acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது! first appeared on Madras Murasu.
]]>மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் இயக்குநர் சிவா நிர்வாணா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.
இப்போது இந்த ‘குஷி’ திரைப்படத்திலிருந்து ‘என் ரோஜா நீயா..’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்த ‘என் ரோஜா நீயா..’ என்னும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா இருவரும் திரையில் தோன்றி தங்களது காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார்.

காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில், நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் நடித்துள்ளனர்.
ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இந்த ‘குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று வெளியாகிறது.
The post விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது! first appeared on Madras Murasu.
]]>The post ’’எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 2 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் first appeared on Madras Murasu.
]]>இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| 1. | இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) |
– |
Bachelor of Visual Arts
(Cinematography) |
| 2. | இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) |
– |
Bachelor of Visual Arts
(Digital Intermediate) |
| 3. | இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) | – |
Bachelor of Visual Arts
(Audiography) |
| 4. | இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) | – |
Bachelor of Visual Arts
(Direction and Screenplay writing) |
| 5. | இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) | – |
Bachelor of Visual Arts
(Film Editing) |
| 6. | இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) | – |
Bachelor of Visual Arts
(Animation and Visual Effects) |
எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ / மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான விண்ணப்பங்களை 11.05.2023 முதல் 31.05.2023 வரை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு 02.06.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் தபால் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், 02.06.2023 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம். இத்தகவலை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் முதல்வர் (மு.கூ.பொ) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post ’’எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 2 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் first appeared on Madras Murasu.
]]>The post தைலாபுரம் தோட்டத்தில், “தமிழில் பேசு… தங்கக் காசு..! டாக்டர் ராமதாஸ் அழைப்பு first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதில் தமிழறிஞர்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தேன். தைலாபுரம் தோட்டத்தின் கதவுகள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள் 10 பேர் கொண்ட குழுவாக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து என்னை சந்திக்கலாம்.
தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து என்னுடன் விரிவாக கலந்துரையாடலாம். என்னை சந்திக்க விரும்பும் தமிழறிஞர் குழுவினர் முன்கூட்டியே என்னை தொடர்பு கொண்டு பேசி, அவர்களைப் பற்றிய விவரங்களையும், அலைபேசி எண்களையும் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தேன்.
தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கான போட்டி மன்றம், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ என்ற தலைப்பில் இந்த போட்டிமன்றம் நடைபெறும். இது முழுக்க முழுக்க அரசியல் கலப்பற்ற போட்டியாகும். தமிழ் வளர்ச்சி மட்டும் தான் இதன் நோக்கம். அனைத்துக் கட்சியினரும், கட்சி சாராதவர்களும் இதில் பங்கேற்கலாம் என்றும் அறிவித்திருந்தேன்.
ஆனால், கடந்த இரு வாரங்களாக போதிய எண்ணிக்கையில் போட்டியாளர்கள் வராததால் கடந்த ஞாயிற்றுக் கிழமையும், இன்றும் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டி நடைபெறவில்லை. எனினும் வரும் 14-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டி ஏற்கனவே அறிவித்தவாறு நடைபெறும். அதில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கலாம்.
போட்டிக்கான நடைமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை தான்.
3 பேர் கொண்ட நடுவர் குழுவினரின் முன்னிலையில் 5 மணித்துளிகளுக்கு (நிமிடங்கள்) பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேச வேண்டும். குறிப்பிட்ட தலைப்பில் தான் பேச வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; தமிழறிஞர்கள் அவர்கள் விரும்பிய தலைப்பில் பேசலாம். அதே நேரத்தில், போட்டியாளர்கள் பேசும் தலைப்பு சார்ந்து, நடுவர்கள் அதிக அளவாக 3 முறை குறுக்கிட்டு வினாக்களை எழுப்புவார்கள். அதற்கு போட்டியாளர்கள் விடையளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
5 மணித்துளிகளுக்கு பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேசுவோருக்கு 4 குண்டுமணி ( 4 கிராம்) தங்கக் காசு பரிசாக வழங்கப்படும். அதிக அளவாக 10 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9443658621 ( இசக்கி படையாட்சி) என்ற தொலைபேசி எண்ணில் வரும் 13-ஆம் நாள் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.
The post தைலாபுரம் தோட்டத்தில், “தமிழில் பேசு… தங்கக் காசு..! டாக்டர் ராமதாஸ் அழைப்பு first appeared on Madras Murasu.
]]>The post “டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” அமைச்சர் செந்தில் பாலாஜி first appeared on Madras Murasu.
]]>“டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.
இந்த மாலில் உள்ள கடையை பொறுத்தவரையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும்தான் இயங்கும். இதனை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது. ATM-ஐ உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் தவறான செய்தியைப் பரப்புகின்றனர்.
இந்தக் கடைக்குள் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது வெளியேவா, 24 மணி நேரமும் எடுக்க முடியுமா என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள். 21 வயதுக்கு குறைவுடைய யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா? இரண்டு ஊழியர்கள் கண்காணிப்பில்தான் கடை இயங்குகிறது. இந்தக் கடை எங்கு உள்ளது, எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.
29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட நாடாளுமன்றத்திற்கே போகாதவர் இது குறித்து செய்தி வெளியிடுகிறார். 2019-இல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம், இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன. அதைக் கடைகளில் பயன்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் பேசி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே. அதற்கு தைரியமில்லை, இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை .
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம். டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் கூறினார்.
The post “டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” அமைச்சர் செந்தில் பாலாஜி first appeared on Madras Murasu.
]]>The post ’’கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி..!’’ கே.எஸ்.அழகிரி சொல்கிறார். first appeared on Madras Murasu.
]]>The post ’’கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி..!’’ கே.எஸ்.அழகிரி சொல்கிறார். first appeared on Madras Murasu.
]]>The post ”கோடைக்கால தபால் தலை பயிற்சி முகாம்..!” ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் first appeared on Madras Murasu.
]]>சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை மே 2023-ல் நடத்த உள்ளது.
மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது.
முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 வரை பயிற்சி நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 25 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆர்வமுள்ள ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ரூ.250-ஐ ரொக்கமாக பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். பயிற்சி முடித்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதுகுறித்த தகவல்களை 9444933467, 9840595839, 9952965458, 044-28543199 என்ற தொலைபேசி எண்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் அறிந்து கொள்ளலாம்.
—–
The post ”கோடைக்கால தபால் தலை பயிற்சி முகாம்..!” ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்ணைச் சரிபார்க்க யு.ஐ.டி.ஏ.ஐ அனுமதி..! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது first appeared on Madras Murasu.
]]>பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், மக்கள் இதை மிக எளிதாகச் சரிபார்க்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar செயலியில் ‘மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்’ அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பெறலாம். குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளைகளையும் அதில் அறிந்து கொள்ளலாம்.
ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில், அவர்கள் கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.
மின்னஞ்சல் / மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்ணைச் சரிபார்க்க யு.ஐ.டி.ஏ.ஐ அனுமதி..! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது first appeared on Madras Murasu.
]]>The post திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர் first appeared on Madras Murasu.
]]>இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது முகநூல் பக்கத்தில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள, அச்சங்கத்தின் தலைவர் ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி, துணைத் தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இன்று என்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களின் பொறுப்புமிக்க பணி சிறக்க என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..
The post திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர் first appeared on Madras Murasu.
]]>The post அஜித் புதிய படம் பெயர் “விடாமுயற்சி” first appeared on Madras Murasu.
]]>மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது.
விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடபட்டு உள்ளது. படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் தயாரிப்பு செலவு 220 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் மகிழ் திருமேனிக்கு இதுவரை ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக தொகையை இந்த படத்திற்காக கொடுப்பதாக தகவல் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கலக தலைவன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிட்தக்கது.
The post அஜித் புதிய படம் பெயர் “விடாமுயற்சி” first appeared on Madras Murasu.
]]>The post ”துபாயில் அரேபிய சுற்றுலாச் சந்தை..!” இந்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு first appeared on Madras Murasu.
]]>பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் இயற்கை அழகு, சாகசம், வனவிலங்குகள், ஆரோக்கியம் ஆகியவற்றுடன், தனித்துவமான மற்றும் உண்மையான அனுபவங்களைத் தேடும் பயணிகளுக்கு இந்தியா ஒரு சிறந்த இடமாகும். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியில், 2023-ல் இந்தியாவுக்கு வருகை தாருங்கள் எனப் பொருள்படும் Visit India Year 2023 என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உட்பட மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க சுற்றுலாத் துறையுடன் உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும்.
அரேபிய சுற்றுலாச் சந்தை 2023-ல் இந்தியாவின் பங்கேற்பு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதியை எடுத்துரைக்கிறது. இந்தியாவின் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் 24×7 கட்டணமில்லா பல மொழி உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 12 இந்திய மொழிகளிலும், அரபு, பிரெஞ்சு, ஜெர்மன் உள்பட 10 சர்வதேச மொழிகளில் பேசலாம். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.incredibleindia.org) ஆன்மீகம், பாரம்பரியம், சாகசம், கலாச்சாரம், யோகா, ஆரோக்கியம் மற்றும் பல முக்கிய அனுபவங்களைக் காண முடியும். இந்த இணையதளத்தை ஹிந்தி மற்றும் முன்னணி சர்வதேச மொழிகளிலும் காண முடியும்.
குறிப்பாக, இந்தியாவின் ஜி-20 தலைமையின் பின்னணியில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா அமைச்சகம் இந்த ஆண்டை ‘விசிட் இந்தியா இயர் 2023’ என்று கொண்டாடுகிறது. நம் நாட்டின் பல்வேறு சுற்றுலாச் சலுகைகளை முன்னிலைப்படுத்தவும், உலக சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைக் காட்சிப்படுத்தவும், இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.
The post ”துபாயில் அரேபிய சுற்றுலாச் சந்தை..!” இந்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு first appeared on Madras Murasu.
]]>