acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’77-வது சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு திரௌபதி முர்மு ஆற்றிய உரை..!’’ first appeared on Madras Murasu.
]]>நமது 77வது சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நம் அனைவருக்கும் புகழ்வாய்ந்த நன்னாளாகும். ஏராளமான மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நகரங்களிலும், கிராமங்களிலும், இந்தியாவின் எல்லா இடங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும், நமது சுதந்திர தின விழாவைக் கொண்டாட தயாராகி வருவது பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகும். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை மக்கள் மகத்தான ஆர்வத்துடன் கொண்டாடிவருகிறார்கள்.
தேசபக்திப் பாடல்கள்..!
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எனது குழந்தைப் பருவ நாட்களை நினைவூட்டுகின்றன. எங்களின் கிராமப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற உற்சாகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது எங்களில், மெய்சிலிர்ப்பு ஏற்பட்டதை நாங்கள் உணர்ந்தோம். எங்கள் இதயங்களில் முழுமையான தேசபக்தப் பெருமிதத்துடன், தேசியக் கொடிக்கு நாங்கள் வணக்கம் செலுத்தி, தேசிய கீதம் பாடினோம். இனிப்புகள் வழங்கப்பட்டு, தேசபக்தப் பாடல்கள் பாடப்பட்டன. இவை எங்களின் மனங்களில் பல நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்தன. நான் ஒரு பள்ளி ஆசிரியரானபோது, இந்த அனுபவங்களை மீண்டும் பெறும் வாய்ப்பைப் பெற்றது என் அதிர்ஷ்டமாக இருந்தது.
நாம் வளரும்போது, குழந்தைகளாக நாம் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் தேசிய விழாக்களைக் கொண்டாடுவதுடன் தொடர்புடைய தேசபக்த உணர்வின் தீவிரம் எப்போது குறையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் வெறுமனே தனிநபர்கள் அல்ல. மகத்தான மக்கள் சமூகத்தின் ஒரு பகுதி என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த சமூகம், மிகப்பெரியதாகவும், மகத்தானதாகவும் விளங்குகிறது. இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமக்களைக் கொண்ட சமூகமாகும்.
இந்தியா ஜனநாயகத்தின் தாயகம்..!
நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது மகத்தான ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்ற உண்மையை கொண்டதாகும். சாதி, மதம், மொழி மற்றும் பிராந்தியத்தைத் தவிர, நம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் உள்ளன. நாம், நமது குடும்பங்கள் மற்றும் தொழில்களுடனும் அடையாளம் காணப்படுகிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் அடையாளம் உள்ளது. அதுதான் இந்தியக் குடிமக்கள் என்ற நமது அடையாளம். இந்த நாட்டில் நாம் ஒவ்வொருவரும் சமத்துவமான குடிமக்கள்; நாம் ஒவ்வொருவரும் சம வாய்ப்பை, சம உரிமைகளை, சமமான கடமைகளைப் பெற்றிருக்கிறோம்.
ஆனால் எப்போதுமே இப்படி இருந்ததில்லை. இந்தியா ஜனநாயகத்தின் தாயகமாகும். பண்டைக் காலத்திலிருந்தே நாம் அடித்தளநிலையில் ஜனநாயக அமைப்புகளைக் கொண்டிருந்தோம். ஆனால் நீண்டகால காலனிய ஆட்சி அவற்றை அழித்துவிட்டது. 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்த தேசம் ஒரு புதிய விடியலுடன் விழித்தெழுந்தது. நாம் அந்நிய ஆட்சியிலிருந்து மட்டும் விடுதலைப் பெறவில்லை. நமது நிலையை மாற்றி எழுதும் சுதந்திரத்தையும் பெற்றோம்.
புகழ்மிக்க முன்னுதாரணம்..!
நமது சுதந்திரத்துடன் அந்நிய ஆட்சியாளர்கள் பல காலனி நாடுகளில் இருந்து வெளியேறும் சகாப்தம் தொடங்கியது. காலனித்துவம் அதன் முடிவை நெருங்கியது. நமது சுதந்திரப் போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் நோக்கம் நிறைவேறியது மட்டுமின்றி, எவ்வாறு போராடப்பட்டது என்பதும்தான். மகாத்மா காந்தி தலைமையின் கீழும், அசாதாரண தொலைநோக்குப் பார்வை கொண்ட எண்ணற்ற தலைவர்களின் கீழும், நமது தேசிய இயக்கம் தனித்துவமான லட்சியங்களால் உத்வேகம் பெற்றது. காந்திஜியும் மற்றவர்களும் இந்தியாவின் ஆன்மாவைத் தூண்டியதோடு, தேசம் தனது நாகரிக மதிப்புகளை மீண்டும் கண்டறிய உதவினர். நமது எதிர்ப்பின் திருப்புமுனையாக அமைந்த, ‘வாய்மையும் அகிம்சையும்’ என்ற இந்தியாவின் புகழ்மிக்க முன்னுதாரணம் உலகெங்கிலும் உள்ள பல அரசியல் போராட்டங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.
பெண்கள் நாட்டின் வளர்ச்சி..!
சுதந்திர தின விழாவையொட்டி, அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்துவதில் எனது சக குடிமக்களுடன் நானும் இணைகிறேன். அவர்களின் தியாகங்கள் உலக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உரிய இடத்தை மீண்டும் பெறுவதை சாத்தியமாக்கின. பாரத மாதாவுக்காக, மதாங்கினி ஹஸ்ரா, கனக்லதா பரூவா போன்ற மகத்தான சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். சத்தியாகிரகத்தின் கடினமானப் பாதையின் ஒவ்வொரு தடத்திலும் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு இணையாக அன்னை கஸ்தூர்பா இருந்தார்.
சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், ரமா தேவி, அருணா ஆசஃப் அலி, சுச்சேதா கிருபளானி போன்ற பல மகத்தான பெண் தலைவர்கள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் தன்னம்பிக்கையுடன் சேவை செய்ய எதிர்காலப் பெண் சந்ததிகளுக்கு உத்வேகமூட்டும் லட்சியங்களை அளித்துள்ளனர். பெண்கள் இன்று நாட்டின் வளர்ச்சி மற்றும் சேவையின் ஒவ்வொரு துறையிலும் விரிவான பங்களிப்பை செய்து, நாட்டின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். சில தசாப்தங்களுக்கு முன் கற்பனை செய்து பார்க்க இயலாத பல துறைகளில் இன்று நமது பெண்கள் தங்களுக்கு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்..!
நமது நாட்டில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பொருளாதார அதிகாரமளித்தல், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது. பெண்கள் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்குமாறு குடிமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நமது சகோதரிகளும், மகள்களும் தைரியமாக சவால்களை சமாளித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்களில் ஒன்றாக பெண்களின் மேம்பாடு இருந்தது.
சுதந்திர தினம் என்பது நமது வரலாற்றோடு மீண்டும் இணைவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். நமது நிகழ்காலத்தை மதிப்பிடுவதற்கும், நமது முன்னோக்கிய பாதையைப் பற்றி சிந்திப்பதற்குமான சந்தர்ப்பமும் ஆகும். தற்போதைய நிலையைக் காணும்போது, உலக அரங்கில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெற்றிருப்பது மட்டுமின்றி, சர்வதேச அளவில் தனது நிலையை மேம்படுத்தியும் இருக்கிறது. இந்திய வம்சாவளியினருடனான எனது சந்திப்புகள் மற்றும் உரையாடல்களின் போது, இந்திய வளர்ச்சியில் ஒரு புதிய நம்பிக்கை இருப்பதை நான் கவனித்தேன். உலகெங்கிலும் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான இலக்குகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்வதேச அமைப்புகளில், குறிப்பாக ஜி-20 நாடுகளின் தலைமைத்துவத்தை அது ஏற்றுள்ளது.
மனிதகுல மேம்பாடு..!
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினை ஜி-20 பிரதிநிதித்துவம் செய்வதால், உலகளாவிய உரையாடலை சரியான திசையில் வடிவமைக்க உதவும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இது உள்ளது. ஜி-20 தலைமைத்துவத்துடன், வர்த்தகம் மற்றும் நிதித் துறையில் முடிவுகள் எடுப்பதில் சமமான முன்னேற்றத்தை நோக்கி இந்தியாவை நகர்த்த முடியும். வர்த்தகம் மற்றும் நிதிக்கு அப்பால், மனிதகுல மேம்பாடு தொடர்பான விஷயங்களும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. பூகோள எல்லைகளால் வரையறுக்கப்படாத, அனைத்து மனிதகுலம் சம்பந்தப்பட்ட, உலகளாவிய பல பிரச்சனைகள் உள்ளன. உலகளாவிய பிரச்சனைகளைக் கையாள்வதில் இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவத்துடன், உறுப்பு நாடுகள் இந்த விஷயங்களில் பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
ஜி-20 அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த ராஜிய ரீதியான நடவடிக்கை அடித்தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகும். மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்க முதன் முறையாக இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதையும், ஜி -20-ன் கருப்பொருட்களை அறிந்துகொள்வதையும் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஜி-20 தொடர்பான நிகழ்வுகளில் அனைத்துக் குடிமக்களும் ஆர்வமாக உள்ளனர்.
சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவோம்..!
அதிகாரமளித்தல் உணர்வுடன் இந்த உற்சாகம், சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் தேசம் அனைத்து முனைகளிலும் பெரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் கொந்தளிப்பான காலங்களில் நெகிழ்ச்சியுடன் இருப்பது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயைத் தொடர்ந்து சர்வதேச நிகழ்வுகள் நிச்சயமற்ற நிலையை அதிகரித்துள்ளதால், உலகப் பொருளாதாரம் ஒரு சிக்கலான கட்டத்தைக் கடந்து வருகிறது. ஆனாலும், கொந்தளிப்பான சூழலை மிகச் சிறப்பாக அரசால் கையாள முடிகிறது. இந்தியா, சவால்களை வாய்ப்புகளாக மாற்றி அதிக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி-ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நமக்கு உணவளிக்கும் அன்னதாதாக்களான விவசாயிகள் நமது பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களுக்கு தேசம் கடன்பட்டிருக்கிறது.
உலகளாவிய பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அரசும், ரிசர்வ் வங்கியும் அதைக் கட்டுப்படுத்தியுள்ளன. அதிக பணவீக்கத்திலிருந்து சாமானிய மக்களைப் பாதுகாப்பதிலும், ஏழைகளுக்கு விரிவான பாதுகாப்பை வழங்குவதிலும் அரசு வெற்றி கண்டுள்ளது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன.
பாரம்பரியத்தை வளப்படுத்த வேண்டும்..!
தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் இருமுனை உத்தியால் இயக்கப்படுகிறது. ஒருபக்கம் தொழில் செய்வதை எளிதாக்குவதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் நிறுவன சக்திகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு தொடர்ச்சியான உந்துதல் உள்ளது; மறுபக்கம், பல்வேறு துறைகளில் தேவைப்படுவோருக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் விரிவாக்கப்பட்ட நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது எங்கள் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. இது கடந்த தசாப்தத்தில் ஏராளமான மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது. அதேபோல், பழங்குடியினரின் நிலையை மேம்படுத்தவும், முன்னேற்றப் பயணத்தில் சேர அவர்களை ஊக்குவிக்கவும் குறிப்பிடத்தக்க திட்டங்கள் உள்ளன. நமது பழங்குடி சகோதர சகோதரிகள், நவீனத்துவத்தை தழுவும் அதேவேளையில் தங்கள் பாரம்பரியத்தையும் வளப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார முன்னேற்றம்..!
பொருளாதார வளர்ச்சியுடன், மனித மேம்பாடு சம்பந்தப்பட்டவற்றுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியராகவும் இருந்துள்ள நான், சமூக மேம்பாட்டிற்கான மிகப்பெரிய கருவி கல்வி என்பதை உணர்ந்துள்ளேன். தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள கல்வியாளர்களுடனான எனது தொடர்புகளிலிருந்து, கற்றல் செயல்முறை மிகவும் நெகிழ்வானதாக மாறியுள்ளது என்பதை நான் அறிகிறேன்.
பண்டைய விழுமியங்களை நவீனத் திறன்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தொலைநோக்கு கொள்கை, கல்வித் துறையில் பல ஆண்டுகளாக இல்லாத மாற்றங்களைக் கொண்டு வரும்; நாட்டில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அதன் மக்களின், குறிப்பாக இளம் தலைமுறையினரின் கனவுகளால் இயக்கப்படுகிறது, அவர்களுக்கு எல்லையற்ற வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் முதல் விளையாட்டு வரை, நமது இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கான புதிய எல்லைகளைக் கண்டறிந்துள்ளனர்.
நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது..!
புதிய இந்தியாவின் விருப்பங்கள் எல்லையற்ற பரிமாணங்களைக் கொண்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி, சிறந்து விளங்குகிறது. இந்த ஆண்டு, இஸ்ரோ சந்திரயான்-3 ஐ செலுத்தியுள்ளது. ‘விக்ரம்’ என பெயரிடப்பட்டுள்ள லேண்டர், ‘பிரக்யான்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரோவர் ஆகியவை அடுத்த சில நாட்களில் நிலவில் தரையிறங்க உள்ளன. இது நம் அனைவருக்கும் பெருமிதம் கொள்ளும் தருணமாக இருக்கும், நான் அதை எதிர்நோக்கி இருக்கிறேன். நிலவுக்கான நமது பயணம் எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கான ஒரு படிக்கட்டு மட்டுமே. நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
விண்வெளியிலும், பூமியிலும் நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்களின் பணிகளால் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, தொழில் முனைவு உணர்வை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.50,000 கோடி செலவில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளை நமது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சியையும், மேம்பாட்டையும் விதைக்கும், வளர்க்கும், ஊக்குவிக்கும்.
சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி..!
நம்மைப் பொறுத்தவரை அறிவியலோ, அறிவோ முடிவானதல்ல, அனைத்து மக்களின் நலனுக்கான சாதனங்கள் மட்டுமே. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் உடனடி கவனத்திற்குரிய ஒரு பகுதியாக பருவநிலை மாற்றம் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நாம் பல தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளோம். இந்தியாவின் சில பகுதிகள் அசாதாரண வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளன. அதேசமயம், வறட்சியை சந்திக்கும் இடங்களும் உள்ளன. இந்த நிகழ்வுகளுக்கு புவி வெப்பமயமாதல் நிகழ்வும் காரணமாகக் கூறப்படுகிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்காக உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய நிலைகளில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். இந்தச் சூழலில், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் முன்னெப்போதும் இல்லாத இலக்குகளை நாம் அடைந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணிக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதில் நமது நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கான லைஃப் என்ற தாரக மந்திரத்தை உலக சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
தீவிர வானிலை நிகழ்வுகள் அனைவரையும் பாதிக்கின்றன. ஆனால் அவற்றின் தாக்கம் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் மீது மிகவும் கடுமையாக உள்ளது. குறிப்பாக நகரங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளை மிகவும் உறுதிமிக்கதாக மாற்றுவது அவசியம்.
நமது வேர்களுக்குத் திரும்புவோம்..!
இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், பேராசை கலாச்சாரம் உலகை இயற்கையிலிருந்து விலக்கி வைக்கிறது. நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை இப்போது உணர்கிறோம். இயற்கைக்கு மிக நெருக்கமாகவும் அதனுடன் இணக்கமாகவும் வாழும் பல பழங்குடிச் சமூகங்கள் இன்னமும் உள்ளன என்பதை நான் அறிவேன். அவற்றின் மதிப்பு மற்றும் வாழ்க்கை முறை பருவநிலை நடவடிக்கைக்கு விலைமதிப்பற்ற படிப்பினைகளை வழங்குகின்றன.
பழங்குடிச் சமூகங்கள் காலம் காலமாக உயிர்வாழும் ரகசியத்தை ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்லலாம். அந்த ஒற்றைச் சொல் ‘இரக்கவுணர்வு’. இயற்கை அன்னையின் சக குழந்தைகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது அவர்களுக்கு இரக்கம் உள்ளது. இருப்பினும், சில நேரங்களில், உலகம் இரக்கவுணர்வின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால், அத்தகைய காலகட்டங்கள் வெறும் பிறழ்வுகள் மட்டுமே என்றும், கருணையே நமது அடிப்படை இயல்பு என்றும் வரலாறு காட்டுகிறது. பெண்கள் அதிக அளவில் இரக்கவுணர்வு கொண்டுள்ளனர் என்பதும், மனிதகுலம் வழிதவறிச் செல்லும்போது அவர்கள் வழி காட்டுகிறார்கள் என்பதும் எனது அனுபவம்.
அனைவரும் உறுதியேற்போம்…!
நமது நாடு புதிய தீர்மானங்களுடன் ‘அமிர்த காலத்திற்குள்’ நுழைந்துள்ளது, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். தனிமனித மற்றும் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க பாடுபடுவதற்கான நமது அடிப்படைக் கடமையை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம். இதன் மூலம் நாடு தொடர்ந்து முயற்சியிலும், சாதனையிலும் உச்சநிலைகளுக்கு செல்லும்.
நமது அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டும் ஆவணம் ஆகும். அதன் முகவுரையில் நமது சுதந்திரப் போராட்ட லட்சியங்கள் உள்ளன. நமது தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களின் கனவுகளை நனவாக்க நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் முன்னேறுவோம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உங்களுக்கு, குறிப்பாக எல்லைகளைப் பாதுகாக்கும் நமது வீரர்களுக்கும், உள்நாட்டுப் பாதுகாப்பை வழங்கும் படைகளின் வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
ஜெய் ஹிந்த்!
ஜெய் பாரத்!
The post ’’77-வது சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு திரௌபதி முர்மு ஆற்றிய உரை..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’எதிர்காலம் உங்களுக்கே சொந்தம்..!’’ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு பேச்சு first appeared on Madras Murasu.
]]>சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடந்தது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கடந்த கால மற்றும் இந்நாள் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை, அறிவு மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புக்காக நான் பாராட்டுகிறேன்.
இந்தப் பகுதி நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தின் செழுமையான இந்தியாவின் மரபுகள் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும். திருக்குறளில் பொதிந்துள்ள மகத்தான ஞானம் பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. மாபெரும் பக்திக் கவிதை, மரபு தமிழகத்தில் தொடங்கி, அலைந்து திரிந்த மகான்களால் வடதிசைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ்நாட்டின் கோயில் கட்டிடக்கலை, சிலைகள் மற்றும் சிற்பங்கள் மனித மேன்மைக்கு புகழ் சேர்க்கின்றன. தங்களிடம் உள்ள அபரிமிதமான வளமான கலாச்சார பாரம்பரியத்தில் பெருமையுடன், இளம் மாணவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவு சமூகத்தின் முக்கிய குடிமக்களாக மாற வேண்டும்.
இப்பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 1,85,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாணவிகள் ஆவர். இன்று தங்கப் பதக்கம் பெற்ற 105 மாணவர்களில் 70 விழுக்காட்டினர் மாணவிகள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைப் பல்கலைக்கழகம் பாலின சமத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம். படித்த பெண்களால் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும், பல்வேறு துறைகளில் தலைமைத்துவத்தை வழங்க முடியும், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
1857-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உங்கள் பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் அறிவைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு ஊக்கியாக இருந்து வருகிறது.
அதன் 165 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தில், உங்கள் பல்கலைக்கழகம் உயர்தர கல்வியைப் பின்பற்றி, அறிவார்ந்த ஆர்வத்தையும் விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் சூழலை வழங்குகிறது. எண்ணற்ற அறிஞர்களையும், தலைவர்களையும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களையும் உருவாக்கி, கற்றலின் புகலிடமாக அது இருந்து வருகிறது. அவை உலகளாவிய சூழலில் கற்றல் உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உங்கள் பல்கலைக்கழகம் ஒரு கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டுள்ளது, இந்தியாவின் தென் பிராந்தியத்தில் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் உருவாக்கத்திலும், முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்கள் பல்கலைக்கழகம் ஒரு வளமான வரலாறு மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர்கள் ஆறு பேர் இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருந்து, இன்று நீங்கள் நடந்து செல்லும் அதே நடைபாதைகளில் நடந்தனர் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.
இப்பல்கலைக்கழகத்தின் எனது முன்னோடிகளான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், திரு.வி.வி.கிரி, திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி, திரு.ஆர்.வெங்கட்ராமன், திரு.கே.ஆர்.நாராயணன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய புகழ்பெற்ற சுதந்திரப்போராட்ட வீரர் திரு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார்.
இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் டாக்டர் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் அறிவியல் உலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி கே.சுப்பாராவ் ஆகியோர் நீதித்துறையை வளப்படுத்தியுள்ளனர். உங்கள் பல்கலைக்கழகம் இத்தகைய சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது என்ற எண்ணமே, கற்றல் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் சிறந்து விளங்க பாடுபடச் செய்ய வேண்டும்.
இந்தியாவின் நைட்டிங்கேல் திருமதி சரோஜினி நாயுடு மற்றும் உறுதி மிக்க திருமதி துர்காபாய் தேஷ்முக் ஆகியோரின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்களும் இப்பல்கலைக்கழக மாணவர்கள்தான். அந்த இரண்டு மகத்தான பெண்களும் தங்கள் காலத்தை விட மிகவும் முன்னேறியிருந்தனர். அவர்கள், பல தலைமுறை இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் உன்னதமான பெண்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும், குறிப்பாக மாணவிகள் அவர்களது தனித்துவமான கதைகளிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்.
கடந்த மாதம், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த முன்னாள் மாணவர்கள் குழுவுடன் உரையாடினேன், அவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் நன்கொடை அளித்துள்ளனர். கல்வி மற்றும் சமூக நலனுக்காக பங்களிக்கும் முக்கிய முன்னாள் மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்களை சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்தச் சூழலில், சென்னைப் பல்கலைக்கழகத்தை உலகளாவிய சிறப்பு மையமாக முன்னேற்றுவதில் முன்னாள் மாணவர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்க முடியும். பல்கலைக்கழகம் அவர்களின் வெற்றிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது, எனவே அவர்கள் தங்கள் தாயக கல்வி நிலையத்திற்கு கைமாறு செய்ய முயற்சிக்க வேண்டும். முன்னாள் மாணவர்கள், இளம் மாணவர்களுக்கு வழிகாட்டலாம். பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக முன்னாள் மாணவர்களை அணுகி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் கல்வி சார்ந்த பண்பாட்டை ஊக்குவித்துள்ளது. இது பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை இயக்கும் திறன் வாய்ந்த மனித வளங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.
அதிநவீன ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவும், துறைகளுக்கு இடையேயான ஆய்வுகளை ஊக்குவிக்கவும், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பல்கலைக்கழகத்தை நான் வலியுறுத்துகிறேன். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் நிறுவனமாக இந்த பல்கலைக்கழகத்தை வலுப்படுத்த முடியும். நாடும் உலகமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னைப் பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.
நமது இளம் மாணவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் எனது இதயத்திற்கு நெருக்கமான ஒரு பிரச்சினையை மீண்டும் வலியுறுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். மிகவும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிர்பந்தம், நல்ல நிறுவனங்களில் சேர முடியாது என்ற பயம், மதிப்புமிக்க வேலை கிடைக்காதோ என்ற கவலை, பெற்றோர் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் சுமை ஆகியவை நம் இளைஞர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கவும், ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைவது முக்கியம். எந்த ஒரு பதட்டமும் உங்களை வாட்டி வதைக்க வேண்டாம் என்று அனைத்து மாணவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். எப்போதுமே ஒரு துவக்கம் அல்லது வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது, அது சில தருணங்களில் புலப்படாது. உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.
பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, மாணவர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களைக் கடந்து செல்ல உதவலாம். மாணவர்கள் தங்கள் அச்சங்கள், கவலைகள் மற்றும் போராட்டங்களை அஞ்சாமல் விவாதிக்க வசதியாக உணரும் இருவழி தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கும் சூழலை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். சவால்களை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்வதற்கு நமது இளைஞர்கள் நேசிக்கும், மதிக்கும் அதிகாரமளிக்கப்பட்ட சூழலை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நீங்கள் தொடங்கும்போது, உங்கள் இலக்குகளை உயர்வாக அமைக்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில், உங்கள் இலக்குகளால் நிர்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். உங்கள் கனவுகளை உறுதியுடனும் அச்சமின்றியும் நிறைவேற்ற கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள்.
எனது உரையை நிறைவு செய்ய, மகாகவி சுப்பிரமணிய பாரதியின் காலத்தால் அழியாத சில வரிகளை மேற்கோள் காட்டுகிறேன், அவை எப்போதும் புதிய உத்வேகத்தை ஊட்டுகின்றன.
மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனை யளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்
அதாவது, “வேதம் மற்றும் அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம்.
வானம், கடல் இரண்டையும் ஆராய்வோம்
சந்திரனின் மர்மங்களை அவிழ்ப்போம்
எங்கள் தெருக்களையும் சுத்தமாக துடைப்போம்” என்றார்.
இன்று மாலை மகாகவி பாரதியாரை கவுரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் வாழ்க்கையிலும் தொழில் அமைப்பிலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை உங்களால் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எதிர்காலம் உங்களுக்கே சொந்தம். இந்த செய்தியின் மூலம், உங்கள் அனைவரருக்கும் எனது ஆசிகள்.
நன்றி,
ஜெய் ஹிந்த்!
ஜெய் பாரத்!.
The post ’’எதிர்காலம் உங்களுக்கே சொந்தம்..!’’ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு பேச்சு first appeared on Madras Murasu.
]]>