Home Uncategorized “திண்டுக்கல் வருகிறேன்; தங்கப் பேனா தருகிறேன் !” – முதல் மாணவிக்கு வைரமுத்து வாழ்த்து

“திண்டுக்கல் வருகிறேன்; தங்கப் பேனா தருகிறேன் !” – முதல் மாணவிக்கு வைரமுத்து வாழ்த்து

0
“திண்டுக்கல் வருகிறேன்; தங்கப் பேனா தருகிறேன் !” – முதல் மாணவிக்கு வைரமுத்து வாழ்த்து
இந்த தேர்வு முடிவுகள் 8 -ந்தேதி வெளியானது. பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். மேலும், மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் என மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவருக்கு ஆசிரியர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 600/600 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ள மாணவி நந்தினி, தனக்கு B.Com., CA படிக்க வேண்டும் என்று தனது ஆர்வத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, “எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்துவும் நேரில் சந்தித்து தனது தங்கப் பேனாவை பரிசாக அளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி, உலலகம் முழுவதும் இருந்து நந்தினிக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here