தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு:
மதச்சார்பற்ற, ஜனநாயக இயக்கத் தலைவர்களுடன் பெங்களூரில் வரலாற்றுச் சிறப்புமிகுந்த, ஆக்கப்பூர்வமான கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
பிரிவினை அரசியலின் கொடும் பிடியில் இருந்து இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்கும் உறுதியுடன் “INDIA” என்ற கொள்கைக் கூட்டணியை அமைத்துள்ளோம்.
தேசியம் எனும் முகமூடிக்குக் கீழே மறைந்துள்ள எதேச்சாதிகாரவாதிகள் இறுதியில் வீழ்ந்துபடுவார்கள் என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. ஒற்றுமைதான் நம் வலிமை, நாம் ஒன்றுபட்டால், இந்தியா வெல்லும்!

