நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோரது டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை கண்டித்து கவிப்பேரரசு வைரமுத்து கண்டனக் கவிதை வடித்துள்ளார்.
வன்மையாகக் கண்டிக்கிறேன்
சுட்டுரையை முடக்கிவிட்டால்
சீமான் தீர்ந்து போவாரா?
வெயிலுக்கு எதிராகக்
குடைபிடித்தால்
காணாமற் போகுமோ கதிரவன்?
கருத்தைக்
கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;
கை கால்களைக் கட்டாதீர்கள்
கருத்துரிமை இன்னும்
உயிரோடு இருப்பதாக
நம்புகிறவர்களுள்
நானும் ஒருவன்

