அனைத்து ரேஷன் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 30 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை கடந்த ஜூன் 24 அன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும். இத்திட்டத்திற்கான படிவங்களை பதிவு செய்ய வருகின்ற ஞாயிறு ரேஷன் கடைகள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
– தே. சுகன்யா

