தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, முதலமைச்சர், இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், ‘ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நிதியில் இருந்து ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சார்பில் 10 லட்சம் கொடுக்கிறார்கள். ’தமிழ்க அரசு சார்பில் ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரு.1 லட்சமும் வழங்கப்படும்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரிசா முதலமைசர் நவின்பட் நாயக்கிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் விபத்து குறித்து பேசினார். மருத்துவ உதவிவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் தயார் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி ஒரிசாவில் தவிப்பவர்களை சென்னைக்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

