’’சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓ.ஐ.எம்.எல் (சர்வதேச சட்ட அளவியல் அமைப்பு) சான்றிதழ்களை வழங்கும் உலகின் 13-வது நாடாக இந்தியா திகழ்கிறது.
ஓ.ஐ.எம்.எல் என்பது 1955-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். இந்தியா 1956-ல் அதன் உறுப்பினராகியது. இது 63 உறுப்பு நாடுகளையும், 64 தொடர்புடைய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
உலகின் எந்தப் பகுதியிலும் எடைகள் மற்றும் அளவீடுகளை விற்பனை செய்வதற்காக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓஐஎம்எல் சான்றிதழை வழங்கும் அதிகாரமாக இந்தியா மாறியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு எடை அல்லது அளவை விற்பனை செய்வதற்கு ஓஐஎம்எல் மாதிரி ஒப்புதல் சான்றிதழ் கட்டாயமாகும். இதை நுகர்வோர் விவகாரத் துறை இப்போது வழங்க முடியும்.
இந்தியா ஓஐஎம்எல் பரிந்துரைகள் மற்றும் எடைகள் மற்றும் அளவீடுகளின் சோதனை மற்றும் அளவுத்திருத்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. சட்ட அளவியலின் பிராந்திய குறிப்பு தரநிலை ஆய்வகங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் இப்போது ஓஐஎம்எல் வழங்கும் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இப்போது, இந்தியா ஓ.ஐ.எம்.எல் மாதிரி ஒப்புதல் சான்றிதழ்களை வழங்குவதற்கான ஒரு அதிகாரமாக உள்ளது மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அமைப்பாக செயல்பட முடியும்.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இப்போது கூடுதல் சோதனை கட்டணம் செலுத்தாமல் தங்கள் எடை மற்றும் அளவிடும் கருவியை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம், இதன் விளைவாக கணிசமான செலவு மிச்சமாகும்.

