முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
“செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்!
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்!” எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள்!
துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக்கான திட்டங்கள், பல மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எனப் பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்!

