acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’தோனி விரும்பிச் சாப்பிட்ட உணவு..!’’ கேரள சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளை first appeared on Madras Murasu.
]]>ஐபிஎல் 2023 சாம்பியன் கோப்பை போட்டி முடிவடைந்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை, நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிமானோர் தோனியை பற்றியே பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில், ‘ரெஸ்டாரென்ட் செப் பிள்ளை’ என்ற உணவகத்தை கேரளாவில் நடத்தி வரும் சுரேஷ் பிள்ளை தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி-யை சந்தித்த பசுமையான தருணங்களை எழுதியுள்ளார். அந்தப் பதிவு இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதன் விபரம்:
‘’ஐபிஎல் 2023 இறுதி ஆட்டத்துக்குப் பிறகு முழு உலகமும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனையாளரான தோனியைக் கொண்டாடும் போது, 5 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உணவு பரிமாறும் பாக்கியம் எனக்கு கிடைத்ததைப் பிரமிப்போடு நினைத்துப் பார்க்கிறேன். அக்டோபர் 31, 2018. இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

நான் பணிபுரிந்து வந்த ஹோட்டலில் தான் வீரர்கள் தங்கியிருந்தனர். பேருந்திலிருந்து வீரர்கள் இறங்கியபோது எனது கண்கள் அவரைத் தான் தேடின. தனக்கே உரித்தான புன்னகையுடன் எங்களைக் கடந்து தனது அறைக்குச் சென்றார் தோனி. தனது ஹீரோவைப் பார்த்த குழந்தை போல மாறியிருந்தேன் நான். தோனியைப் பார்த்த யாருக்குத்தான் அப்படி இருக்காது?
ஓய்வுக்குப் பிறகு வீரர்கள் இரவு 7 மணி முதல் தங்களுக்கான உணவு ஆர்டர்களை அளித்தனர். பெரும்பாலும் கடல்சார் உணவுகளைக் கேட்டிருந்தார்கள். இரவு 9.30 மணிக்குள் கிட்டத்தட்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஆனால் நான் காத்திருந்த அழைப்பு 10 மணிக்கு வந்தது. தோனி அறையில் எனக்காகக் காத்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது.
ஒரு கணம் உறைந்து போனேன். தொலைக்காட்சியில் அவரைப் பார்த்து சந்தோஷப்படும் என்னைத் தனது அறைக்கு அழைத்தார் தோனி. லிஃப்ட்டுக்குக் கூடக் காத்திராமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு மூன்றாவது மாடியில் இருந்த அவரது அறைக்கு ஓடினேன். என்னை அமைதிப்படுத்திக் கொள்ள ஒரு கணம் எடுத்துக்கொண்ட பிறகு, கதவைத் தட்டினேன்.

ஹாய், எப்படி இருக்கிறீர்கள், சாப்பிட என்ன இருக்கிறது என ஹிந்தி கலந்த தமிழில் கேட்டார். கடல் உணவு வகைகளை அவருக்கு விளக்கினேன். அப்போது, என்னால் கடல் உணவு சாப்பிட முடியாது. எனக்கு அதில் ஒவ்வாமை உண்டு. சிக்கன் குழம்பும் சாதமும் கிடைக்குமா? எனக்குத் தொண்டை வலி இருப்பதால் காரமான ரசம் வேண்டும் என்றார். பூண்டு ரசம் கிடைக்குமா எனத் தமிழில் கேட்டார்.
சுமார் 20 நிமிடங்களில் அறை எண் 302-க்கு உணவுடன் திரும்பினேன். செட்டிநாடு சிக்கன், பாசுமதி அரிசி, அப்பளம், ரசம் ஆகியவை பரிமாறப்பட்டன. மறுநாள் காலை, ஜிம்முக்குச் செல்லும் வழியில், என்னைப் பார்த்து இரவு உணவு பிடித்திருந்ததாகக் கூறினார். நான் விண்வெளியில் இருப்பதைப் போல உணர்ந்தேன். அந்த உணர்வை விவரிக்கவே முடியாது.
நான்கு நாள்கள் தான் என்றாலும், நான் பெரிதும் மதிக்கும் என்னுடைய நாயகனுக்கு உணவு பரிமாறவும் அதன்மூலம் அவரை மகிழ்ச்சியடையச் செய்யவும் முடிந்தது. இது என்னுடைய சமையல் வாழ்க்கையில் என்றென்றைக்குமான சிறப்பம்சமாக இருக்கும். நேற்று இன்று மட்டுமல்ல என்றும் எங்களுடைய தல நீங்கள். உங்களுக்கு வாழ்த்துகள். மீண்டும் உங்களுக்கு உணவு பரிமாறக் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தல தோனியை விரும்பாதவர்கள் யாருமுண்டோ..!
The post ’’தோனி விரும்பிச் சாப்பிட்ட உணவு..!’’ கேரள சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளை first appeared on Madras Murasu.
]]>The post “நாடே கொண்டாடும் தோனி..!” நியூசிலாந்தில் கான்வே first appeared on Madras Murasu.
]]>குஜராத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி 5-வது முறையாக்க் கோப்பையைப் பெற்றது. ஆட்டநாயகன் விருதை கான்வே வென்றார். இதனையடுத்து சொந்த ஊருக்குத் திரும்பிய கான்வே சென்ஸ் மார்னிங்கிடம் தோனி மற்றும் சிஎஸ்கே அணி குறித்துப் பேசினார்.
ரசிகர்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள ஆதரவு குறித்துப் பேசியுள்ள அவர், “இந்தியாவில் தோனிக்கு உள்ள ஆதரவு நம்ப முடியாதது. அது வேறு மாதிரியான உலகம். அவருக்காக ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரசிகர்கள் வெவ்வேறு மைதானங்களுக்குப் பயணிக்கின்றனர். இதனால் வெளியே ஆட்டம் நடந்தாலும் எங்களுக்கு சேப்பாக்கத்தில் நடப்பது போலவே இருந்தது. வீரர்களுக்கு மத்தியிலும் அவர்மீது பெரும் மரியாதை இருக்கிறது. மக்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள வரவேற்பைப் பார்க்கும்போது அவர் ஹோட்டலுக்கு வெளியே செல்வது அவ்வளவு எளிதானதல்ல எனத் தோன்றுகிறது” என்றார்.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் குறித்து கான்வே பேசுகையில், “அணிக்குள் அவர் நல்ல பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். தோனி மற்றும் அணியின் உரிமையாளர்களுடன் அவருக்கு நல்ல உறவு உள்ளது. அவருடைய ஒத்துழைப்பு என்பது தனி நபர் மற்றும் குழுவாக எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் கூறினார்.
The post “நாடே கொண்டாடும் தோனி..!” நியூசிலாந்தில் கான்வே first appeared on Madras Murasu.
]]>The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.
]]>The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.
]]>The post தோனி ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றுத்தருவரா? first appeared on Madras Murasu.
]]>2022 ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.”அடுத்த ஆண்டு கடினமாக உழைத்து மீண்டு வருவோம்” என்று தோனி கூறினார். சொல்லி வைத்தது போலவே இந்த ஆண்டு குஜராத்தை முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. 14 பருவங்களில் 10 முறை இறுதிச்சுற்றுக்கு சென்றது என்பது உண்மையில் அசாத்திய சாதனை!
இந்த வருடம் தோல்வியுடன்தான் ஆரம்பித்தது சிஎஸ்கே. பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே தலையைக் காட்டினார். மொயீன் அலி, ஜடேஜா, ராயுடு போன்றவர்கள் பேட்டிங்கில் கைகொடுக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மர்ம சுழலர் தீக்ஷனா இந்தப் பருவம் முழுக்கவே ஃபார்ம் இல்லாமல் தடுமாறினார்.
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேகர் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். பதிரனா, தேஷ்பாண்டே போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டே விளையாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் தோனி. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தோனி சிஎஸ்கேவை இறுதிச்சுற்றுக்கு எப்படி அழைத்துச் சென்றார்?
இந்தப் பருவத்தில் முதல் சில ஆட்டங்களில் அணித் தேர்வில் சில பரீட்சார்த்த முயற்சிகளை தோனி மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு கடைசி 9 ஆட்டங்களில் அவர் அணியில் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிக்கு காரணம் அணி வீரர்கள் மீது அவர் வைக்கும் முழு நம்பிக்கை. உதாரணமாக தீபக் சஹாரை எடுத்துக் கொள்வோம். முதல் நான்கு ஆட்டங்களில் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவருடைய எகானமி ரேட் 10.38. ஆனாலும் தோனி அவரைக் கைவிடவில்லை.
அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் ஓவருக்கு 7.21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் சஹார். வேறு எந்தவொரு அணியாக இருந்தாலும் நான்கு ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காதவரை அணியில் வைத்திருக்காது. அம்பதி ராயுடுவும் தீக்ஷனாவும் ஃபார்மில் இல்லாத போதும் தொடர்ந்து வாய்ப்பளித்தார் தோனி. குஜராத்துக்கு எதிரான குவாலிஃபையரில் இருவருமே அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்கள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் ஆட்டத்தை நிதானமாக அணுகுவது தோனியின் இன்னொரு வெற்றி ரகசியம். லீக் சுற்றில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது தோனி விளையாடிய விதம் ஒரு நல்ல உதாரணம். கடைசி ஐந்து ஓவர்களில் கூட தாறுமாறாக ஆட முற்படாமல் யாரைக் குறிவைத்து தாக்கவேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடினார் அவர். அந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெறமுடியாவிட்டாலும் தோனியின் வியூகமும் விவேகமும் எதிரணி ரசிகர்களையும் கவர்ந்தது.
குஜராத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தையோ எடுத்துக்கொள்வோம். கான்வே ஆரம்பம் முதலே சரியான டைமிங் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். வேறொரு கேப்டனாக இருந்திருந்தால் “ரிஸ்க் எடுத்து விளையாடு” என்று பேட்டருக்குத் தகவல் அனுப்பியிருப்பார். ஆனால் தோனி அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கான்வேவை அவர் போக்கில் விளையாடுவதற்கு அனுமதித்தார். சுழலுக்குச் சாதகமான ஆடுகளத்தில் கான்வேவின் அந்த 40 ரன்கள் எவ்வளவு முக்கியம் என்பது ஆட்டத்துக்குப் பிறகுதான் தெரிந்தது.
தோனியின் வெற்றி ரகசியங்களில் முக்கியமானது, அணி வீரர்கள் மீது அவர் செலுத்துகின்ற அக்கறை. குஜராத்துக்கு எதிராக குவாலிஃபையர் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சிஎஸ்கே சீருடையில் வந்திருந்தார் ராபின் உத்தப்பா. கேகேஆர், ராஜஸ்தான் போன்ற அணிகளில் விளையாடியிருந்தாலும் அவர் தன்னை ஒரு சிஎஸ்கே வீரராகவே இன்றும் உணர்கிறார். உத்தப்பா மட்டுமல்ல ஃபாப் டு ப்ளஸி தன்னுடைய சுயசரிதையில் தன் மகள் உடல் நலமில்லாமல் இருந்த சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படித் தனக்கு உறுதுணையாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்.
சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தோனி வீரர்களுக்கு கொடுக்கும் தெளிவான ரோல் டெஃபனிசன் (Role definition) என்கிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் ஃபிரெடி வைல்ட். இந்த ஆண்டில் ஸ்பின் ஹிட்டராக துபேவை அவர் பயன்படுத்திய விதம் ஒரு நல்ல உதாரணம். ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்டாக பதிரனாவை அவர் கையாண்ட விதம் உண்மையிலேயே தோனியின் மாஸ்டர்கிளாஸ்!
ஐபிஎல் போன்ற பரபரப்பான கிரிக்கெட் போட்டியில் ஒரு கேப்டன் சமயோஜிதமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நேற்றைய ஆட்டத்தில் பாண்டியா பேட்டிங் செய்தபோது லெக் சைடில் இருந்த ஜடேஜாவை பாயிண்ட் திசையில் நிற்கவைத்தார் தோனி. கைமேல் பலனாக அதே ஃபீல்டரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பாண்டியா. பதிரனா, போதிய நேரம் களத்தில் இல்லை என்பதால் அவர் பந்துவீச முடியாது என்று நடுவர் கூறியபோது, தோனி கையாண்ட தந்திரம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதுபோல ஐபிஎல்-லில் இறுதிச் சுற்றுக்கு செல்வது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பத்தாவது முறையாக! இன்னும் ஓர் ஆட்டம்தான் மீதமுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையைக் கையில் ஏந்துவாரா தோனி?
The post தோனி ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றுத்தருவரா? first appeared on Madras Murasu.
]]>