acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 25954905 மற்றும் 044 – 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பயிற்சித் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.
The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ ரயில்வேயில் ஜுனியர் என்ஜினியர் 7951 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7951 இடங்களுக்கு ஆள் சேர்க்கை அறிவிப்பினை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிக்கம்யூனிக்கேஷன், கெமிக்கல், மெட்டுராலஜி ஆகிய படிப்புகளை படித்து இருக்க வேண்டும். அதாவது, B.Sc., Chemistry and Physics, Degree or its equivalent in Chemical Technology , Degree or its equivalent in Metallurgical Engineering மற்றும் Mechanical and Allied Engineering, Electrical and Allied Engineering, Electronics and Allied Engineering, Civil and Allied Engineering (Three years Diploma in Engineering or Bachelor’s degree in Engineering /Technology). அதாவது, இந்த வேலைக்கு பட்டதாரிகளும் டிப்ளமோ பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிகளின் படி, உச்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
Candidates must have a Three Years Diploma or BE/B.Tech in the relevant Engineering Stream to be eligible for Junior Engineer (JE), Chemical & Metallurgical Assistant (CMA), Junior Engineer (IT), and Depot Material Superintendent (DMS) positions. Final-year students are not eligible to apply.

RRB Junior Engineer (JE), Depot Material Superintendent (DMS) , Chemical & Metallurgical Assistant (CMA) என்ற பணிகளில் 7934 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், Metallurgical Supervisor / Researcher, Chemical Supervisor / Researcher என்ற பணிக்கு தேர்வாகும் 17 பேர், மெற்குவங்காளத்தில் உள்ள கொரக்பூர் மண்டலத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
வேலைக்கான எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தேர்வில் Mathematics 30 கேள்விகள், General Intelligence & Reasoning 25 கேள்விகள், General Awareness 15 கேள்விகள், General Science 30 கேள்விகள் என்று மொத்தம் 100 கேள்விகள் கேட்க்கப்படும். 90 நிமிடம் தேர்வு நடைபெறும். கேள்வி ஒன்றுக்கு, நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இதில், General Awareness 15 கேள்விகள், Physics & Chemistry 15 கேள்விகள், Computer Application Basics 10 கேள்விகள், Environment & Pollution (Basics) 10 கேள்விகள், Technical Ability 100 கேள்விகள் என்று மொத்தம் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். மொத்தம் இரண்டு மணி நேரம் தேர்வு நடைபெறும். இந்த போட்டித்தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் தரப்படும். குறிக்கப்பட்ட விடை தவறு என்றால் மூன்றில் ஒரு பங்கு (Wrong responses will decrease the 1/3rd mark) குறைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ரு.250.

இத்தேர்வுக்கு ஜுலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை https://www.rrbchennai.gov.in/ வழியாக தமிழ்நாட்டு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான வேலைவாய்ப்பு அறிவிக்கையும் இந்த இணையத்தில் காணலாம். இவ்வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர் அதற்கான சான்றுகளை பெற உடனே விண்ணப்பித்து விடுங்கள். அப்ளிக்கேஷ்சன் போட இந்த சான்றிதழ் ரொம்ப அவசியம்.
வேலைவாய்ப்பு குறித்த ஆங்கில அறிவிக்கையை முழுமையாக படிக்க இங்கே CEN_03_2024_JE_English கிளிக் செய்யவும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் விண்ணப்பம் போடுவதற்கு முன்னர், இந்த வேலைவாய்பு அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ’’ கல்வி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம், விண்ணப்பத்தை திருத்தும் முறை, தேவையான சான்றுகள், போட்டோ அப்லோடு செய்வது, தேர்வின் நிலைகள், மார்க் போடும் முறைகள், வயது சலுகைகள்’’ என அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து தெரிந்து கொண்டு, அதன்பிறகே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பாடத்திட்டத்தை முழுமையாக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு படியுங்கள்.
இந்த தேர்வுக்கான அனைத்து பாடங்களின் விடியோக்கள் www.youtube.com/@MadrasMurasu என்ற யூடியூப் சேனலில் உள்ளது. அதை பார்த்து குறிப்பெடுத்து ரயில்வே வேலையில் எளிதில் சேரமுடியும். எனவே, ரயில்வே தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள Mathematics , General Intelligence & Reasoning , General Awareness , General Science வீடியோக்கள் மெட்ராஸ்முரசு யூடியூப் சேனலில் உள்ளது. உடனே www.youtube.com/@MadrasMurasu சப்ஸ்கிரைப் செய்து அரசு வேலையில் சேருங்கள்.
The post ’’ ரயில்வேயில் ஜுனியர் என்ஜினியர் 7951 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post தெற்கு ரயில்வேயில் 2,860 அப்ரண்டீஸ் வேலை உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ல் -1357 பணியிடங்கள், கோல்டன் ராக் மத்திய பணிமனையில் – 679, சிக்னல் அண்டு டெலிகாம் பணிமனையில் 824 இடங்கள் என்று மொத்தம் 2,860 பணியிடங்கள் மண்டல வாரியாக நிரப்பபடுகின்றன. ஃபிட்டர், டர்னர், வெல்டர், வெல்டர் (ஜி & இ), மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், கார்பெண்டர், வயர்மேன், பிளம்பர், டீசல் மெக்கானிக், COPA உள்ளிட்ட பணிகளில் அப்ரெண்டீஸ் டிரெயினிங் அளிக்கப்படும்.
10 ஆம் வகுப்பு, துறை சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ ஆகிய படிப்புகளை படித்து இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் வயது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை தரப்படும். விண்ணப்பிக்க வரும் 28.02.2024 கடைசி நாளாகும். www.sr.indianrailways.gov.in/ என்ற இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக உடனே விண்ணப்பிக்கலாம்.
The post தெற்கு ரயில்வேயில் 2,860 அப்ரண்டீஸ் வேலை உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’போட்டித் தேர்வில் இனி ஈசியா பாஸ் ஆகலாம்..!’’ தனியார் கோச்சிங் செண்டர்களுக்கு செல்ல வேண்டம் first appeared on Madras Murasu.
]]>இந்த வினாக்கள் அனைத்தும் 21 பாடங்களில் 293 நுண் தலைப்புகளில் (Micro topics) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் உடனடியாக பயிற்சி செய்யும் விதமாக Study mode, Practice mode, Mock test ஆகிய மூன்று விதங்களில் இந்த வினாக்களை பயிற்சி செய்து தங்களது தேர்வு தயாரிப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். Practice mode, Mock test ஆகியவற்றில் பிறர் போட்டித் தேர்வு மாணவர்களுடன் தங்களது கற்றல் நிலை எந்த நிலையில் உள்ளது என்பதை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாணவரும் தங்களது கற்றல் முன்னேற்றத்தை பார்த்துக் கொள்வதற்கான Progress Report வழங்கப்பட்டுள்ளது.
எந்த மாணவர் எந்தப் பாடம் படித்துக் கொண்டு இருந்தாலும் அந்தப் பாடத்தில் இருக்கும் வினாக்களைத் தேடி எடுத்து பயிற்சி செய்வதற்கான சிறப்பான தேடுதல் வசதி (Searching ) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மின்னணு கற்றல் மேலாண்மை முறை அனைத்து பொது நூலக வாசகர்களுக்கும் விரிவு செய்யப்படுகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள போட்டித் தேர்வு மாணவர்கள் அணுக வேண்டிய இணையதளம் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்வதற்காக இணைப்புகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன https://elms.annacentenarylibrary.org/?redirect=%2Fusers%2Fdashboard . இந்த மின்னணு கற்றல் மேலாண்மை முறையைப் பயன்படுத்தி எவ்வாறு போட்டித் தேர்வு தயாரிப்பில் ஈடுபடுவது என்பதற்கான வீடியோ விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இணையதளத்தில் பதிவு செய்து கொண்ட பிறகு மாணவர்கள் தங்களது கைபேசி செயலி வழியாகவோ அல்லது கணினி வழியாகவோ இந்த மின்னணு கற்றல் மேலாண்மை முறையை முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொது நூலக இயக்ககம் சார்பில் வழங்கப்படும் இந்த வசதியை நூலகத்தைப் பயன்படுத்தும் அனைத்து போட்டித் தேர்வு மாணவர்களையும் சென்றடையும் வகையில் ஒவ்வொரு போட்டி தேர்வு மாணவர் படிக்கும் மேசைகளிலும் இடம்பெறும் வகையில் இணையதள இணைப்பு மற்றும் இணையதளத்தை அணுகுவதற்கான க்யூ ஆர் கோடு ஆகியவை உள்ள கையேடுகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றன.
இந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், மற்றும் ஊர்ப் புற நூலகங்களின் தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வு மாணவர்கள் பிரிவின் ஒவ்வொரு மேசையிலும் இந்த அறிவிப்பு இடம் பெற்று இருக்க வேண்டும்.
இந்த அறிவிப்பினை அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களும் நூலகர்களுக்கு அனுப்பி வைத்து மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மின்னணு கற்றல் மேலாண்மை முறை குறித்து மாணவர்கள் அளிக்கும் கருத்துக்களைப் பொது நூலக இயக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். இது இந்த வசதியை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். இத்தகவலை பொது நூலக இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
The post ’’போட்டித் தேர்வில் இனி ஈசியா பாஸ் ஆகலாம்..!’’ தனியார் கோச்சிங் செண்டர்களுக்கு செல்ல வேண்டம் first appeared on Madras Murasu.
]]>