acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ஒற்றை அங்குசம்..!’’ வீரசோழன் க.சோ. திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>வனமேறிய உடலை
மதிய சூட்டை கால்களில் தந்தோம்
வறண்ட நாவில்
சொம்பு நீரை தீர்த்தமாக்கினோம்
பத்து ரூபாய் ஆசிகளில்
நம்பிக்கை பெற்றோம்
ஊருக்குள் நடக்கையில்
ஓடு வீடுகளும் நிலை தடுமாறும்
ஓய்யார வீதியில்
காதுகளையளந்து கதை சொல்லும்
கோயில் வாயிலில்
மதங்களிட்டோம் “மதம்” பிடித்து
மண்டியிட்டும் கூக்குரலிடும்
அங்குசம் பேசும் சத்தியங்களில்
வனத்தை அடகு வைத்தோம்
மானுட கூட்டிற்கு வந்ததும்
வனக்கூடு இதயமிழந்த கதை
காது வளர்த்த பாட்டி கதைகள்
வெற்றிலையில் புதைத்து வைக்கும்
மழை வெயில் பட்டுத்தெறிக்க
கலையாத உடலை கட்டழகாய்
நீண்ட கையால் நீடு துயிலை
சரிசெய்யும் காற்றுக்குழல்..
பிளிறும் குரலில்
வனங்கள் தலையசைக்கும்
ஆண்டின் நாளெல்லாம் நகர்வலம்தான்
மீதியிருக்கும் நிமிடமெல்லாம்
கூர்க்காவப்போல காவல் செய்யும் தொழிலாளிதான்
சுதந்திரப்பிடி மறுத்து கட்டளையால்
காட்சிகளில் மடியும்
கால்களின் ஒரங்களில்
வருடங்கள் கணக்குகள் செய்திருக்கும்
கண்களினூடே சிதைவிடத்து
வெளிச்சப் பரல்களை
பட்டுப் பாடூன்றும் களிறாய்
பார்த்தவிடங்களிலாம் பரவசம் செய்யும்
மொழிக் கூட்டைக் கற்றப் பாகன்
இதயக்கூட்டைக் கற்க மறந்த கதை
கோவில்களில் வலம் வருகிறது
ஒற்றை அங்குசம்!
#யானைகள் #தினம் #இன்று !
– வீரசோழன் க.சோ. திருமாவளவன்
The post ’’ஒற்றை அங்குசம்..!’’ வீரசோழன் க.சோ. திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post ’’மின்வேலிகள் அமைக்க புதிய விதிமுறைகள்..!’’ அறிவிக்கை வெளியீடு first appeared on Madras Murasu.
]]>வனவிலங்குகளைப் பாதுகாப்பதில், தமிழ்நாடு அரசு அதீத ஈடுபாடு காட்டி வருகிறது. இந்நிலையில், உயர் மின்னழுத்த மின் வேலிகளால், மின்விபத்து ஏற்பட்டு, வன விலங்குகள் குறிப்பாக, யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. எனவே, வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கு, மின் வேலிகளை அமைப்பதற்கான தரப்படுத்தப்பட்ட அளவுகோலுடன் கூடிய விதிமுறைகளை நிர்ணயிப்பது இன்றியமையாததாகிவிட்டது.
அதே வேளையில், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகளால் சேதமடையும் விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலனைப் பேணுதலும் முற்றிலும் அவசியமாகிறது. விவசாயிகள் தங்கள் பயிரை பாதுகாப்பதற்கு தரப்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட விதிமுறைகள் உதவும்.
முதல் முயற்சியாக, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023-னை அறிவித்து அரசிதழில் (03.07.2023) அறிவிக்கை செய்துள்ளது. இது சூரியசக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதையும், விவசாய நிலங்களைச் சுற்றி ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்வதையும், தரப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் வழிவகுக்கும்.
அரசு அறிவிக்கை செய்துள்ள விதிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள், தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
அறிவிக்கை செய்யப்பட்ட, காப்புக்காட்டின் வனப் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஏற்கெனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள், தங்கள் வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கொண்ட ஒரு கூட்டுக் குழு, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கள ஆய்வு செய்து, பதிவுப் புத்தகத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர், மின்வேலி அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்து சரிபார்த்த பிறகு, மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் விவரக்குறிப்புகளை சரிபார்த்து உரிய ஆய்விற்கு பிறகு ஒப்புதல், குறைப்பு அல்லது நிராகரித்து, விண்ணப்பத்தின் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
இந்த விதிகள் வெளியிடப்பட்ட தேதியில் ஏற்கனவே மின் வேலிகள் அமைத்துள்ள நில உரிமையாளர், இந்த விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, அறுபது நாட்களுக்குள் பதிவுச் சான்றிதழைப் பெறுவதற்கு, மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதி கிடைத்தவுடன், சொத்தின் உரிமையாளர் அனுமதி பெற்ற நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் மின் வேலியை அமைத்து, உறுதிமொழியுடன் மின்வேலியை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் குழுவின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளின் தரம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
The post ’’மின்வேலிகள் அமைக்க புதிய விதிமுறைகள்..!’’ அறிவிக்கை வெளியீடு first appeared on Madras Murasu.
]]>The post ’’யானைகளை விரட்டும் தேனீ..!’ கென்யா விவசாயிகளின் டெக்னிக் first appeared on Madras Murasu.
]]>வளர்ந்து நிற்கும் பயிர்களை யானைக் கூட்டம் மிக வேகமாக மேய்ந்து பசியைத் தணித்துக் கொள்கிறது. அவற்றை விரட்டப் பல வழிகளைக் கைவசம் வைத்திருக்கின்றனர் விவசாயி கள். தேனீக்களைப் பறக்கவிட்டு யானைகளை வரவிடாமல் தடுப்பது.. யானைகளுக்குப் பிடிக்காத மிளகாய், இஞ்சி, சூரியகாந்தி மலர் முதலியவற் றைப் பயிரிடுவது.
இதனால் யானை களுக்கும் பாதிப்பு இல்லை. மனிதர்களுக்கும் பாதிப்பில்லை, இதற்காக வயலின் வரப்புகளில் தேனீவளர்ப்புப் பண்ணைகள் வைத்து உள்ளனர். யானைகள் அப்பகுதியில் வந்தால் அதன் அதிர்வில் தேனீக்கள் ரீங்காரமிட்டுப் பறக்கும். இந்த ரீங்கார ஓசை யானைகளுக்குப் பிடிக்காது. ஆகையால் அவ்விடத்தை விட்டு யானைகள் விலகி தூரம் சென்று விடும், இதனால் யானைகளுக்கும் பாதிப்பில்லை, விவசாயமும் பாதிக்காது
உலக நாடுகளில் யானைகள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து வசிக்கும் நபர்கள் அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதும், நவீன அல்ட்ரா சவுண்ட் கருவிகளை வைத்து யானைகளை குழப்புவதுடன் உச்சக்கட்டமாக மின்சார வேலிகள் அமைத்து யானைகளைக் கொல்வது போன்றவற்றை செய்து வருகின்றனர். அவர்களும் கென்ய விவசாயிகளைப் போல் செலவில்லாமல் யானைகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற மாற்றுவழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
The post ’’யானைகளை விரட்டும் தேனீ..!’ கென்யா விவசாயிகளின் டெக்னிக் first appeared on Madras Murasu.
]]>The post ”யானைகள் பாதுகாப்பு ; தமிழ்நாடு அரசு தீவிரம்..!” first appeared on Madras Murasu.
]]>கோயம்புத்தூர், போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு 19.06.2023 அரசாணை வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் தற்காலிக யானைகள் முகாமாக ஏற்கனவே செயல்பட்டு வரும் சாடிவயலில், புதிய யானைகள் முகாம் அமைப்பதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023 மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. யானை கொட்டகைகள், கால்நடை மருத்துவ வசதிகள், சமையலறை மற்றும் யானை புகா அகழிகள், யானைகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் ஆகியவற்றை உருவாக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.
இந்த முயற்சிகள் மூலம், யானைகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி, முகாம் யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். தேவையான வசதிகளுடன் கூடிய சிறப்பு போக்குவரத்து உட்பட மீட்பு பணியினை வலுப்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்தவும் அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. இத்தொகை, முகாமில், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், யானை பராமரிப்பாளர்கள், மற்றும் காவடிகளுக்கான பயிற்சி, பார்வையாளர்களுக்கான காட்சிக்கூடம் அமைத்தல், உணவு தயாரிக்கும் பகுதியை மேம்படுத்துதல் மற்றும் யானைகளுக்கான குடிநீர் வசதி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
இதுதவிர, 15.03.2023 அன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தெப்பக்காடு மற்றும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 91 யானை பராமரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் கட்டுவதற்கு ரூ.9.10 கோடியை அரசு அனுமதித்தும் ஆணை வெளியிட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் காப்பகம் பராமரிப்பாளர்களுக்கு 44 வீடுகளும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் காப்பகத்தில் 47 வீடுகளும் கட்டப்படும்.
கடந்த ஆண்டு, புதிய யானைகள் காப்பகமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 1,19,748.26 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலைப் பகுதியை அகத்தியர் மலை யானைகள் காப்பகம் எனும் பெயரில் புதிய யானைகள் காப்பகமாக அரசு அறிவித்தது. இந்த ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு 13 யானைப் பராமரிப்பாளர்கள் மற்றும் காவடிகள் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு முதன்முறையாக சிறப்பு பயிற்சிக்காக அனுப்பியுள்ளது.
The post ”யானைகள் பாதுகாப்பு ; தமிழ்நாடு அரசு தீவிரம்..!” first appeared on Madras Murasu.
]]>