ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்ரா இன்று சென்னை வந்தார். அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினார். விளையாட்டுத் துறையில் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
’’ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்று தனி நபர் பிரிவில் இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்த அபினவ் பிந்த்ரா-வை இன்று சந்தித்தோம்.
விளையாட்டுத்துறை சார்ந்து முன்னெடுக்க வேண்டிய பல்வேறு அம்சங்களை இந்த சந்திப்பின் போது ஆலோசித்தோம்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

