acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ‘’கல்வி பங்களிப்பு ஈடு இணையில்லாதது..! காமராஜர் பிறந்த நாளில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“திரு கே காமராஜ் அவர்களை அவரது பிறந்த தினத்தில் நினைவுகூர்கிறேன். அவரின் தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைப் பண்புக்காகவும், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளுக்காகவும் பெரிதும் மதிக்கப்படுகிறார். கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையில்லாதது. அவரது எண்ணங்களை நிறைவேற்றவும், நீதியும், கருணையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கவும் நாம் உறுதியேற்போம்”

காமராஜர் வரலாறு:
பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.
காமராஜர் கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் போன்றும் போற்றப்பட்டவர். இளம் வளதியலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.

அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1947-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர். 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.
பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக உள்ளது. காமராஜர் பயன்படுத்திய பொருட்கள் அங்கு, காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
The post ‘’கல்வி பங்களிப்பு ஈடு இணையில்லாதது..! காமராஜர் பிறந்த நாளில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>The post ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ first appeared on Madras Murasu.
]]>இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி இன்றைய தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு இப்போதுதான் புரிகிறது. பத்தாண்டு காலம் நேரு எதிர்ப்பு பிரச்சாரத்தைச் செய்து வந்த மோடி அவர்கள், புதிய நாடாளுமன்றத்துக்குப் புறப்படு வதற்கு முன்னால் ஆற்றிய உரையில் நேருவைப் புகழ்ந்துவிட்டார். அதற்காகவே அவரை பாராட்டத்தான் வேண்டும்.
ஒன்றிய கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்த அமைப்பு வெளியிட்ட பதாகையில் ஜவஹர்லால் நேருவின் படமும் இல்லை, மெளலானா அபுல் கலாம் ஆசாத் படமும் இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து 9 ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவின் படமே மறைக்கப்பட்டது. நேருவின் பெயரை 2022ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிடவில்லை.
டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இருக்கிறது. இதன் பெயரையே பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என்று மாற்றி விட்டார்கள். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களால் உருவாக்கப்பட்டது இது. இதனை முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அத்தகைய புகழுக்குரியது இது. இதன் பெயராக இருந்த நேரு பெயரை கடந்த ஆகஸ்ட் 14 அன்றுதான் தூக்கினார்கள்.
கோவா பிரச்சினையில் பிரதமர் நேரு சரியாக நடந்து கொள்ளவில்லை, தனது உலகளாவிய இமேஜை காப்பாற்றிக் கொள்வதில்தான் அக்கறை செலுத்தினார் என்று நாடாளுமன்றத்தில் 2022 பிப்ரவரி மாதம் பேசினார் பிரதமர் மோடி.
“காந்தி, நேரு என குடும்பப் பெயர்களில் 600 திட்டங்கள் இருந்ததாகச் செய்தி படித்தேன். அவர்களுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏன் நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைப்பது இல்லை? நேருவின் பெயரை எங்காவது நாங்கள் குறிப்பிட மறந்துவிட்டால் காங்கிரசார் அப்செட் ஆகிறார்கள். நேரு மிகப்பெரிய
மனிதர். பிறகு ஏன் அவரது பெயரை யாரும் குடும்பப் பெயராகப் பயன்படுத்துவது இல்லை? நேரு பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்? பயம்?” என்று கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் பேசினார் பிரதமர் மோடி.
பெரோஸ் காந்தி –- என்ற பெயரை வைத்தே இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி எனச் சொல்லப்பட்டது. இதனை தான் ‘நேரு’ என்று ஏன் வைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேட்டார் பிரதமர்.
காஷ்மீர் விவகாரத்தில் நேரு சரியாக நடந்து கொள்ளவில்லை என்று விமர்சித்தார் ( 2022 அக்டோபர்) பிரதமர் நேருவுக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று (2018 பிப்ரவரி) நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி. இப்படி எல்லாம் தொடர்ந்து நேருவை அவமானப்படுத்தி வந்தவர் தான் பிரதமர் மோடி. ஆனால் இப்போது நாக்கை அப்படியே திருப்பிப் போட்டுவிட்டார்.” ‘உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்தியாவே விழித்துக் கொண்டிருக்கிறது’ என்ற பிரதமர் நேருவின் பேச்சு தான் உலகமெங்கும் பெரும் பாராட்டைப் பெற்றது. அந்தப் பேச்சு தற்போது நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. நேரு,சாஸ்திரி, இந்திரா, நரசிம்மராவ், வாஜ்பாய் என்று பல்வேறு பிரதமர்கள் தங்கள் சிறப்பான தலைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திரா காந்தி காலத்தில் வங்க தேசம் உருவானதையும் நினைவூட்டி இருக்கிறார் பிரதமர். இராஜேந்திர பிரசாத், அண்ணல் அம்பேத்கர், மாவீரன் பகத்சிங் ஆகியோரையும் நினைவு கூர்ந்துள்ளார் பிரதமர்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றை இப்போதுதான் அவர் படிக்க ஆரம்பித்து பேசுகிறார் என்பதை இதன் மூலமாக உணர முடிகிறது. இதற்கே ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது!
ஒன்பது ஆண்டுகள் -– ஒன்பது முறை –- ஒன்பது சிறைகளில் இந்தியாவின் விடுதலைக்காக அடைக்கப்பட்டு இருந்தவர் நேரு. ‘என்னுடைய அரசியல் வாரிசு நேருதான்’ என்று காந்தி சொன்னார். ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தலைமை மகுடம் நேருவுக்குத்தான் போகவேண்டும், ஏனென்றால் அவர்தான் முழுமையான இந்தியர்’ என்றும் காந்தி சொன்னார். அத்தகைய ஆட்சியை தான் நேருவும் வழங்கினார்.
பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழி வாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டுவந்து -– அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார். வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார். மதச்சார்பற்ற மனிதராக அவர் இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார். மதச்சார்பின்மையின் இலக்கணமாகத் திகழ்ந்தார். கூட்டாட்சி நெறிமுறைகளை அவர் அடிக்கடி பேசினார். அணிசேராக் கொள்கையை கடைப்பிடித்தார். அதனால் உலகத் தலைவர்கள் அனைவரும் அவரை வணங்கினார்கள்.
இத்தகைய நேருவின் பெருமையை மறைக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். நல்ல மாற்றம் தான்!
The post ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ first appeared on Madras Murasu.
]]>