உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் இந்தியாவின் சினிமா பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் தேசிய திரைப்படக் கழகம் (என்.எஃப்.டி.சி.) மற்றும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் (என்.எஃப்.ஏ.ஐ ) முயற்சிகளை இந்திய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களின் குடும்பத்தினர் பாராட்டுகின்றனர்.
திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; இது ஒரு நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் சமூகப் பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும். இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மையும், கலாச்சார வளமும் மிக்க ஒரு நாட்டில், அதன் சினிமா பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மிகையென கருத முடியாது. தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக மிகச்சிறந்த பழைய திரைப்படங்களை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் (எம் .ஐ.பி.) முயற்சிகள் புகழ்பெற்ற திரைப்பட ஆளுமைகளிடமிருந்து பாராட்டைப் பெற்றுள்ளன. உலக சினிமா தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பேசியபோது இந்தியாவின் மீட்டெடுக்கப்பட்ட ரத்தினங்களைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
பிரபல இந்தி நடிகையும், தாதா சாகேப் பால்கே விருது 2023 பெற்றவருமான வஹீதா ரஹ்மான், ரேஷ்மா அவுர் ஷேரா, கைடு, சௌடவி கா சந்த் போன்ற கிளாசிக் படங்களைப் பார்த்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், “60 ஆண்டுகளுக்குப் பிறகு, இது ஒரு விவேகமான மற்றும் முதிர்ச்சியான படமாக உள்ளது. இது மிகவும் பொழுதுபோக்கு. என் மகளை அருகில் வைத்துக்கொண்டு பெரிய திரையில் பார்ப்பது ஒரு தனித்த த்ரில். இந்தத் திரைப்படங்களை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினர் ரசிக்கும் வகையில் வைத்திருக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார். பிரபல இயக்குநர் கோவிந்த் நிஹலானி கூறுகையில், “எனது அகத் படத்தின் ரீமேக் பதிப்பைப் பார்ப்பது மிகவும் திருப்தியாக இருந்தது. ஒலி தரம், வண்ண திருத்தம் எல்லாம் பிரமாதமாக இருந்தன. எம்.ஐ.பி மற்றும் என்.எஃப்.டி.சி-என்.எஃப்.ஏ.ஐ எனது 35 மிமீ திரைப்படமான அகத்தை மீட்டெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
உண்மையில், என்.எஃப்.டி.சி-என்.எஃப்.ஏ.ஐ இந்தியாவின் சினிமா பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில், முக்கியப் பங்கு வகிக்கின்றன. எதிர்கால சந்ததியினர் இந்திய சினிமாவின் வளமான திரைத்துறையை அணுகவும் பாராட்டவும் முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு முயற்சியாகும். இதன் முதன்மை நோக்கம் இந்தியாவின் பரந்த சினிமா பாரம்பரியத்தை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் ஆகும். என்.எஃப்.எச்.எம் என்பது திரைப்பட பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய முயற்சியாகும், இதில் மோசமடைந்து வரும் திரைப்படங்களை மீட்டெடுப்பது, திரைப்படப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவது, ஆவணப்படுத்துதல் மற்றும் தடுப்பு பாதுகாப்பு ஆகியவை அடங்கும்,
இயக்குநர் விஜய் ஆனந்தின் மகனும், நடிகர் தேவ் ஆனந்தின் மருமகனுமாகிய நடிகர் வைபவ் ஆனந்த், சமீபத்தில் என்.எஃப்.ஏ.ஐ புனே வளாகத்திற்குத் தனது மாமா தேவ் ஆனந்த் திரைப்படத்தின் திரையிடலைக் காணவும், தேவ் ஆனந்த் படத்தின் அசல் சுவரொட்டிகளின் கண்காட்சியைக் காணவும் வந்தார், “இது என்.எஃப்.டி.சி-தேசிய திரைப்பட காப்பகம் மற்றும் தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் சிறந்த முயற்சியாகும். புனேவில் உள்ள என்.எஃப்.டி.சி-என்.எஃப்.ஏ.ஐ.யில் சர்வதேச மற்றும் இந்திய தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை இணைப்பதன் மூலம் இந்திய திரைப்படங்களின் நூலகம் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த முற்போக்கான நடவடிக்கைக்காக இந்திய அரசு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை நான் பாராட்ட விரும்புகிறேன். உண்மையில், பல்வேறு சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த முயற்சிக்குத் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.” என்று அவர் கூறினார்.
பரத் பூஷன் பேத்தி,விஷ்ணுபிரியா பண்டிட், “ஒரு சினிமா ரசிகன் மற்றும் தீவிர சினிமா பிரியராக, இந்திய சினிமாவின் பொற்கால வரலாற்றைப் புதுப்பிக்க என்.எஃப்.டி.சி-என்.எஃப்.ஏ.ஐ எடுத்த முயற்சிகளை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஒரு பேத்தியாக, என் தாத்தா திரு பரத் பூஷனை வெள்ளித்திரையில் பார்ப்பது வாழ்நாள் ஆசை, அதை தியேட்டரில் அனுபவிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ‘பர்சாத் கி ராட்’ படத்தை மீட்டெடுத்த தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்திற்கும், படத்தை வெள்ளித்திரையில் பார்க்க அழைப்பு விடுத்த என்.எஃப்.டி.சி-என்.எஃப்.ஏ.ஐ.க்கும் நன்றி. அந்த அனுபவம் என்னுடன் நீண்ட காலம் இருக்கும்.” என்றார்.
“என்.எஃப்.எச்.எம். -ன் ஒரு முக்கியமான அம்சம் கிளாசிக் படங்களை மீட்டெடுப்பதாகும். காலப்போக்கில், முறையற்ற சேமிப்பு மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் பல பழைய திரைப்பட பிரதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. கவனமாக பாதுகாக்கப்படாவிட்டால் இந்த படங்கள் என்றென்றும் அழியும் அபாயம் உள்ளது. பழைய மற்றும் சீரழிந்த பிரதிகள் கவனமாக புதுப்பிக்கப்படுகின்றன, இது திரைப்படங்களின் அசல் தரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்கிறது என்று என்.எஃப்.டி.சியின் நிர்வாக இயக்குநர் பிரிதுல் குமார் கூறினார்.
என்.எஃப்.எச்.எம் இன் முக்கிய கூறுகளில் ஒன்று திரைப்படங்களை டிஜிட்டல் மயமாக்குவதாகும். இந்த செயல்முறை அனலாக் திரைப்படப் பிரதிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவங்களாக மாற்றுவதை உள்ளடக்குகிறது. இந்த முயற்சிகள் மூலம், காலத்தின் அழிவுகளுக்கு முந்தைய சினிமா ரத்தினங்களை இழக்காமல் இருப்பதை உறுதி என்.எஃப்.டி.சி-என்.எஃப்.ஏ.ஐ. செய்கிறது. ‘பர்சாத் கி ராட்’, ‘சி.ஐ.டி. (1956), “வழிகாட்டி” (1965), “நகைத் திருடன்” (1967), “ஜானி மேரா நாம்” (1970), “பீஸ் சால் பாத்” (1962), “அகத்” (1985) மற்றும் பல படங்கள் திரையரங்கில் வெளியான பல தசாப்தங்களுக்குப் பிறகு 4 கே தெளிவுத்திறனில் மீண்டும் வெள்ளித்திரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

