acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 25954905 மற்றும் 044 – 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பயிற்சித் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.
The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ தமிழக அரசில் 861 காலிப்பணியிடம் ..!’’ டிப்ளமோ , ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் பட்டயம், தொழிற்பயிற்சி நிலை யில் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ் தகுதித் தேர்வு , பொது அறிவு மற்றும் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.
Agriculture, Architecture, Automobile and Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering / Electrical and Electronics Engineering, Handloom Technology / Textile Technology / Textile Manufacture, Instrumentation Engineering , Mechanical Engineering, Physical Education , Printing Technology, Stenography, Town and Country Planning,

Trade – Boiler Attendant, Trade – Draughtsman (Civil), Trade – Electrician, Trade – Fitter, Trade – Instrument Mechanic, Trade – Lab Technician , Trade – Mechanic Motor Vehicle Trade – Mechanic Refrigeration and Air-Conditioner, Trade – Surveyor, Trade – Welder (Gas and Electric) ஆகிய பாடங்கள் தாள் இரண்டு என்கிற வகையில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.
டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ, சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இந்த போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல உச்ச வயது வரம்பில் பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
எனவே, வயது வரம்பு, கல்வித்தகுதி, தேர்வு விபரம், பாடத்திட்டம் ஆகியவற்றை வேலைவாய்ப்பு அறிவிக்கையினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் அறிவிக்கை CTSE_DIP_Tamil_13.08.2024_
இந்த வேலைவாய்பில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்தகுதி தேர்வு, பொது அறிவிவு தாள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில்தான் இருக்கும். எனவே, குருப் 4 தரத்தில்தான் கேள்விகள் கேட்க்கப்படும். அதுதொடர்பான அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய வீடியோக்கள் மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலில் www.youtube.com/@MadrasMurasu உள்ளது. அதை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து, நோட்ஸ் எடுத்து படிக்கலாம். எளிதில் இந்த தேர்வில் வெற்றிபெற்று அரசு பணியில் சேரலாம்.

The post ’’ தமிழக அரசில் 861 காலிப்பணியிடம் ..!’’ டிப்ளமோ , ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’குருப் 2 தேர்வு – 2327 பணி இடங்கள்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
குருப் 2 காலிப்பணியிடம் | 507
குருப் 2 ஏ காலிப்பணியிடம் | 1820
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம்
ஒரு சில பணிகளுக்கு என்று சில படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச வயது 18 ஆகும். பணியின் நிலைகளுக்கு ஏற்ப ஒரு சில பதவிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு தொடக்கம் | 20.06.2024
விண்ணப்ப பதிவு நிறைவு | 19.07.2024
விண்ணப்பம் திருத்தும் காலம் | 24.07.2024 முதல் 26.07.2024
முதல் நிலைத் தேர்வு | 14.09.2024
முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) | முதல் நிலைத் தேர்வு வெளியான பின்னர், அறிவிக்கப்படும்.

இத்தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையை tnpsc group 2 & 2 A service notification என்பதை கிளிக் செய்து பார்க்கலாம்.
பொது ஆங்கிலம் தகுதி தேர்வு பாடத்திட்டம் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General English_sslc_std
முதல் நிலைத் தேர்வு பொது அறிவு பாடத்திட்டம் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General Studies_UG_std
தமிழ் தகுதி தேர்வு பாடத்திட்டம் General Tamil_sslc_std_Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services
பொது அறிவு வினாத்தாள் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General Studies – CCS2E – 2022 – Answer Key_opt
பொது ஆங்கிலம் வினாத்தாள் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General English – CCS2E – 2022 – Answer Key_opt
பொதுத்தமிழ் தகுதித்தாள் Combined Civil Services (Preliminary) Examination- Group-II and IIA Services_General Tamil – CCS2T – 2022 answer key_opt
The post ’’குருப் 2 தேர்வு – 2327 பணி இடங்கள்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ”குருப் 1 தேர்வு..! ஏப்ரல் 27 வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>துணை ஆட்சியர் . Deputy Collector, துணை காவல் கண்காணிப்பாளர் Deputy Superintendent of Police, வணிக வரிகள் உதவி ஆணையர் Assistant Commissioner (Commercial Taxes), கூட்டுறவுச் சங்களின் துணைப் பதிவாளர் Deputy Registrar of Co-operative Societies, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் Assistant Director of Rural Development மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் District Employment Officer, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் District Officer (Fire and Rescue Services) ஆகிய பணிகளை உள்ளடக்கிய குருப் 1 பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு மார்ச் 28 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.
இத்தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல், பொறியியல், M.B.B.S என்று எந்த பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் அவர்கள், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்டசம் 21 வயது முடிந்திருக்க வேண்டும். ஆனால் 34 வயது முடிந்திருக்கக் கூடாது. சட்டப்படிப்பு முடித்தவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் , பழங்குடியினர், அருந்ததியர் மற்றும் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 39 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று இடஒதுக்கீடு அடிப்படையில் வயதில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்தில், சட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைக் காவல் கண்காணிப்பாளர், தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள், குறைந்தபட்சம் 165 செமீ உயரம் இருக்க வேண்டும். பெண்கள், 155 செமீ உயரம் இருக்க வேண்டும்.
முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று இந்த குருப் 1 தேர்வு, மூன்று நிலைகளைக் கொண்டது. முதல் நிலைத்தேர்வில் பொது அறிவுத்தாள் ஒன்றினை எழுத வேண்டும். கொள்குறி வகையிலான அந்த தேர்வுக்கு 300 மதிப்பெண் உன்டு. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோர் முதன்மைத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இங்கு, தமிழ்மொழித் தகுதித்தேர்வு ஒன்றினை எழுத வேண்டும். அதற்கு 100 மதிப்பெண் உண்டு. பொது அறிவு பிரிவில் மொத்தம் மூன்று தாள்களை எழுத வேண்டும். கட்டுரை வடிவில் இந்தத் தேர்வினை எழுத வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிபெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண். ஆக, முதன்மைத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 850.
இதில், முதன்மைத் தேர்வில், முதல் தாளான தமிழ் தகுதி தேர்வில் குறைந்த பட்சம் 100-க்கு 40 மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்த மூன்று பேப்பர்களும் திருத்தப்படும் என்பதை விண்ணப்பத்தாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த குருப் 1 தேர்வுக்கு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்கிற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வு ஜுலை 13 ஆம் தேதி நடைபெறும். முதல் நிலைத்தேர்வு முடிவுகள் அறிவிக்கும் போது முதன்மைத்தேர்வு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இந்த குருப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசு பதவிகளில் அமர்வோர், பணி சர்வீஸ் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று உயர்ந்த பதவிகளை அடைவார்கள். எனவே, உடனே, இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயார் ஆகுங்கள்.
வேலைவாய்ப்பு தமிழ் அறிவிக்கை 04_2024_GRP1_TAM_
வேலைவாய்ப்பு ஆங்கில அறிவிக்கை 04_2024_GRP1_ENG_
விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய ஆன்லைன் https://www.tnpsc.gov.in/
1. Deputy Collector Tamil Nadu civil service 16
2. Deputy Superintendent of Police 23
3. Assistant Commissioner (Commercial Taxes) 14
4. Deputy Registrar of Co-operative Societies 21
5. Assistant Director of Rural Development 14
6. District Employment Officer 01
7. District Officer (Fire and Rescue Services) 01
Total 90
The post ”குருப் 1 தேர்வு..! ஏப்ரல் 27 வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..!’’ டி.என்.பி.எஸ்.சி-க்கு டாக்டர் ராமதாஸ் வைத்த கோரிக்கை first appeared on Madras Murasu.
]]>பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத்தேர்வு தகுதியும், திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளை பறித்து விடுகிறது. அனைவருக்கும் சம நீதியும், சமுகநீதியும் கிடைக்க நேர்முகத்தேர்வு பெருந்தடையாக உள்ளது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.
ஆந்திரத்தில் முதல் தொகுதி பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 2019-ஆம் ஆண்டு முதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இங்கும் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
The post ’’நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..!’’ டி.என்.பி.எஸ்.சி-க்கு டாக்டர் ராமதாஸ் வைத்த கோரிக்கை first appeared on Madras Murasu.
]]>The post ”Civil Judge தேர்வு 245 காலிப்பணியிடம் ; இலவச பயிற்சி வகுப்புகள்..!” first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Civil Judge தேர்வின் 245 காலியிடங்களுக்கான அறிவிப்பு 01.06.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இக்காலிப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி – Degree in Law
வயது வரம்பு – For Practising Advocates/Pleaders and Assistant Public Prosecutors
பொதுப்பிரிவினருக்கு(OC) உச்ச வயது வரம்பு – 37,
இதர வகுப்பினருக்கு (SC/SCA/ST/BC/BCM/MBC/DW) – 42
வயது வரம்பு- For Fresh Law Candidates
அனைத்து பிரிவினருக்கும் உச்ச வயது வரம்பு – 29
– மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உச்ச வயது
வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2023
தேர்வு நாள் – முதல் நிலை தேர்வு – 19.08.2023
முதன்மைத் தேர்வு – 28.10.2023 – 29.10.2023
இதனைத் தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Civil Judge தேர்விற்கான கட்டணமில்லா நேரடி (Offline) பயிற்சிவகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இவ்வலுவலகத்தால் நடத்தப்படவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Civil Judge தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள GoogleFormhttp://bit.ly/candidatesregistrationform3MZZvn3 அல்லது கீழே கொடுக்கபட்டுள்ள QR code-ஐ ஸ்கேன் செய்து தங்களின் விவரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9499966021 & 044-22501032. மின்னஞ்சல் முகவரி – peeochn@gmail.com

The post ”Civil Judge தேர்வு 245 காலிப்பணியிடம் ; இலவச பயிற்சி வகுப்புகள்..!” first appeared on Madras Murasu.
]]>The post ”ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்வு எழுதியவர்களால் கடந்த இரு மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட, ஆண்டுக்கு 10,000 நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398 என கடந்த 11 ஆண்டுகளில் 29,951 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் தான் கடந்த 11 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தெளிவாக கூற வேண்டுமானால், சராசரியாக ஆண்டுக்கு 2,722 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
11 ஆண்டுகளில் 1.10 லட்சம் நான்காம் தொகுதி பணியாளர்களை தேந்தெடுக்க வேண்டிய தமிழக அரசு, 30 ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறது. அப்படியானால், காலியிடங்களை நிரப்புவதாக இருந்தால் கூட, இந்த முறை குறைந்தது 80,000 நான்காம் தொகுதி பணியாளர்களை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். ஆனால், கடந்த 30.03.2022 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி 7,301 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 21.03.2023 ஆம் நாளிட்ட அறிவிப்பின்படி இந்த எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு திமுக அரசின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாறாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வகை பணிகளுக்கும் சேர்த்து 10,000 பேர் கூட தேர்ந்தெடுக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை.
நான்காம் தொகுதி பணிக்கான தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அரசுத்துறைகளின் தேவையையும் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும்.
The post ”ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>The post ’’குரூப் 4 காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post ’’குரூப் 4 காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post டிஎன்பிஎஸ்சி மூலம் 49 ஜியாலஜிஸ்ட் காலிப்பணியிடம்..!’’ ஜூன் 23-ம் தேதி கடைசி நாள் first appeared on Madras Murasu.
]]>காலியிடம் : நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 29 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : ஜியாலஜி / அப்ளைடு ஜியாலஜி / ஹைட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி www.tnpsc.gov.in
கட்டணம் : பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள் : 23.6.2023
விவரங்களுக்கு : www.tnpsc.gov.in
The post டிஎன்பிஎஸ்சி மூலம் 49 ஜியாலஜிஸ்ட் காலிப்பணியிடம்..!’’ ஜூன் 23-ம் தேதி கடைசி நாள் first appeared on Madras Murasu.
]]>The post “தமிழ்நாட்டில் 246 உரிமையியல் நீதிபதிகள் ஆள் சேர்ப்பு..!” ஜூன் 30 கடைசி தேதி first appeared on Madras Murasu.
]]>இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி 1.6.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு நீதித்துறை பணியின்கீழ் வரும் சிவில் நீதிபதி (உரிமையியல் நீதிபதிகள்) பதவியில் 246 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளிலும் நடைபெறும். இத் தேர்வுக்கு புதிதாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சட்ட பட்டதாரிகளுக்கு வயது வரம்பு 22 முதல் 29 வரை. வழக்குரைஞர்களுக்கு 25 முதல் 37 வரை (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
The post “தமிழ்நாட்டில் 246 உரிமையியல் நீதிபதிகள் ஆள் சேர்ப்பு..!” ஜூன் 30 கடைசி தேதி first appeared on Madras Murasu.
]]>