Home செய்திகள் ‘’உறுப்பு தானம் வழங்குவோர் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘’உறுப்பு தானம் வழங்குவோர் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
‘’உறுப்பு தானம் வழங்குவோர் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

’’இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here