acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”வல்லான் வகுத்ததை முறித்த வரலாறு” தோழர் முத்துராஜு க்கு புகழஞ்சலி செலுத்திய சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அவரது முகநூலில் வெளியிட்ட பதிவு:
தோழர் முத்துராஜு இறுதி நிகழ்வை முடித்துவிட்டு வந்த கையோடு இதனை எழுதுகிறேன். இந்த அவசரத்திற்கு காரணம் தப்பிப்போனால் இதனைப் பதிவுசெய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம்.
சில மனிதர்களின் நினைவுகள், அவர்கள் பிறந்த தேதியில் இருந்து தொடங்கும். ஆனால், சிலரின் நினைவுகள் அப்படித் தொடங்குவதில்லை. வரலாற்றில் நீண்டுக்கிடக்கும் பெருநினைவொன்றின் நீட்சியாகத்தான் அது தென்படும். தோழர் முத்துராஜுவின் நினைவும் அப்படித்தான். அவர் பணியாற்றிய ஹார்வி மில்லின் நீட்சியாகத்தான் அவரின் நினைவு மேலெழுந்து வருகிறது.

ஹார்விமில் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில், உருமாறிப் புதுப்பொழிவு பெற்ற நவீன மதுரையின் அடையாளம். பிரிட்டீஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம். புதிதாக உருவான தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் அடையாளம். இதை மாற்றி சொல்வதாக இருந்தால், ஹார்வி மில் அரசியல் வாழ்விலும் பொருளியல் வாழ்விலும் உருவாக்கிய தாக்கத்தின் அடையாளமே நவீன மதுரை.
இந்த நூற்பாலையில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் சக்தியே நூற்றாண்டுக் கால மதுரை அரசியலின் கருப்பொருள்.
தொழிலாளிகளின் உரிமையைக் காக்க, ஜார்ஜ் ஜோசப் தொடங்கி கே.டி.கே தங்கமணி, சங்கரய்யா என மாபெரும் தலைவர்கள் ஹார்வி மில் நூற்பாலையின் வாசலின் காவல்தெய்வங்களாக நிலைபெற்றிருந்தார்கள்.
இந்த நூற்பாலையில் 1940-களில் நிகழ்ந்த மாபெரும் போராட்டம் தமிழகத் தொழிலாளி வர்க்க அரசியலின் மைல்கல். இந்தப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்றாக இங்கு பணியாற்றிய தொழிலாளிகள் குடியிருக்கத் தனித்த காலனி குடியிருப்பு ஒன்று உருவானது. ஹார்விப்பட்டி என்னும் அந்தக் குடியிருப்பிலிருந்து தொழிலாளிகளை மூன்று ஷிப்டுகளுக்கும் ஆலைக்கு அழைத்துச் செல்ல தனி ரயில் ஏற்பாடானது. இந்தியாவில் தொழிலாளிகளுக்காகவே இயக்கப்பட்ட ரயில் அது.
இந்தப் போராட்டத்தால் தொழிலாளிகளுக்குக் கிடைத்த பலன் எண்ணற்றவை. இந்தப் பலன் கிடைக்க செங்கொடி இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அதற்கு முன்னும் பின்னும் மதுரை வரலாறு சந்தித்திராதது. வைகையின் கரையில், உரிமைக்குரலை ஒடுக்குவோருக்கும் ஒடுக்குமுறையை முறியடிப்போருக்கும் இடையில் நீடித்து நடந்த போராட்டத்தின் விளைச்சல்தான் இன்றளவும் எந்த அதிகாரத்திற்கும் அடிபணியாது செழித்து நிற்கும் மதுரை செங்கொடி இயக்கத்தின் வரலாறு.
இந்த பெரும் வரலாற்றின் துணைக்கதைகளில் ஒன்றுதான் இப்பெரும் போராட்டத்தால் உருவான ஹார்விமில் காலனியின் கதை. ஹார்வி மில் காலனி என்பது எங்களது வாழ்வின், எங்களது அரசியலின் அடையாளம் என்று சொல்லுகிற எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன். எனது தாத்தாவும் பாட்டியும் ஹார்வி மில் தொழிலாளிகள். அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில்தான் மூன்று தலைமுறையை எங்களின் குடும்பம் கடந்துள்ளது. இந்த காலனியில் குடியிருந்த ஒவ்வொரு குடும்பத்தின் நினைவுகளிலும் 1940 தொடங்கி சில பத்தாண்டுகள் நீடித்த தொழிற்சங்கப் போராட்டமும் அதன் முனைகளில் தெறித்த குருதியும் படிந்திருக்கும்.
அன்றைய தினம் அந்த மாபெரும் போராட்டத்தை நடத்திய பொழுது இரண்டு பெரும் தொழிற்சங்கங்கள் இருந்தன. போராட்டத்தின் முடிவில் நிர்வாகத்தோடு நடந்த ஒப்பந்தத்தின் விளைவாக அழகிய குடியிருப்பு உருவானபோது அதில் செங்கொடிச் சங்கத்தினர் ஒருவர்கூட நுழைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது நிர்வாகம். அவர்களின் ஆசிபெற்ற சங்கத்தினர் மட்டுமே இங்கு குடியமர்த்தப்பட்டனர், என் தாத்தா உட்பட.

பிரிட்டிஷாரின் மூலதனத்தால் இயங்கும் ஆலை. அவர்கள் கட்டிய குடியிருப்பில் ஒரு கம்யூனிஸ்ட் நுழைந்துவிடக்கூடாது என்று உறுதியோடு இருந்தது. இந்தத் தொழிற்சங்கப் போரட்டத்தின் தொடர்ச்சியாக எழுச்சிபெற்ற மதுரை செங்கொடி இயக்கத்தை முழுமுற்றாக ஒழிக்க நினைத்த பிரிட்டீஷார் “மதுரை சதி வழக்கை” உருவாக்கினர். மாபெரும் தலைவர்கள் எம்.ஆர். வெங்கட்ராமன், பி.இராமமூர்த்தி, என்.சங்கரய்யா உள்ளிட்ட 150-க்கும் அதிகமானோரை சிறையிலடைத்தனர். தலைவர்களைச் சிறையில் பூட்டியபின் செங்கொடி இயக்க வீரர்களை அழிக்க அதிகாரத்தின் வேட்டைநாய்கள் மதுரையின் வீதிகள்தோறும் ஏவப்பட்டன. பட்டியக்கல் பதித்த நான்மாடக்கூடலின் தெருவெங்கும் எமது தோழர்களின் குருதிதோய்ந்தது. தேடித்தேடி வேட்டையாடப்பட்டார்கள். திசை எங்கும் வேட்டையாடப்பட்டார்கள். அழியும் வரை வேட்டையாடப்பட்டார்கள். வேட்டை முடிந்தது. ஆனால் அவர்கள் நினைத்த அழிவு மட்டும் நடக்கவே இல்லை. மாறாக சிந்திய குருதி செழிப்புற்று எழுந்தது. “சிறைக்குள் இருந்தபடியே தோழர் பி. ஆர். வென்றார்” என்ற சத்தம் மதுரை தொழிலாளி வர்க்கம் முரசரைந்த பேரிகை ஓசை.
1940கள் தொடங்கி 1950-களின் இறுதி வரை அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட எமது தோழர்கள் இல்லையென்றால் மதுரையின் அரசியல் என்பது மிட்டாமிராசுகளின் அரசியலாகவும் பண்ணைகளின் அரசியலாகவும் மட்டுமே இருந்திருக்கும். ஜனநாயகத்தின் துணைகொண்டு செல்வாதாரத்தின் முதுகெலும்பை முறித்துக் காட்டியது மதுரையின் உழைப்பாளி வர்க்கம்.
இந்தக் கதையின் இன்னுமொரு ஆற்றல்மிகு அத்தியாயம்தான் ஹார்விமில் காலனி. சுமார் 8 மாதத்திற்கும் அதிகமான காலம் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் பிரமாண்டமாக நடத்திய போராட்டத்தின் வெற்றிகளில் ஒன்றாகக் கிடைத்த குடியிருப்பில், அந்த போராட்டத்தின் ஜீவ ஊற்றாக இருந்த செங்கொடி இயக்கத்தின் நிழல்கூடப் படாமல் பார்த்துக்கொண்டது அதிகார வர்க்கம்.
வரலாறு, வல்லான் வகுத்த பாதையில் மட்டும் செல்லும் என்ற மூடநம்பிக்கையை தகர்ப்பதே முற்போக்குச் சக்திகளின் முதல் பணி. ஒரு கம்யூனிஸ்ட்கூட நுழைந்து விடக்கூடாது என்று உருவாக்கப்பட்ட ஹார்வி மில் காலனி, ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக மாறியது. இந்த காலனி தனிப்பேரூராட்சியாக மாறியபோது அதன் தலைவராக கம்யூனிஸ்டுகள் பொறுப்பேற்றனர். மதுரை மாநகராட்சியோடு இணைந்தபோது அதன் மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றனர். இது எளிதில் நிகழ்ந்த ஒன்றன்று. ஒரு கொடிய வரலாற்றை முறித்து, எளிய மனிதர்களின் கொடி பறந்த கதை.
இந்த கதையில் எத்தனையோ நாயகர்கள் உண்டு. ஆனால் நானறிந்த தலைநாயகன் தோழர் முத்துராஜ். 1950-களின் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை ஹார்வி மில் நூற்பாலையில் இருந்து மேலெழுந்தபோது அதில் விளைந்து வந்தவர் தோழர் முத்துராஜ். ஆலைத் தொழிலாளியாக பல உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஆலையில் பணியாற்றி, தொழிற்சங்கப் பணிகளை பார்த்துக் கொண்டே வீதிகளில் அரசியல் பணியை இமைசோராமல் பார்க்கக் கூடியவர். ஆலையில் இருந்து ஓய்வுபெற்ற பின், கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளராக பணியாற்றினார்.
எனது கல்லூரிக் காலத்தில் என்னை வசீகத்த தலைவர்களில் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியில் நான் இணைந்தபோது எனது கிளையின் செயலாளர். பயிற்சி தரவும் பண்பு பாராட்டவும் அவருக்கு இணைகண்டதில்லை. வழிகாட்டுவதும் வளர்த்தெடுப்பதும் எப்படி என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் எங்களின் அசைக்க முடியா பேருறுதி தோழர் முத்துராஜ்.
அவரின் நினைவும் புகழும் பங்களிப்பும் நீண்டு நிலைக்கும்.
செங்கொடி ஏந்தி வணங்குகிறேன்.
The post ”வல்லான் வகுத்ததை முறித்த வரலாறு” தோழர் முத்துராஜு க்கு புகழஞ்சலி செலுத்திய சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ‘’நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>’’நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கியது. சில நிமிடங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்தார். அவர் வந்து உரிய இடத்தில் நின்றதும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அவையிலிருந்த எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. ஏனென்றால் சபாநாயகரோ, செக்கரட்டிரி ஜென்ரலோ அவையில் இல்லை. அவர்கள் சரியாக 11 மணிக்கு இருக்கைக்கு வருவார்கள். அதன் பின்னர் தான் அவை நடவடிக்கை துவங்க வேண்டும். ஆனால், மோடி வந்ததும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விட்டது. இடையில் அதனை நிறுத்த முடியாது. எனவே முழுமையாக இசைக்கப்பட்ட பின்னர் சபாநாயகரும், செக்கரட்டரி ஜெனரலும் தனது இருக்கைக்கு வந்தார்கள். பின்னர் மீண்டும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது இதுவே முதல் முறை. அவையின் மாண்பு கருதி இந்த பிரச்சனையை எதிர்கட்சிகள் மிக பக்குவமாக கையாண்டனர். இந்த தவறு குறித்து விசாரிக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
மோடி மைய ஆட்சியில் அவர் தான் அடிப்படையே தவிர வேறு எந்த விதிகளும், மரபுகளும் முக்கியமல்ல என்ற கருத்தோட்டத்தின் வெளிப்பாடே இந்த செயல். அதனால், தான் குடியரசு தலைவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவதையும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்படுவதையும் இந்த நாடு பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நிகழ்வென்றால் கடைசி நிகழ்வு இன்னும் மோசமாக நடந்து முடிந்தது.
21 ஆம் தேதி வியாழன் இரவு 10 மணிக்கு பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி பேச ஆரம்பித்தார் அப்போது எதிர் கட்சி எம்.பிக்கள் அதி பட்சம் பத்து பேர் அவையில் இருந்திருப்போம். திருமிகு கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராச்சாமி, மற்றும் நான் , கேரளாவைச் சேர்ந்த திரு. பென்னி. இது தவிர வட இந்திய எம்.பிக்கள் டேனிஷ் அலி உள்ளிட்ட ஒரு சிலர் இருந்தார்கள். எதிர் கட்சி எம்.பிக்கள் பத்து பதினைந்து பேர் தான் இருந்தீர்களா? மற்றவர்கள் ஏன் இல்லை என்ற கேள்வி எழலாம். பாஜக-வின் வெளிப்படையற்ற நிர்வாக முறையே இதற்கு காரணம்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தான் முடிவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் 21 ஆம் தேதி வியாழன் அன்று மக்களவையில் சந்திராயன்-3 வெற்றி பற்றி விவாத நிகழ்வாக நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டது. பகலில் விவாதம் நடைபெற்றது வழக்கம் போல மோடியை புகழ்ந்தால் தாராளமாக பேசலாம். விமர்சித்தால் உங்களின் நேரம் தானாக சுருக்கப்படும்.
நான் சந்திராயன் வெற்றி பற்றி பேசும் பொழுது. நாலரை நிமிடத்தில் மணியடிக்கப்பட்டது. அதற்கு ஒரு உதாரணம். அவை வழக்கம் போல் ஆறு மணிக்கு முடியும் என்று தான் விவாதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் பின்னர் நடவடிக்கை நள்ளிரவு வரை நீண்டது. மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதம் நடைபெற்று வந்தது. அந்த அவையில் மசோதா நிறை வேற்றப்பட்டு அதன் பின்னர் மக்களவையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்ட பின் அவை நடவடிக்கை முடிவுற வேண்டும். இயல்பாக 21 தேதி இரவு சுமார் 10 மணிக்கு மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் அதன் பின்னர் 22 ஆம் தேதி அந்த செய்தியை மக்களவையில் பதிவு செய்து பின்னர் நாட்டுப்பண் பாடப்பட்டு கூட்டத்தொடரை முடிப்பார்கள். அது தான் மரபு.
ஆனால் திடீரென நிகழ்சி நிரல் மாற்றமடைந்தது. அன்று இரவே கூட்டதொடரை முடிக்க தயாரானார்கள். அதனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறி வரும் வரை மக்களவையை நடத்த முடிவு செய்தார்கள். கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேர ஒதுக்கீட்டுப்படி அனைவரும் இரவு 7 மணிக்குள் பேசி முடித்தோம். ஆனால் அவையை நடத்த வேண்டும் என்பதற்காக அதன் பிறகு பலருக்கும் பேச வாய்ப்பளித்தனர். விவாதத்தின் குறுக்கீடு என்ற அடிப்படையில் அறிவியல் மற்றும் விண்வெளித்துறைக்கான தனிப்பொறுப்பு வகிக்கும் அமைச்சர் திரு. ஜிஜேந்தர் சிங் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் . ஆனால் மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு முடிய இன்னும் இரண்டு மணி நேரமாகும் என்று சொன்னார்கள். எனவே அமைச்சரின் பேச்சுக்குப்பின் மீண்டும் விவாதம் தொடர்ந்தது.
பொதுவாக காலையிலிருந்தே சந்திரயான் வெற்றியின் பாராட்டு என்ற பெயரில் பாஜக-வினர் புராணக் கட்டுக்கதைகளை அளவில்லாமல் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர். நான் நண்பகல் சுமார் 3.30 க்கு பேசினேன். அப்பொழுதே நாடாளுமன்றம் கோயில் மடங்களில் நடைபெறும் கதாகாலட்சியம் போல் மாறிவிட்டதை சுட்டிக்காட்டி உரையாற்றினேன். நேரம் செல்ல செல்ல ஆளுங்கட்சியினரின் உரை மிக மோசமடைந்தபடி இருந்தது. சந்திரயானின் வெற்றியை புராணக்கதைகளோடு இணைத்து மோடிக்கு புகழாரம் சூட்ட பெரும்பாடு பட்டனர். எதிர் கட்சிகளின் உரைகளுக்கு மோசமான எதிர்வினைகளை புரிந்து வந்தனர்.
இந்நிலையில் தான் பாஜகவின் ரமேஷ் பிதுரி இரவு சுமார் பத்து மணிக்கு பேசத் துவங்கினார். பொதுவாக அவர் எப்பொழுது பேசினாலும் எதிர்கட்சிகளை மிக மோசமாக, மட்டரகமாக பேசுவதே வழக்கமாக கொண்டவர். அன்றும் மோசமாக பேசினார். எதிர்கட்சி வரிசையில் இருந்தவர்களை பார்த்து பயங்கரவாதிகள் என்றார். நாங்கள் அனைவரும் எழுந்து எங்கள் ஆட்சேபனையை தெரிவித்து குரல் எழுப்பினோம். அப்பொழுது இன்னும் மோசமாக பேச ஆரம்பித்தார். திரு டேனிஸ் அலியைப் பார்த்து வசை பொழிந்தார். அவர் என்ன சொல்கிறார் என்று எங்களுக்கு முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால் அவரின் வசைகேட்டு டேனிஸ் அலி துடித்துப் போனார். அவையில் இவ்வளவு அநாகரீகமாக பேசுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று ஆளுங்கட்சியினரைப் பார்த்து பெருங்குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் வலிமையான எதிர்ப்பை தெரிவித்தோம்.
நான் தான் அவர் அருகில் இருந்தேன். அவரது உடல் நடுங்கியது என்றே சொல்ல வேண்டும். அவர் ஏன் அவ்வளவு பதட்டமாகி குரல் கொடுக்கிறார் என்று எங்களால் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. நான் அவரை தோள்தொட்டு சமாதான படுத்த முயற்சி செய்தேன். சிறிது நேரத்தில் முன்வரிசையில் இருந்த திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் எங்கள் வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த முயற்சித்தார். டேனிஸ் அலி தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதில் உறுதியுடன் இருந்தார். நாங்கள் ஒரு பக்கம் அவரை சமாதானப்படுத்தவும் மறுபக்கம் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து குரல் எழுப்பியப் படியும் இருந்தோம். இந்த நேரத்தில் ஆளுங்கட்சி வரிசையில் இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் எங்களை நோக்கி எதிர்கட்சி வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த ஓரிரு வார்த்தையை சொன்னார். இவர் தான் டில்லி தேர்தல் கலவரத்தின் பொது “ “கோலி மாரோ” அதாவது எங்கள் எதிரிகளை சுட்டுத்தள்ளுவோம் என்று பேசியவர்.
அதாவது ரமேஷ் பிதுரி வகை பேச்சுகளை அதைவிட மோசமாக பேசியவர். பேசும் முன் இணை அமைச்சராக இருந்தவர் பேசிய பின்னர் கேபினட் அமைச்சரானார். இவர் தான் சமாதானம் பேச வந்தவர். அவரது குரலுக்கு எந்த மதிப்பும் தர நாங்கள் தயாராக இல்லை. வந்தவர் அதே வேகத்தில் திரும்பிப் போய்விட்டார். அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. நாங்கள் 10 பேர் தான் இருந்தோம் ஆனாலும் அவையில் பெரும் போராட்டத்தை டேனிஸ் அலிக்கு ஆதரவாக நடத்திக்கொண்டிருந்தோம். இறுதியாக அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து வருத்தம் தெரிவித்தார். அதன் பின்னரே நாங்கள் அவை நடவடிக்கையை அனுமதித்து இருக்கையில் அமர்ந்தோம். அதன் தொடர்சியாக கூட ரமேஷ் பிதுரி குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவை இரவு சுமார் 11.30 க்கு முடிவுற்றது.
மறு நாள் காலை தான் ரமேஷ் பிதுரி பேசியதன் முழு அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எழுத முடியாத அநாகரீகத்தின் உச்சம். எனவே, அவற்றை இப்பொழுது குறிப்பிடவில்லை. டேனிஸ் அலியின் உடல் ஏன் அவ்வளவு நடுங்கியது? ஏன் அவ்வளவு கொந்தளித்துப் பேசினார் என்பதை அர்த்தம் தெரிந்த பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது. இது பாஜக ஊட்டி வளர்க்கும் வெறுப்பு அரசியலின் விளைச்சலாகும். பாசிசத்தின் அடிப்படை குணம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருப்பது. பிரதமர் துவங்கி எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறுப்பையும், நஞ்சையும் உமிழ்ந்துக் கொண்டே இருக்கின்றனர். 17 ஆவது நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி எம்.பி-களைப்பார்த்து தீவிரவாதிகள், பாகிஸ்த்தான் கைகூலிகள், தேச துரோகிகள் என்று எண்ணற்ற முறை சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றின் தொடர்ச்சி மற்றும் உச்சம் தான் ரமேஷ் பிதுரி பேசியது.
சபாநாயகர் உறுதியான நடவடிக்கையாக எடுக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் டேனிஸ் அலியின் கரங்களை இறுகப் பற்றி நிற்போம். ரமேஷ் பிதுரிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக, வெறுப்பை உமிழும் பாசிசத்திற்கு எதிராக மனித மாண்புகளை உயர்த்திப்பிடிப்போம்.
இந்தியா தனது சகோதரத்துவத்தை அடிப்படைவாத கும்பலிடம் ஒரு போதும் இழக்காது.’’
சு.வெங்கடேசன் எம்.பி., முகநூல்
The post ‘’நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே!
உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்!

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது.
G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;
1) Short title, extent and commencement –
i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.
ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.
iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.
தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார்.
முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.
“அலுவல் மொழி விதி 1 (ii) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.
The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post “தலித் மக்கள் மீது தாக்குதல் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!” சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>சேதமடைந்த சொத்துக்களுக்கு உரிய நிவாரனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட செல்வகுமார் (32), மணிமுத்து (32), குமார் (39), பழனிக்குமார் (35) ஆகியோர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை சி பி எம் மாவட்ட செயலாளர் மா. கனேசன், தீ.ஒ. முன்னனி மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர்கள் செ.முத்துராணி (புறநகர்) ம.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம், மாநகர் துணைச் செயலாளர் ரமேஷ்கண்ணா, சரவணன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பபினர் எஸ்.மாயாண்டி, கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன ஆகியோருடன் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினேன்” என்று கூறியுள்ளார்.
The post “தலித் மக்கள் மீது தாக்குதல் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!” சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ’’புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது..?” சு.வெங்கடேசன் எம் பி., ’லைவ்’ ரிப்போர்ட் first appeared on Madras Murasu.
]]>’திருவாடுதுறை ஆதினம் செங்கோல், முதலில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது. தேவாரம் ஓதப்பட்டது. தமிழ்தான் முதலில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது’ என்று ஆளுநர் தமிழிசை அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது என்றும் அங்கு என்னென்ன படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ள என்பதை வெளியிட்டு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில், சு.வெங்கடேசன் எம்.பி.,கூறியுள்ளதாவது:
நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன். ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்கவேண்டிய ஓர் இடம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக்
காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளதன் மூலம் இவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்க உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? எங்கும் சமஸ்கிருத எழுத்துக்களாலும் புராண காட்சிகளாலும் நிரம்பியுள்ளது புதிய நாடாளுமன்றக் கட்டடம்.

கட்டடத்தின் நடுநாயகமாக சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் மிகப்பிரமாண்டமாக விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வார்ப்புக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேருமலையை மத்தாகவும் ஆதிசேஷனைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் பாற்கடலைக் கடையும் காட்சி பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் ஒரு பேரவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் யாரைச் சுட்ட நினைக்கிறார்கள் இவர்கள்?
உண்மையில் அவையின் மையப்பகுதியில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டியது பிரிட்டீஷ்காரர்களுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டக் காட்சிகளாகும். அப்போராட்டத்தின் விளைவாக விடுதலைபெற்ற இந்தியர்கள், தாங்களே உருவாக்கிக்கொண்ட மகத்தான அரசமைப்புச் சட்டமே இந்த அவையையும் இந்த தேசத்தையும் வழிநடத்துகிறது. ஆனால் இதனைக் காட்சிப்படுத்தினால் தங்களின் துரோக வரலாற்றை நாட்டு மக்களுக்கு நினைவூட்டுவது போல அமைந்துவிடும் என்பதற்காக பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, அரசமைப்புச் சட்ட நூல் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள கலைவடிவங்கள். அசலான அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால் போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்களை மறுஉருவாக்கம் செய்து காட்சிப்படுத்தி உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடிப்படையில் நந்தலால் போஸ் ஓவியங்கள் ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் விதமாக, இந்தியத் தொன்மையையும் வரலாற்றையும் பண்பாட்டையும் முன்னிறுத்தும் முக்கியமான கூறுகளைக்கொண்டுள்ளன.
அந்த ஓவியங்கள் சிந்துவெளிப் பண்பாடு, பண்டைய பல்கலைக்கழகங்கள், முகலாய கட்டக்கலை, சுதந்திரப் போராட்ட வரலாறு, தேச விடுதலைக்காகவும் மதகலவரங்களுக்கு எதிராகவும் அண்ணல் காந்தி எனப் பன்மைத்தன்மை மிக்கதாகவும் சான்றதாரங்களின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. ஆனால் இவர்கள் உருவாக்கியுள்ள இந்த 16 கலைவடிவங்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன.

முதலில் இதில் சிந்துவெளிப் பண்பாட்டிற்கு இடம் இல்லை. இந்தியத் துணைக்கண்டப் பண்பாடு சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு நேர்மாறாக வேதப் பண்பாட்டிலிருந்து தொடங்குகிறார்கள். இங்கே இதிகாசங்கள் வரலாறாக மாற்றப்படுகின்றன. நந்தலால் போஸ் வரைந்ததில் இதிகாசங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தெளிவாக காவியக்காலம் என்று கூறப்பட்டிருக்கும். வரலாறு என்று சொல்லப்பட்டிருக்காது.
இங்கு இதிகாசம், வரலாறு என்று கூறப்படுகிறது. இதிகாசத்தை வரலாறாகத் திரிக்கும் போக்கிற்கு இது நேரடி அங்கீகாரம் வழங்குவதாக உள்ளது.
வேதங்களில் சபா, சமிதி, சன்சாத் போன்ற சொல்லாடல்களோடு மனித மாண்பினை இழிவுப்படுத்தும் சொல்லாடல்களும் குறிப்பாக மனிதர்களைச் சாதி, வர்ண ரீதியாகப் பிளவுபடுத்தும் சொல்லாடல்களும் காணப்படுகின்றன.

சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் அரசியல் அமைப்பிற்கு வர்ணங்கள் முற்றிலும் எதிரானவை. அவற்றினை மேற்கோளாகக் கட்டுவதும் தற்கால அரசமைப்பு என்பது அதன் நீட்சி என்று கூறுவதும் அரசமைப்பின் மாண்பையும் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் முயற்சி.
சனாதனம் இந்த மண்ணில் உருவாக்கிய எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான பிரகடனமே அரசமைப்புச் சட்டம். சனநாயகம் என்பது முற்றிலும் நவீனகாலச் சிந்தனையாகும். மன்னராட்சியிலிருந்து தன்னைப் பிரித்து, அதனை எதிர்த்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கொண்டு வெளிவந்த செயல்பாடாகும்.

பண்டைய காலத்தில் காணப்பட்ட சபை, சங்கம் முதலியவற்றை சனநாயகம் என்று சொல்வது மீண்டும் பழமைவாத தன்மைக்குத் திரும்புவதாகும். உத்திரமேரூர், உக்கல் கல்வெட்டுகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் நடைபெற்ற விசயங்கள் ஆகும். அவற்றை ஒட்டுமொத்த மக்களுக்கானதாய் பார்க்க முடியாது. அர்த்தசாஸ்திரம் உள்ளிட்ட இலக்கியங்கள் அரசர்களை மையப்படுத்தியவை.
மக்களுக்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கும் இருந்ததில்லை.
இந்த 16 கலைவடிவங்கள் சனநாயகத்திற்கான வேர்கள் பண்டைய இந்தியாவில் உள்ளன என்பதை எடுத்துரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அதன்வழி பண்டைய காலத்தில் சனநாயகம் நிலவியதாகக் கூறப்படுகிறது. இத்துடன் இந்தியா தனது பண்டைய ஆட்சிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சனநாயகம் என்னும் நவீனகாலச் சிந்தனை அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளைக் கொண்டது. சனநாயகம் அரசாட்சியை எதிர்த்துப் பெற்றதாகும்.
இந்தியாவின் வரலாறு, இந்தியாவின் ஆட்சி முறை என்பவை மௌரியர், குப்தர், முகலாயர், மராத்தியர், கலிங்கர், ஆங்கிலேயர், பல்வேறு பழங்குடிகள் ஆகியோரை உள்ளிட்ட எல்லோருடைய கூறுகளையும் உள்ளடக்கிய அதிலிருந்து பரிணமித்த ஓர் ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது. அவை இந்த 16 கலைவடிவங்களில் இல்லை.

பன்மைத்துவங்கொண்ட நந்தலால்போஸ்ஸின் படைப்பினை அழித்து, அதற்கு மாறாக பண்டைய வேத காலத்தில் சனநாயகம் நிலவியது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியுள்ளனர். இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவதும் நேரடியாக இந்துத்துவா அரசியல் கோட்பாட்டை நிறுவும் அப்பட்டமான முயற்சியாகும்.
அவர்களின் கட்சி அலுவலகத்தில் நிறுவிக்கொள்ள வேண்டியனவற்றை நாட்டின் பேரவையான நாடாளுமன்றத்தில் நிறுவியதென்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரான செயல். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் இந்துத்துவா கோட்பாடுகளால் இந்த அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாவர்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது.

The post ’’புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது..?” சு.வெங்கடேசன் எம் பி., ’லைவ்’ ரிப்போர்ட் first appeared on Madras Murasu.
]]>