனையை உங்களின் பதில் வெட்ட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. நாடாளுமன்றத்தில் விதி 377 ல் கேட்கப்பட்ட கேள்விக்கு கால வரைபடத்தை கூட தர முடியாத அளவு தோல்வி அடைந்துள்ள ஒரு அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.

The post ’’மதுரை எம்ய்ஸ் கேள்வி-க்கு மத்திய அமைச்சரிடம் பதில் இல்லை..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post “போடிநாயக்கனூர் ரயில் வந்தாச்சு..!” first appeared on Madras Murasu.
]]>இந்த ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஜூன் 15 ம் தேதி, இரவு 8.00 மணிக்கு போடிநாயக்கனூரிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ரயில் எண்.20602, மதுரை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ரயில் எண்.06702 தேனி – மதுரை தினசரி முன்பதிவு அல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் – சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு 3 நாள்கள்) 16-ந் தேதி சென்னை சென்ட்ரலிலிருந்தும். 18-ந் தேதி போடிநாயக்கனூரிலிருந்தும் சேவையை தொடங்குகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும். சென்னையிலிருந்து இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
முன்பதிவு அல்லாத மதுரை – போடிநாயக்கனூர் தினசரி ரயில் சேவை 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 8.20-க்கு புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 10.30 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும்.
சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கச்சேகுடா – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தில் 15-ந் தேதி முதல் நின்று செல்கிறது. கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நண்பகல் 12.15 மணிக்கு இந்த ரயில்கள் நின்று செல்லும் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
சு.வெங்கடேசன்ம் எம்.பி.,
இதுகுறித்து, கடந்த 7-ம் தேதி மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘“அமைச்சரின் தேதிக்காக எவ்வளவு நாள் காத்திருப்பது?” என்று கடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி போடி – சென்னை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ், கச்சிகுடா எக்ஸ்பிரஸ் இரண்டும் கொடைரோடு நிலையத்தில் நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் நன்றி’’ என்று கூறியிருந்தார்.

போடி ரயில் வரலாறு ; 12 ஆண்டு போராட்டம்:
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மதுரை – போடி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.லாசர் தலை மையில் வர்த்தகர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அடங்கிய போராட்டக்குழு அமைக்கப்பட்டு சிறப்பு மாநாடு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல் வேறு வடிவங்களில் போராட் டம் நடத்தியும் ,பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், ரயில்வே அதிகாரிகளை சந்தித்தும் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக ரயில்வே அமைச்சகம் திட்டத்திற்கு மறு அனுமதி கொடுத்து படிப்படியாக நிதி ஒதுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்ட பணிகள் சுமார் ரூ.560 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற நிலையில் வியாழனன்று ரயில் சேவை மதுரை மற்றும் சென்னை வரை துவங்கப்பட உள்ளது சோதனை ஓட்டம் மதுரை-போடி இடையே அகல ரயில்பாதையில் அதிர்வுகள் குறித்த இறுதிக் கட்ட ஆய்வு ரயில் புதன் கிழமை நடைபெற்றது. OMS (Oscillation Monitoring System) எனப் படும் சிறப்பு ரயில் என்ஜின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை சோதனை செய்யப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் நவீன கருவி கள் மூலம் ரயில்பாதையின் அதிர்வு தாங்கும் திறன் சோதனை செய்யப்பட்டது.
காலை 10 மணிக்கு புறப்பட்ட ரயில் போடிக்கு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 11.45 மணிக்கு மதுரைக்கு புறப் பட்டு சென்றது. ரயிலில் பொறியாளர் குழுவினர் ரயில்பாதை குறித்து இறுதிக் கட்ட சோதனை மேற்கொண்ட னர். வியாழக்கிழமை போடி யில் நடைபெறும் நிகழ்ச்சியில் போடி-மதுரை, போடி-சென்னை ரயில்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். பபோடி – மதுரை, அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு, போடி வர்த்தகர் சங்கம் சார்பில் ரயிலை வரவேற்றும் இத்திட்டத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு போடி வர்த்தகர் சங்க மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
The post “போடிநாயக்கனூர் ரயில் வந்தாச்சு..!” first appeared on Madras Murasu.
]]>The post “தலித் மக்கள் மீது தாக்குதல் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!” சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>சேதமடைந்த சொத்துக்களுக்கு உரிய நிவாரனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட செல்வகுமார் (32), மணிமுத்து (32), குமார் (39), பழனிக்குமார் (35) ஆகியோர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை சி பி எம் மாவட்ட செயலாளர் மா. கனேசன், தீ.ஒ. முன்னனி மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர்கள் செ.முத்துராணி (புறநகர்) ம.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம், மாநகர் துணைச் செயலாளர் ரமேஷ்கண்ணா, சரவணன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பபினர் எஸ்.மாயாண்டி, கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன ஆகியோருடன் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினேன்” என்று கூறியுள்ளார்.
The post “தலித் மக்கள் மீது தாக்குதல் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!” சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post “மதுரையில் சாதிய வன்கொடுமை; கைது செய்க..!” தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் first appeared on Madras Murasu.
]]>

சொத்துக்கள் சூறை. ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சாதிஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.
சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமெ தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது” என்று வலியுறுத்தியுள்ளார்.
The post “மதுரையில் சாதிய வன்கொடுமை; கைது செய்க..!” தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் first appeared on Madras Murasu.
]]>The post “சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் கலைஞர்..!” சு.வெங்கடேசன் first appeared on Madras Murasu.
]]>சாணக்கியனும் சாவர்க்கரும் அரசதிகாரத்தின் வீறுகொண்ட வடிவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இக்காலத்தில் சனாதனத்திற்கும் வர்ணக்
கோட்பாட்டிற்கும் எதிரான கலைஞரின் பங்களிப்பு தமிழகத்தின் சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள்.
புகழ் வணக்கம்.
#கலைஞர்100
The post “சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் கலைஞர்..!” சு.வெங்கடேசன் first appeared on Madras Murasu.
]]>