acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்’’ தி.வேல்முருகன் எம்.எல்.ஏ first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், இலட்சக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடியாலும், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தெருவில் பிச்சை எடுக்கக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இச்சிக்கல்களை பற்றியெல்லாம் கவலைப்படாத மோடி கும்பலுக்கு, மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதனம் குறித்து பேசி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு எதிரான கருத்து தெரிவித்ததற்காக, உதயநிதி அவர்களின் தலையை சீவினால், 10 கோடி ரூபாயை அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்திருக்கிறார்.
அதாவது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதனத்தில் பிறப்பின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வு, தீண்டாமை குறித்து பேசியது, சனாதன கும்பல்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சனாதனத்தில் நிலவும் மநு நீதி, வர்ணாசிரமம், சாதிய மேலாதிக்கம், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிராக பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சனாதன கும்பல்கள் விமர்சித்து வருகின்றன. இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் 10 கோடி ரூபாயை அறிவித்திருக்கிறார் .
அதோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த மோசடி கும்பலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதாவது, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த இது ஒன்றும் வடமாநிலங்கள் அல்ல; தமிழ்நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இங்கு பகுத்தறிவாளர்களை விட, சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், வைகுண்டசாமிகள் போன்ற ஆன்மிகவாதிகளே, சனாதன கருத்தியலுக்கு எதிரான கருத்தியலை காலம் காலமாக நடத்தி வந்துள்ளனர்.
இந்து மக்களிடையே நிலவும் வர்ணாசிரம மேலாதிக்கத்தை – பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் சம உரிமை படைத்த சகோதரர்களாக மாற்றும் நோக்கம், பாஜக- ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லியும் பாடியும் அர்ச்சனை செய்யலாம் என்ற தமிழ் மொழி உரிமைக்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. தலைமைகள் முன்முயற்சி எடுக்கப் போவதில்லை. மாறாக அவ்வாறான தமிழர் முயற்சிகளைத் தடுக்கவே அவை முன்வரும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
எனவே, வர்ணாசிரம மேலாதிக்கத்தை இக்காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள் நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க கும்பலுக்கு தமிழ்நாட்டின் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா உள்ளிட்ட எந்த கொம்பனாலும், அமைச்சர் உதயநிதி அவர்களின் சுண்டு விரலைக் கூட தொட முடியாது.
நாட்டில் நிலவி வரும் பெரும் சிக்கல்களை எல்லாம் திசை திருப்புவதையும், பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதையும் கைவிட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க, மோடி அரசை, ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க கும்பல்கள் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களின் தலைக்கு, 10 கோடி ரூபாய் அறிவித்துள்ள அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை உடனடியாக கைது செய்ய, ஒன்றிய பாஜக அரசு முன் வர வேண்டும். ஒரு சாமியாரிடம் எப்படி 10 கோடி ரூபாய் இருக்கிறது என்பது குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
The post ’’அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்’’ தி.வேல்முருகன் எம்.எல்.ஏ first appeared on Madras Murasu.
]]>The post ’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!’’ first appeared on Madras Murasu.
]]>மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிடட் அறிக்கை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே உண்மைக்கு மாறாகப் பேசி தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பரவலான கண்டனம் எழுந்துள்ளபோதும், தேவைப்பட்டால் பரிசுத்தொகையை அதிகரிக்கத் தயார் என்று அவர் மேலும் மிரட்டியுள்ளார். ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக படுகொலை செய்ய அறைகூவல் விடுப்பது பாசிச தன்மை வாய்ந்த கிரிமினல் செயல் ஆகும். ஒரு மடாதிபதியே கொலை வெறியைத் தூண்டும் கிரிமினல் குற்றவாளியாக நடந்து கொள்வது மிக வெட்கக் கேடானது ஆகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்த யாரும் இதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பது இத்தகைய கிரிமினல் நடவடிக்கைக்கு துணைபோகும் செயலாகும். உ.பி. மாநில அரசு, சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டும் அயோத்தி சாமியாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
The post ’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’அயோத்தி ராமர் சிலை ஏற்பாடுகள் தீவிரம்..!’’ first appeared on Madras Murasu.
]]>உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் 251 மீ. உயரத்தில் வில் ஏந்திய ராமர் சிலை பிரமாண்டமாக நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அயோத்தியில் ராமர் சிலையை நிறுவிய உடன் கும்பாபிஷேக விழா நடத்தவுள்ளதாகவும், அந்த விழாவில் கலந்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படலாம் என்றும் அதன் தேதி முடிவு செய்த பின் அறிவிக்கப்படும் என்றும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்துள்ளார்.
– கோ. தீபா புவனேஸ்வரி
The post ’’அயோத்தி ராமர் சிலை ஏற்பாடுகள் தீவிரம்..!’’ first appeared on Madras Murasu.
]]>