மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் என்கிற சிவில் சர்வீஸ் தேர்வைப்போல மாநில சிவில் சர்வீஸ் தேர்வு என்று அழைக்கப்படும் குருப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட மிக உயர்ந்த பதவிகளுக்கு 90 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வினை எழுதுவதற்கு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
துணை ஆட்சியர் . Deputy Collector, துணை காவல் கண்காணிப்பாளர் Deputy Superintendent of Police, வணிக வரிகள் உதவி ஆணையர் Assistant Commissioner (Commercial Taxes), கூட்டுறவுச் சங்களின் துணைப் பதிவாளர் Deputy Registrar of Co-operative Societies, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் Assistant Director of Rural Development மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் District Employment Officer, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் District Officer (Fire and Rescue Services) ஆகிய பணிகளை உள்ளடக்கிய குருப் 1 பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு மார்ச் 28 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.
இத்தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல், பொறியியல், M.B.B.S என்று எந்த பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் அவர்கள், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்டசம் 21 வயது முடிந்திருக்க வேண்டும். ஆனால் 34 வயது முடிந்திருக்கக் கூடாது. சட்டப்படிப்பு முடித்தவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் , பழங்குடியினர், அருந்ததியர் மற்றும் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 39 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று இடஒதுக்கீடு அடிப்படையில் வயதில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்தில், சட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைக் காவல் கண்காணிப்பாளர், தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள், குறைந்தபட்சம் 165 செமீ உயரம் இருக்க வேண்டும். பெண்கள், 155 செமீ உயரம் இருக்க வேண்டும்.
முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று இந்த குருப் 1 தேர்வு, மூன்று நிலைகளைக் கொண்டது. முதல் நிலைத்தேர்வில் பொது அறிவுத்தாள் ஒன்றினை எழுத வேண்டும். கொள்குறி வகையிலான அந்த தேர்வுக்கு 300 மதிப்பெண் உன்டு. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோர் முதன்மைத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இங்கு, தமிழ்மொழித் தகுதித்தேர்வு ஒன்றினை எழுத வேண்டும். அதற்கு 100 மதிப்பெண் உண்டு. பொது அறிவு பிரிவில் மொத்தம் மூன்று தாள்களை எழுத வேண்டும். கட்டுரை வடிவில் இந்தத் தேர்வினை எழுத வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிபெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண். ஆக, முதன்மைத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 850.
இதில், முதன்மைத் தேர்வில், முதல் தாளான தமிழ் தகுதி தேர்வில் குறைந்த பட்சம் 100-க்கு 40 மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்த மூன்று பேப்பர்களும் திருத்தப்படும் என்பதை விண்ணப்பத்தாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த குருப் 1 தேர்வுக்கு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்கிற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வு ஜுலை 13 ஆம் தேதி நடைபெறும். முதல் நிலைத்தேர்வு முடிவுகள் அறிவிக்கும் போது முதன்மைத்தேர்வு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இந்த குருப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசு பதவிகளில் அமர்வோர், பணி சர்வீஸ் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று உயர்ந்த பதவிகளை அடைவார்கள். எனவே, உடனே, இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயார் ஆகுங்கள்.
வேலைவாய்ப்பு தமிழ் அறிவிக்கை 04_2024_GRP1_TAM_
வேலைவாய்ப்பு ஆங்கில அறிவிக்கை 04_2024_GRP1_ENG_
விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய ஆன்லைன் https://www.tnpsc.gov.in/
1. Deputy Collector Tamil Nadu civil service 16
2. Deputy Superintendent of Police 23
3. Assistant Commissioner (Commercial Taxes) 14
4. Deputy Registrar of Co-operative Societies 21
5. Assistant Director of Rural Development 14
6. District Employment Officer 01
7. District Officer (Fire and Rescue Services) 01
Total 90

