Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#viduthalai - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 14 Jun 2023 10:31:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ”சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?” விடுதலை தலையங்கம் https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4/#respond Wed, 14 Jun 2023 07:54:07 +0000 https://madrasmurasu.com/?p=3851 தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேனாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன், `கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லது’ என்று கூறியிருக்கிறார். தொழில்முறையில் மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட `கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்தை மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரித்தது முதல் குழந்தையின் இரண்டரை வயது வரை பகவத் கீதை, […]

The post ”சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?” விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேனாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன், `கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லது’ என்று கூறியிருக்கிறார்.

தொழில்முறையில் மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட `கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்தை மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரித்தது முதல் குழந்தையின் இரண்டரை வயது வரை பகவத் கீதை, ராமாயணம் போன்ற மத நூல்களைப் படித்தல், சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தல், யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது.

இந்த நிலையில் கர்ப்ப சன்ஸ்கார் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ’’கிராமங்களில் கர்ப்பிணிகள் ராமாயணம், மகாபாரதம் உள்பட பிற இதிகாசங்கள் மற்றும் நல்ல கதைகளைப் படிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிகள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது” என்று கூறினார். சுந்தரகாண்டம் என்பது ராமாயணத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை கூறும் சுந்தர காண்டம் என்ன கூறுகிறது என்றால், “தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது; இவர்களைக் கண் காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது” (ராமாயணம் சுந்தரகாண்டம் அத்.3) ராமாயணம் சுந்தர காண்டத்தில் உள்ள ஸ்லோகம்தான் இது. ஒருவேளை இதற்குத்தான் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களைப் படிக்கச் சொல்கிறாரோ?

வேதங்களைப் படித்ததற்காக சம்பூகனை ராமன் கொலை செய்தான். இதனை இன்றும் சத்சங்கம் என்ற பெயரில் வடக்கே சாமியார்கள் கூறிவருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, “மனிதர்கள் அவரவர் வேலைகளைச் செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர். வேதம் படிப்பது, கற்றுக்கொடுப்பது முதல்வருணத்தாரின் பணி, இந்தப்பணியை ஒரு சத்திரியன் செய்தால் நாட்டைப் பாதுகாப்பது யார்? நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகாதா? அதே போல் ஒரு வைசியன் வேதம் படித்தால் வணிகம் குழம்பி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு விடும். உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும். அதே போல் வேதத்தை ஒரு சூத்திரன் படித்தால் மேலே கூறிய மூன்று வருணத்தாருக்கான சேவைகளைச் செய்வது யார்? இதனால் ஒட்டு மொத்த நாட்டின் நிர்வாகமே கெட்டுப் போகும். ஆகையால் தான் சூத்திரனான சம்புகன் அவனது வேலையைப் பார்க்காமல், அவனைச் சேர்ந்தவர்களையும் வேலையைப் பார்க்க விடாமல் வேதம் படித்தான்; சம்பூகன் வேதம் படித்து ஒன்றுமே செய்யப்போவதில்லை, ஆனால் அவனால் இதர வேலைகள் தடைபடும், இதனால் தான் பிரபு ராமர் ஒரு எச்சரிக்கை விடுத்தார்” என்று கூறுகிறார்கள். இதனையே தமிழ்நாட்டில் கூட சில குடுமி பிரசங்கிகள் கதாகாலட்சேபத்தில் கூறியுள்ளனர்.

தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் கூறும் சுந்தரகாண்டத்தில் பெண்களையும் சுதந்திரமாக விடக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதே – அதன்படி பார்த்தால் ஒரு பெண்ணான தமிழிசை சவுந்தரராசன் டாக்டர் ஆனது எப்படி? சுந்தரகாண்டக் கூற்றுக்கு எதிரானது தானே!

மதம் தலைக்கேறினால் நாம் என்ன நினைக்கிறோம் – எங்கே போகிறோம் – அதில் முரண்பாடு முண்டாசு கட்டி நிற்கிறதே என்பதெல்லாம் தெரிவதில்லையா?

சுந்தரகாண்டத்தைப் படிக்கச் சொல்லும் டாக்டர் தமிழிசை, அவசரப்பட்டு டாக்டர் பட்டத்தையும் ஆளுநர் பதவியையும் துறந்து போய் விட வேண்டாம்.

தமிழிசை போன்ற பெண்கள் டாக்டராக வேண்டும், பெரும் பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை – திராவிடர் கழகத்தின் செயல்பாடு!

ஆனால் இவர்கள் வேறு திசைக்கு ஓடுவது ஏன்?

The post ”சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?” விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4/feed/ 0
’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/#respond Fri, 02 Jun 2023 13:04:30 +0000 https://madrasmurasu.com/?p=3233 சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (1.6.2023), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெற்றுக் கொண்டார். தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினர். எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆய்வுரை நிகழ்த்தி பேசியதாவது: திராவிட பல்கலைக்கழகத்தின் […]

The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.

]]>
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (1.6.2023), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெற்றுக் கொண்டார்.

தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினர்.

எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆய்வுரை நிகழ்த்தி பேசியதாவது:

திராவிட பல்கலைக்கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரே ஒரு சாதனையை மட்டும் தான் ஆசிரியர் பாக்கி வைத்திருந்தார் அதுவும் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. அதுதான் விடுதலை களஞ்சியம்.

தமிழர் தலைவர் ஆசிரியருடைய சாதனை என்பது பெரியாருக்கு பின் விடுதலையை விடாமல் நடத்தியது. மேலும், எனக்கு பின்னால் என் வாரிசு என் புத்தகங்கள் தான் என்றார் பெரியார். இன்று, பெரியாருக்கு பிறகு அதிக அளவில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலும் பெரியாரின் புத்தகங்களை பதிப்பிக்காமல் பதிப்பகம் நடத்த முடியாது என்று நினைக்கக் கூடிய அளவில்மாற்றியது ஆசிரியருடைய அடுத்த சாதனை.

பெரியாருக்கு பிறகு திராவிடம் இருக்காது, இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தபோது பெரியாரே பரவாயில்லை என்று எதிரிகளை சொல்ல வைத்தது ஆசிரியரின் சாதனை. அதிலும் குறிப்பாக குடிஅரசு, பகுத்தறிவு போன்ற வார இதழ்களை தொகுப்பது என்பது கொஞ்சம் எளிமையான காரியம். ஆனால், விடுதலை போன்ற நாளிதழை தொகுத்திருக்கிறார் என்றால் இது யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனை.

தமிழர், தமிழினம் பற்றிய செய்திகளை மட்டும் விடுதலையில் திருப்பிப் பார்ப்பதற்கே தனக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்றைக்கு விடுதலை தொகுதியாக வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனையின் தொடக்கம். நீதிக்கட்சியால் திராவிடன் நாளிதழ் தொடங்கப்பட்ட நாள் 01.06.1917. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடன் என்று சொல்லை பயன்படுத்துவது இன எதிரிகளை அச்சுறுத்தும் என்று நம் மூதாதையர்கள் சிந்தித்தார்கள்.

தமிழினத்தின் மானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விடுதலை 89 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதில் 61 ஆண்டுகாலம் ஆசிரியராக நம் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி இருந்திருக்கிறார். இது இந்த இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, இதழியல் வரலாற்றில், உலகளாவிய அளவில் அனைவரும் பாராட்டிப் போற்ற வேண்டிய காரியமாக அமையும் என்றார்.

இந்த தொகுதியில் முதல் செய்தியாக எனது கண்ணில் பட்டது குழந்தை திருமணங்களை பற்றியது. அது 1936 -ல் சாரதா சட்டத்தின்படி குழந்தை திருமணங்களை பற்றி விடுதலையில் செய்தி வந்திருக்கிறது. அன்று இருந்த சனாதனத்தின் புத்தி 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. எனவே, இந்த நூலின் தேவை என்பது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தேவை.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு, அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு காட்டும். குறிப்பாக 1927-ல் பார்ப்பனர்களுக்கு விரோதமாக நீங்கள் பேசத் தொடங்கினால் உங்களை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று காந்தியிடம் பெரியார் சொன்னார். 1947 இல் அதுவே நடந்தது.

1945-இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பாகவே விடுதலையில் ஹிட்லர் தற்கொலை தான் செய்து கொள்வார் என்று தலைப்பு செய்தி வந்தது. இப்படியாக தொடர்ந்து தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற தரிசனத்தை பெற விடுதலையின் ஒவ்வொரு தொகுதியும் வெளிவர வேண்டும். மிகப்பெரிய போர்வாளாய் மட்டுமல்லாமல், கேடயத்தையும் சேர்த்து நமக்காக வழங்கி இருக்கக்கூடிய ஆசிரியருக்கு நன்றி.

இவ்வாறு, எழுத்தாளர் ப.திருமாவேலன் பேசினார்.

The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/feed/ 0
’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/#respond Fri, 02 Jun 2023 12:38:12 +0000 https://madrasmurasu.com/?p=3227 விடுதலை 89-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விடுதலை களஞ்சியம் தொகுதி (1) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 01.06. 2023 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார். விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, முதல் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான தோழர்கள் […]

The post ’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
விடுதலை 89-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விடுதலை களஞ்சியம் தொகுதி (1) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 01.06. 2023 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார்.

விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, முதல் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்து நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

அறிவுப் பெட்டகமாக 1936 இல் தொடங்கி விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள் அனைத்தையும் தொகுத்து இளம் தலைமுறையினருக்கு அருட்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார். இது போன்ற பணிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டும்தான் செய்ய முடியும் அனைத்தையும் ஆவணப்படுத்துதல், தொலைநோக்கு பார்வையோடு அதனை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது என்பது ஆசிரியர் அவர்களது மகத்தான பணிகள்.

இளையோர்களே வியக்கும் வண்ணம் துடிப்போடும், முனைப்போடும் ஆசிரியர் கி.வீரமணி எப்படி இந்த பணியை செய்ய முடிகிறது என்பதே நம்மை சிந்திக்க தூண்டுகிறது; ஊக்கத்தை, உந்துதலை தருகிறது. பகுத்தறிவுக் கருத்துகளை தாங்கிய இதழை நடத்துவது மிக கடினமான காரியம். அதனை தொடர்ந்து நடத்தி, புதிய இளைய தலைமுறையினருக்கு பொறுப்புணர்வோடும், அவர்களை அறிவியல் மனப்பான்மையோடு வளர்த்தெடுக்கும் பணியாக இதை செய்திருக்கிறார்.

வரலாற்றில் பல திரிபுகளை, அவதூறுகளை, வதந்திகளை எதிர் தரப்பினர் பரப்பக்கூடிய சூழ்நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு பாதுகாப்பு; மிகப்பெரிய நல்வாய்ப்பு. 89 ஆண்டுகால விடுதலைக்கு 61 ஆண்டு ஆசிரியராக இருந்து உலக சாதனையை ஆசிரியர் படைத்திருக்கிறார். இந்த சாதனைக்காகவே தனியாக ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று ஆய்வரங்கமே நடத்த வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமானது. மக்களவை தலைவர்கள் முன் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை நிச்சயம் வைக்க வேண்டும். செங்கோல் வைக்க வேண்டிய இடத்தில் அரசமைப்புச் சட்ட முகவுரை இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக தமிழர் தலைவரும், தளபதி அவர்களும், ஜனநாயக சக்திகளும் இருக்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் பெரியார் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார். இந்தியா முழுவதும் பரவ வேண்டிய கருத்து பெரியார் கருத்தாக இருக்கிறது. பிஜேபி கட்டியமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரமல்ல பிராமண ராஷ்டிரா. தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களத்திலும் மூன்றாவது குழலாக விடுதலைச் சிறுத்தைகள் உடன் இருக்கும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

The post ’’இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு பெரியார் தேவை..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/feed/ 0